LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ககர உகர வருக்கம்

 

குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்
வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்
வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்
நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்
அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்
ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்
உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்
உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்
சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்
கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்
கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும் 
நாரை பெயரோடு மூல நாளும்
புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520
குன்றெனும் பெயரே வருண னாளும் 
சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521
குருவெனும் பெயரே குரவனு நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்
குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்
அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்
மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்
காடு மெனவே கருதுவர் புலவர். ....526
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்
தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்
புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்
நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532
குரலெனும் பெயரே வாசிக் கோவையும்
கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்
கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்
புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்
கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்
கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்
அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்
கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்
பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்
இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்
துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்
வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543
குயமெனும் பெயரே யிளமையு முலையுங்
கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்
தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்
கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்
கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு
மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்
பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557

 

குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்

உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511

 

குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்

வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512

 

கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்

வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513

 

கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்

நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514

 

குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்

அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515

 

குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்

ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516

 

குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்

உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517

 

குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518

 

குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்

உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்

சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்

கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519

 

குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்

கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும் 

நாரை பெயரோடு மூல நாளும்

புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520

 

குன்றெனும் பெயரே வருண னாளும் 

சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521

 

குருவெனும் பெயரே குரவனு நிறமும்

அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்

தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522

 

குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்

குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523

 

குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்

அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524

 

குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்

மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525

 

குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்

காடு மெனவே கருதுவர் புலவர். ....526

 

குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்

புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527

 

குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்

சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528

 

குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்

தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529

 

குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்

கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்

நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530

 

குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்

புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531

 

குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்

நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532

 

குரலெனும் பெயரே வாசிக் கோவையும்

கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்

கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்

புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533

 

குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்

கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534

 

குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்

குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்

கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535

 

குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்

ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536

 

குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்

அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537

 

குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்

கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538

 

குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539

 

குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்

பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540

 

குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்

இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541

 

கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்

துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542

 

குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்

வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543

 

குயமெனும் பெயரே யிளமையு முலையுங்

கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544

 

குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்

தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545

 

குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்

கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546

 

குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்

கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547

 

குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548

 

குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு

மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549

 

குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்

பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550

 

குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551

 

குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552

 

குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்

கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553

 

குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்

செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554

 

குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்

பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555

 

குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556

 

குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்

மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.