|
||||||||
ககர உகர வருக்கம் |
||||||||
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்
வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்
வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்
நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்
அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்
ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்
உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்
உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்
சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்
கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்
கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும்
நாரை பெயரோடு மூல நாளும்
புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520
குன்றெனும் பெயரே வருண னாளும்
சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521
குருவெனும் பெயரே குரவனு நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்
குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்
அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்
மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்
காடு மெனவே கருதுவர் புலவர். ....526
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்
தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்
புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்
நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532
குரலெனும் பெயரே வாசிக் கோவையும்
கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்
கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்
புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்
கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்
கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்
அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்
கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்
பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்
இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்
துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்
வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543
குயமெனும் பெயரே யிளமையு முலையுங்
கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்
தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்
கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்
கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு
மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்
பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும் உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும் வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும் வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும் நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும் அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும் ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும் உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும் உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும் சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும் கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும் கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும் நாரை பெயரோடு மூல நாளும் புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520
குன்றெனும் பெயரே வருண னாளும் சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521
குருவெனும் பெயரே குரவனு நிறமும் அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும் தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும் குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும் அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும் மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும் காடு மெனவே கருதுவர் புலவர். ....526
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும் புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும் சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும் தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும் கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும் நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன் புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும் நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532
குரலெனும் பெயரே வாசிக் கோவையும் கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும் கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும் புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங் கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும் குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங் கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும் ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும் அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன் கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும் பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும் இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும் துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும் வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543
குயமெனும் பெயரே யிளமையு முலையுங் கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந் தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங் கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும் கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும் பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும் கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும் செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும் பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும் மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|