-- தரவு --- கொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண் மின்செய்த சிறுமருங்குற் பேருந்தேவி விழிகுளிர்ப்பப் பொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள். -- தாழிசை -- முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட் பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே தேன்மறிக்கும் வெறித்தொங்கலறற் கூந்தற்றிருந் திழைகண் மான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே. பிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட் சிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதும்பரே. அதனால் -- சுரிதகம் -- மதுவிரி கோதை மடவரற் கம்ம புதுவிருந் துண்ண வுண்ண அதிசயம் விளைக்குநின் னற்புதக் கூத்தே. |
57 |
-- தரவு -- பேதைமீர் பேதைமீர் பூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும் காமன்னு புரந்தரனுங் கடவுளரும் புடைநெருங்க இருகோட்டுக் கிடைந்தவிடு கிடையவர்பல் லாண்டிசைப்ப ஒருகோட்டு மழகளிறு மிளங்கோவு முடன்போத அம்பொன்மணி மதிற்றில்லை நடராச னணிமறுகில் செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால் -- தாழிசை -- பாரித்த பேரண்டஞ் சிறுபண்டி கொளப்பெய்து வாரித்தண் புனற்றுஞ்சு மாலுக்கு மால்செய்வீர் வேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ பூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர். ........(1) சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய் நன்மாலைக் குழலியர்பா னள்ளிருளிற் செலவல்லீர் பன்மாத ருயிர்கொள்ளல் பழியன்றே பகைகொள்ளும் வின்மார னுயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர். ........(2) அங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா வையமிடும் மங்கையர்க ணலங்கவர்வான் பலிக்குழலு மாதவத்தீர் தங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே தலையன்பின் நங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர். -- ஈரடி அம்போதரங்கம் -- அருங்கலை கவர்ந்துநீ ரளிக்கப் பெற்றநும் இருங்கலை யினிதெமக்கென்ப ரோர்சிலர். நன்னிறங் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும் பொன்னிற மினிதெனப் புகல்வ ரோர்சிலர். -- நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் -- தேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர். ஏரினை நோக்கியே யெழுவர் சிற்சிலர். தாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர். மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர். -- முச்சீரோரடி அம்போதரங்கம் -- நலனழிந்து நிற்பார் சிலர். நாண்டுறந்து நிற்பார் சிலர். கலனழிந்து நிற்பார் சிலர். கண்கலுழ்ந்து நிற்பார் சிலர். -- இருசீர் ஓரடி அம்போத்ரங்கம் -- பாடு வார்சிலர். ஆடுவார்சிலர். பரவு வார்சிலர்.விரவு வார்சிலர். வாடு வார்சிலர்.ஓடு வார்சிலர். மகிழு வார்சிலர்.புகழு வார்சிலர். ஆங்கொருசார் -- சுரிதகம் -- முதிரா விளமுலை மழலையந் தீஞ்சொல் மங்கை மற்றிவ ணங்குலக் கொழுந்து கணங்குழை யவரொடும் வணங்கின ணிற்பச் சோர்ந்தது மேகலை நெகிழ்ந்தன தோள்வளை சாந்தமுங் கரிந்தது தரளமுந் தீந்தன இவ்வா றாயின ளிவளே செவ்விதின் ஆம்பற் பூவின் முல்லையு முகைத்தில இளையோள் சாலவு மம்ம முதியோள் போலுங் காம நோய்க்கே. |
58 |
-- தரவு -- தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும் பல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய அந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த இந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச் சூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப ஆடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய். -- தாழிசை -- முன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த வன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும் பொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்ததென்ன வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. ........(1) கடநாக மெட்டும்விடங் கானாக மோரெட்டும் தடநாக மவையெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும் உடனாக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும் அடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே. ........(2) வருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும் அருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும் கருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும் திருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே. ........(3) -- அராகம் -- கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல் எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. ........(1) உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும் மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய புலவரு மடிகளொர் புகலென முறையிட அலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை. ........(2). விசையிலே மிறைவியும் வெருவர விரசத அசலம தசைதர வடல்புரி தசமுக நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. ........(3)br> இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம துலைவற நடவிடு மொருவனும் வெருவர அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. ........(4) -- ஈரடி அம்போதரங்கம் -- அருவமு முருவமு மாகி நின்றுமவ் வருவமு முருவமு மகன்று நின்றனை. சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச் சொல்லையும் பொருளையுந் துறந்து நின்றனை. -- ஓரடி அம்போதரங்கம் -- அந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை. பொன்னலம் விழைந்தவர் பொருளு மாயினை. இன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயினை. மெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயினை. -- முச்சீரோரடி அம்போதரங்கம் -- முத்தொழிலின் வினைமுத னீ. மூவர்க்கு முழுமுத னீ. எத்தொழிலு மிறந்தோய் நீ.இறவாத தொழிலினை நீ. இருவிசும்பின் மேயோய் நீ. எழின்மலரின் மிசையோய் நீ. அரவணையிற் றுயின்றோய் நீ.ஆலின்கீ ழமர்ந்தோய் நீ. -- இருசீரோரடி அம்போதரங்கம் -- பெரியை நீ. சிறியை நீ. பெண்ணு நீ. ஆணு நீ. அரியை நீ. எளியை நீ. அறமு நீ. மறமு நீ. விண்ணு நீ. மண்ணு நீ. வித்து நீ. விளைவு நீ. பண்ணு நீ. பயனு நீ. பகையு நீ. உறவு நீ. என வாங்கு -- சுரிதகம் -- கற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும் வெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத் தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற் செங்கா லன்னமும் வெண்மருப் பேனமும் கீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய் நின்றநின் றன்மையை யுணர்த்தும் பொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே. |
59 |
சேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநுதல் மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும் தருணவிளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின் கருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம் வாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர் காமஞ்சால் கடைநோக்கிற் கரைந்துருகா நிற்குமால் அவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட் டெவ்வண்ண மாறிநிற்ப தின்று. |
60 |
அற்புத மணிமன்றி லடிகணின் னடியுன்னார் மைக்கடல் விடமென்னும் வடவைத்தீ யெழவஞ்சி நொஎன வடிவீழ்ந்தார்க் குதவிலர் நாணார்கொல் கைத்தல வபயத்தர் வரதத்தர் கைசெய்யாச் சித்திர மன்ன சிலர். |
61 |
தொடலைக் குறுந்தொடித் தோகாய்நம் பாவை படலைச் சிறுமுச்சி யுச்சிப் பசுங்கிள்ளை பேதைக் குழாத்தொடு நென்னற் பொழுதின்கண் வீதிக்கே நின்று விளையாட் டயருங்ககால் அஞ்சனக் கண்ணாளுந் தாமு மணிதில்லைச் ........( 5) செஞ்சடைக் கூத்தனார் வெள்விடை மேற் சேறலும் உண்ணெக் குருக வெதிர்ப்பட் டுடையானைக் கண்ணிற் பிணித்து மனத்திற் கொடுபுக் கிறைவளை சிந்த வணிதுகில் சோரப் ........(10) பிறரறியா வண்ணம் புணர்ந்தும் புணராள்போல் மையுண்கண் ணீர் சோரச் சோர்தலும் வார்குழலார் கைகோத் தெடுத்துக் கடிமனை கொண்டுய்ப்பப் பைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும் செந்தீப் பிழம்பிற் கிடத்திச் செருச்செய்வ தந்தோ கொடிதுகொடி தென்செய்தீ ரன்னைமீர் ........(15) பொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான் தண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ தம்மினென மின்றந்த நுண்ணிடையா யெங்கோன் விரைத்தொங்கல் தன்றந்தை தாளெறிந்தாற் கன்றித் தரானென்றேற் கன்றே பகைநோக் களித்தாண்மற் றம்ம ........(20) சிறியாள் பெரும்பித் தறிந்திருந்துஞ் செவ்வி அறியா துரைத்தே னது. |
62 |
அடிகொண்ட குனிப்பன்றே யரிபிரமர் முதலானேர் முடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லா முறைமுறைபோய்க் கடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலிற் குடிகொண்ட படிபோலு மிடத்தாளிற் குஞ்சிதமே. |
63 |
தரவு மல்லாண்ட திரடிண்டோட் டுழாய்முதலு மணிநாவிற் சொல்லாண்ட மறைமுதலும் பலராங்குத் தொலைவெய்த பல்லாண்டு செலச்செல்லா விளையோரும் பனிப்பெய்த அல்லாண்ட நள்ளிருளி லழலாடுந் தொழிலினையே. அதனால் -- சுரிதகம் -- பல்பே ரூழி செல்லினு மடிகட் கொல்லையுஞ் செல்லா தாகு மாகலின் அளவில் கால மலக்கணுற் றுழலுமென் தளர்வு நோக்காய் போலு நோக்கின் கருணைசெய் தருளா யல்லை அருணலம் பழுத்த வாடல்வல் லோயே. |
64 |
-- தரவு -- குழைதூங்கு கழைமென்றோட் கோமாரி கொலைக்கண்கள் இழைதூங்கு முலைக்கண்வைத் தேயெய்தா நாணேய்த உழைதூங்கு குயிலேங்க வுருமுத்தீ யுகநக்கு மழைதூங்கு பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய். ........(1) மீனேற்றின் றுவசத்தான் றனிதுஞ்ச விழித்தோய்நின் ஆனேற்றின் றுவசமோ வடலேற்றி னூர்தியோ கானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண் வானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே. எனவாங்கு -- சுரிதகம் -- பைந்துழாய் மவுலிப் பண்ணவ னுவப்ப அந்தணர் பழிச்சவு மறத்தின் புங்கவன் முனியான் முனிவன் போலும் அனைய தன்றே யான்றோர் கடனே. |
65 |
-- தரவு -- மறைதங்கு திருமன்றி னடங்கண்டு மகிழ்பூத்துக் கறைதங்கு படவரவ மிமையாது கண்விழிப்பக் குறைதங்கு கலைநிறையிற் கோளிழைக்குங் கொல்லென்று நிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும் பிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய். என வாங்கு -- தாழிசை -- வெள்ளெருக்குங் கரும்பாம்பும் பொன்மத்து மிலைச்சியெம துள்ளிருக்கும் பெருமானின் றிருமார்பி னுறவழுத்தும் கள்ளிருக்குங் குழலுமையாண் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும் முள்ளெயிற்ற கறையரவ முழையென்று நுழையுமால். ........(1) அதாஅன்று சிலைக்கோடு பொருமருப்பிற் புகர்முகனின் றிருமார்பில் முலைக்கோடு பொருசுவட்டைக் கண்டுநின் முழவுத்தோள் மலைக்கோடி விளையாடும் பருவத்து மற்றுத்தன் கொலைக்கோடு பட்டவெனக் குலைந்துமனங் கலங்குமால். ........(2) அதாஅன்று விடமார்ந்த சுடரிலைவேல் விடலைநின் மணிபார்பில் வடமார்ந்த முலைசுவட்டைக் கண்டுதன் மருப்பெந்தை தடமார்பம் விடர்செய்யச் சமர்செய்தான் கொல்லென்று கடமார்வெங் கவுட்சிறுகட் கயாசுரனை வியக்குமால் ........(3) அதனால் -- சுரிதகம் -- சிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண் முலைமுகங் கோட்டின ணகுமால் மலைமுகங் கோட்டுநின் மற்புய மறைந்தே. |
66 |
-- தரவு -- ஒருநோக்கம் பகல்செய்ய வொருநோக்க மிருள்செய்ய இருநோக்கிற் றொழில்செய்துந் துயில்செய்து மிளைத்துயிர்கள் கருநோக்கா வகைகருணைக் கண்ணேக்கஞ் செயுஞானத் திருநோக்க வருணோக்க மிருநோக்குஞ் செயச்செய்து மருநோக்கும் பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய். -- தாழிசை -- கடிக்கமலப் பார்வைவைத்துங் கண்ணனார் காணாநின் அடிக்கமல முடிக்கமல மறியாதே மறிதுமே. ........(1) முத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் றனையிகழ்ந்த அத்தொழிலிற் கெனிற்றமியே மறிதொழிற்கும் வல்லமே. ........(2) இருக்கோல மிட்டுமின்னு முணராதா லெந்தைநின் திருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே. ........(3) நான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங் கூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே. ........(4) தாமடிகண் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல மாமடிகள் யாமடிகண் மறவாமை யுடையமே. .........(5) பலகலையுங் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளா துலகலையுஞ் சி*1லகலையு முணராதே முணர்துமே. ........(6) அதனால் -- சுரிதகம் -- அம்மநின் றன்மை யெம்மனோ ருணர்தற் கரிதே யௌிதே யாதல் பெரிதே கருணை சிறிய மாட்டே. |
67 |
-- தரவு -- சூன்முகத்த சுரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய் வான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக் கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த் தேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய். ........1 புற்புதமுந் தொலைவெய்த நிலையெய்தாப் புலையுடம்பின் இற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு நற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன் அற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள். -- தாழிசை -- எவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ வெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே. ........(1) எண்பயிலா வுலகடங்க வொருநொடியி லிரித்திடுநீ விண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே. ........(2) பெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே. ........(3) மாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர் சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே. ........(4) மேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல் மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே. ........(5) ஓருருவாய் நிறைந்தநீ யிருவர்க்கன் றுணர்வரிய பேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே. ........(6) -- அராகம் -- அறிவினி லறிபவ ரறிவதை யலதொரு குறியினி லறிவுறு குறியினையலை. ........(1) உளவயி னுளவள வுணர்வதை யலதுரை அளவையி னளவிடு மளவினையலை. ........(2) அருவெனி னுருவமு முளையுரு வெனினரு வுருவமு முளையவை யுபயமுமலை. ........(3) இலதெனி னுளதுள தெனினில திலதுள தலதெனி னினதுரு வறிபவரெவர். ........(4) -- தாழிசை -- எத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே. ........(1) சீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற் பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே. ........(2) மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற அத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே. ........(3) இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே. ........(4) எவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே அவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே. ........(5) நின்னலா தவளில்லை யவளலா னீயில்லை என்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால். ........(6) அதனால் -- இருசீரோரடி அம்போதரங்கம் -- தந்தை நீ தாயு நீ. தமரு நீ. பிறரு நீ. சிந்தை நீ. உணர்வு நீ. சீவ னீ. யாவு நீ. எனவாங்கு -- சுரிதகம் -- நெஞ்சகங் குழைந்து நெக்குநெக் குருகநின் குஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும் மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில் செம்மாந் திருப்பது தீர்ந்து மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே. |
68 |