மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
களித்தொறும் கள் உண்டல் வேட்ட அற்று-கட்குடியர்க்குக் கள்ளுண்டு வெறிக்குந்தோறும் அக் கள் விருப்பமாதல் போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது-காம வின் பர்க்கு அலர் பரவுந்தோறும் அக்காமாம் இனிதாகின்றது. வேட்டற்று என்பது வேட்கப்பட்டற்று என்னும் செயப்பாட்டு வினைப் பொளுளது. 'ஆல்' அசை நிலை. காமமிகுதியால் அலரும் இன்பந்தருகின்றது என்பதாம்.
கலைஞர் உரை:
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
Translation
The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me! .
Explanation
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.