|
||||||||
கல்கண்டு சாதம் (Kalkandu Rice) |
||||||||
தேவையானவை : பச்சரிசி- 400 கிராம். கற்கண்டு- 1 கிலோ (பொடித்தது) பால்- 2 லிட்டர் நெய்- 150 மில்லி கிராம். ஏலக்காய்- 5 தேங்காய்- அரை மூடி முந்திரிப் பருப்பு- 20 கிஸ்மிஸ்பழம்- 20 செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை அதைப் போன்று மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும்.அதை நன்றாகக் குழைய விடவும்.அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும். 2.கிஸ்மிஸ் பழம்,முந்திரிப் பருப்பு ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும். இவை அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும். 3.பொடித்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும். கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும். |
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|