|
|||||
மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!! |
|||||
கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹசன் நடித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்குள், கமல் பட்ட கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே, ஒருகட்டத்தில் வெறுத்துப்போன கமல் இப்படியே எனக்கு தொந்தரவு கொடுத்தாங்கன்னா நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அப்போது உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ படமும் வெளிவந்து மெகா ஹிட்டானது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை கமல் இயக்கி, நடித்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரு செய்தியார்கள் சந்திப்பில் கமல் ஹசன் பேசியதாவது, நாட்டின், அனைத்து திரைப்பட துறையையும், “பாலிவுட் என, அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில், 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளி வருகின்றன. ஹாலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், “நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து நான் பின் வாங்க மாட்டேன். இருந்தாலும் இந்த நாட்டை விட்டு வெளியேற எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா…?” என தெரிவித்தார் கமல் ஹசன்.
மறுபடியும் முதல இருந்தா....... |
|||||
by Swathi on 07 Oct 2013 0 Comments | |||||
Tags: கமல் ஹாசன் விஸ்வரூபம் 2 விஸ்வரூபம் Vishwaroopam 2 Vishwaroopam 2 Issues | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|