LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் புதிய சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதிய சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையொட்டி சோமாஸ்கந்தர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சோமாஸ்கந்தர் திருமேனி உள்ளது. 

இதை மாற்றி புதிய சிலை செய்ய கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோர் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். அதற்காக உள்ளூர், வெளியூர், வெளிநாடு வாழ் பக்தர்களிடம் பல கிலோ தங்கம் நன்கொடையாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், சிலைகளை ஆய்வு செய்தபோது சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையில் கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென புதிய சோமாஸ்கந்தர் சிலைக்கு கோயில் அர்ச்சகர்கள் சுமார் 10 பேர் பாலாலயம் செய்தனர். 

பாலாலயம் என்பது திருப்பணி நடைபெறும்போது, உற்சவர் திருமேனிக்கு பாலாலயம் செய்து திருப்பணிகள் முடிந்த பிறகு பூஜைகள் நடைபெறுவது. அதேபோன்று புதிய உற்சவர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது.  கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சார்பில், நீதிமன்றத்தில் புதிய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

by Mani Bharathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.