LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில், நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இடம் பெறுமாறு அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.
விளம்பர பெயர்ப் பலகையில் உள்ள தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி ஆகியவை முறையே,  5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது முறையே 5:3 என்ற விகிதத்தில் எழுத்துகளின் அளவு இருக்க வேண்டும். 
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்ட.ர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“தமிழக அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
பெயர்ப் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
 தமிழ் வளர்ச்சிக்காக வணிகர்களும், நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக, உடனடியாக பெயர்ப்பலகையை தமிழில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்து உள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில், நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இடம் பெறுமாறு அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.

விளம்பர பெயர்ப் பலகையில் உள்ள தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி ஆகியவை முறையே,  5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது முறையே 5:3 என்ற விகிதத்தில் எழுத்துகளின் அளவு இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்ட.ர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

“தமிழக அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெயர்ப் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தமிழ் வளர்ச்சிக்காக வணிகர்களும், நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக, உடனடியாக பெயர்ப்பலகையை தமிழில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

by Mani Bharathi   on 11 Jan 2019  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
27-Jan-2019 12:20:49 Mahenthiran said : Report Abuse
வாழ்க தமிழ்....!!
 
27-Jan-2019 12:20:39 Mahenthiran said : Report Abuse
வாழ்க தமிழ்....!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.