LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

கண்டபத்து - நிருத்த தரிசனம்

 

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் 
அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் 
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட 
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475 
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் 
தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை 
எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை 
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476 
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் 
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட 
திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை 
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 477 
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை 
வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் 
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை 
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 478 
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் 
ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு 
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் 
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 479 
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் 
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் 
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி 
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 480 
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் 
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே 
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த 
வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே. 481 
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி 
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு 
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் 
களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே. 482 
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை 
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி 
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை 
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 483 
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் 
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் 
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை 
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 484 

 

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் 

அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் 

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட 

அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475 

 

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் 

தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை 

எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை 

அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476 

 

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் 

கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட 

திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை 

அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 477 

 

கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை 

வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் 

பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை 

எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 478 

 

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் 

ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு 

பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் 

கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 479 

 

பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் 

உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் 

செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி 

மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 480 

 

பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் 

பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே 

சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த 

வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே. 481 

 

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி 

விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு 

அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் 

களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே. 482 

 

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை 

ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி 

வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை 

நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 483 

 

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் 

பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் 

கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை 

வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 484 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.