இரும்புக்குதிரை படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா, ஈட்டி மற்றும் கணிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி படத்திற்கு இசை அமைக்கிறார்.
இதில் ’கணிதன்’ படத்தை இயக்கும் சந்தோஷ் படத்தைக் கொண்டு செல்லும் விதம் வித்தியாசமாக உள்ளதாம். எனவே காட்சிகளை முந்தைய நாளே கேட்டுத் தெரிந்து கொண்டு முழுவதுமாக காட்சியை உள் வாங்கிக்கோண்டு நடித்து வருகிறாராம் அதர்வா.
இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷ்ன் காட்சிகளும் மேலும் இதற்கு முன்பு தான் நடித்த படங்களில் இதுவரை எடுக்காத ரிஸ்க்கை இந்தப் படத்தில் எடுத்திருக்கிறாராம்.
முக்கியமாக, எந்த சண்டை காட்சியிலும் டூப் போடாமல் தானே நடிப்பதாகக் கூறும் அதர்வா ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்.
|