தென் தமிழ் மாவட்டங்களில் வாழும் கணியன் என்ற சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் கணியான் ஆட்டம் எனப்படும். இவ்வாட்டமானது 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. இது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள சுடலைமாடன் கோவில்களில் கட்டாயமாகவும், அம்மன் கோவில்களில் பெருமளவும், பிற நாட்டார் தெய்வக் கோவில்களிலும் நிகழ்கிறது.இக்கலைக்குரிய இசைக்கருவிகள் மகுடம். ஜால்ரா ஆகியன. இவ்வாட்டத்தின் துணை ஆட்டங்களாக அம்மன் கூத்து, பேயாட்டம் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். தட்சணின் யாகக் குண்டத்திலிருந்து வந்த சுடலைமாடன் கேட்டதற்கிணங்க சிவபெருமான் கணியனைத் தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது.
|