LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- லா.ச.ராமாமிருதம்

கண்ணன்

 

கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.
சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று ‘க்ரீச்…..க்ரீச்….. ‘ என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு….
கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் ?…..
கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.
கண்ணன் பரிஷையில் ‘பெயில் ‘. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு ‘பகீர் ‘ என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் ‘சார், நான் பாஸா ? ‘ என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்—-
‘பாஸா ? பாப்பாஸ்தான் ‘ நீ எங்கேடா பாஸ் ஆறது ? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ‘ ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. ‘ஹ்உம் ‘ ன்னா அரையோட போயிண்டுடறே ‘
‘வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது ? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்…. ‘
அவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் ‘பெயில் ‘.
வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா ? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே….நடுமுதுகிலே ‘ஐஸ் ‘வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா….அன்னிக்குக்கூட அப்படித்தான்…. அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு….
தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.
மழை ‘ஜோ ‘வென்று கொட்டித்து ராத்திரி.
அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி…பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் ?
கதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.
‘அண்ணா—- ‘
மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் ? மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.
மாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா ? தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு—
‘அண்ணா ‘ ‘ —அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.
‘யாரு நீயா ? ‘
மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது— அதைவிட சுறீல்—
‘ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன் ? குழந்தையும் கையுமா நிக்கறேன்— ‘
‘பேஷ் சுமை வேறையா ?— ‘
‘அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது…. ‘
அப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது…. அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், —துணுக்குகள்— தண்ணியிலே போறாப்போல….
‘சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே ? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா ? ‘
அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா ? அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா—-
‘அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா— ‘
‘மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ ? ‘
‘ஹோட்டல்லே வேலை. ‘ அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. ‘வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்— ‘
‘ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு ? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ‘ பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா ? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா ? ‘
‘அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண ?— ‘
‘ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ? ‘ அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து…. அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.
அப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு ‘சுறீல், சுறீல் ‘ நெருப்புப் பொறி.
அம்மா ஏன் அழறாள் ? அம்மாவுக்கு மார் வெடிச்சுடுத்தா ? அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.
அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா ? கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச��
�சுக்கறாளா ‘
ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா ? இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் ? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா ? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா ?
பள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.
‘என்னம்மா ‘ என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே ? ‘
அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: ‘மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ‘ இதென்ன பாஷையோ ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.
அப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு……
சாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். ‘பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ ? தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா ? ‘
ஆனால், அம்மா பதில் பேசறதில்லை.
அப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.
‘கண்ணா, வா— ‘ என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, ‘போ ‘ன்னாள்.
ஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் ‘போயிட்டுவா ‘ என்பாள். இன்னிக்கு ‘போ ‘ ன்னு மாத்திரம் சொன்னாள்.
அவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, ‘அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ‘ என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.
என் அம்மா எங்கே ? அம்மா எங்கே மாமா ?
கொஞ்ச நாளைக்கு ‘இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ‘ எல்லோரும் சாக்கு சொல்ல�
�� அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் ‘த்ஸோ, த்ஸோ ‘ங்கறா ரெண்டுபேர் ‘சரிதான்; நாடோடி பயலுக்கு ‘த்ஸோ ‘ ‘ என்ன வேண்டியிருக்கு ‘ என்கறா.
‘குழந்தை என்ன பண்ணுவான் ? பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ‘ இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது…… அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி…….
‘அம்மா ‘—- ‘ என்றான் கண்ணன். ஒரே இருட்டு……
‘அம்மா ‘ ‘
அம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ‘ தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.
‘அம்மா ‘ ‘ தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.
‘அம்மா ‘ ‘
மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் ‘
‘அம்மா ‘ அம்மா ‘ ‘ ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா ‘நிலாவிலிருந்து ‘ குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.
‘இதோ இருக்கேனடா கண்ணா ‘—அட அசடே, என்னடா இப்படி அழறே ?….. நான் எங்கேயும் போகலேடா—- நிஜமாத்தான்— எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு…..
‘கண்ணா ‘வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான். ‘கண்ணா ‘வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.
மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.
‘கண்ணா—–கண்ணா—-டேய், எழுந்திருடா. ‘ ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.
முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

      கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று ‘க்ரீச்…..க்ரீச்….. ‘ என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு….கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை.

 

      வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் ?…..கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.கண்ணன் பரிஷையில் ‘பெயில் ‘. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு ‘பகீர் ‘ என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் ‘சார், நான் பாஸா ? ‘ என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்—-‘பாஸா ? பாப்பாஸ்தான் ‘ நீ எங்கேடா பாஸ் ஆறது ? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ‘ ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே.

 

     ‘ஹ்உம் ‘ ன்னா அரையோட போயிண்டுடறே ‘‘வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது ? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்…. ‘அவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் ‘பெயில் ‘.வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா ? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே….நடுமுதுகிலே ‘ஐஸ் ‘வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா….அன்னிக்குக்கூட அப்படித்தான்…. அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு….தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.மழை ‘ஜோ ‘வென்று கொட்டித்து ராத்திரி.அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி…பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் ?கதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.

 

    ‘அண்ணா—- ‘மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் ? மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.மாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா ? தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு—‘அண்ணா ‘ ‘ —அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.‘யாரு நீயா ? ‘மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது— அதைவிட சுறீல்—‘ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன் ? குழந்தையும் கையுமா நிக்கறேன்— ‘‘பேஷ் சுமை வேறையா ?— ‘‘அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது…. ‘அப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது…. அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், —துணுக்குகள்— தண்ணியிலே போறாப்போல….‘சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே ? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா ? ‘அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா ? அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா—-‘அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா— ‘‘மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ ? ‘‘ஹோட்டல்லே வேலை.

 

 

    ‘ அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. ‘வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்— ‘‘ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு ? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ‘ பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா ? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா ? ‘‘அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண ?— ‘‘ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ? ‘ அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து…. அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.அப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு ‘சுறீல், சுறீல் ‘ நெருப்புப் பொறி.அம்மா ஏன் அழறாள் ? அம்மாவுக்கு மார் வெடிச்சுடுத்தா ? அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள்.

 

    மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா ? கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச���சுக்கறாளா ‘ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா ? இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் ? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா ? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா ?பள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.‘என்னம்மா ‘ என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே ? ‘அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: ‘மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ‘ இதென்ன பாஷையோ ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.அப்புறம் இன்னொண்ணு.

 

      அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு……சாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். ‘பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ ? தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா ? ‘ஆனால், அம்மா பதில் பேசறதில்லை.அப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

 

     ‘கண்ணா, வா— ‘ என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, ‘போ ‘ன்னாள்.ஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் ‘போயிட்டுவா ‘ என்பாள். இன்னிக்கு ‘போ ‘ ன்னு மாத்திரம் சொன்னாள்.அவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, ‘அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ‘ என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.என் அம்மா எங்கே ? அம்மா எங்கே மாமா ?கொஞ்ச நாளைக்கு ‘இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ‘ எல்லோரும் சாக்கு சொல்ல��� அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் ‘த்ஸோ, த்ஸோ ‘ங்கறா ரெண்டுபேர் ‘சரிதான்; நாடோடி பயலுக்கு ‘த்ஸோ ‘ ‘ என்ன வேண்டியிருக்கு ‘ என்கறா.‘குழந்தை என்ன பண்ணுவான் ? பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ‘ இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது…… அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி…….‘அம்மா ‘—- ‘ என்றான் கண்ணன்.

 

     ஒரே இருட்டு……‘அம்மா ‘ ‘அம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ‘ தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.‘அம்மா ‘ ‘ தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.‘அம்மா ‘ ‘மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் ‘‘அம்மா ‘ அம்மா ‘ ‘ ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா ‘நிலாவிலிருந்து ‘ குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.‘இதோ இருக்கேனடா கண்ணா ‘—அட அசடே, என்னடா இப்படி அழறே ?….. நான் எங்கேயும் போகலேடா—- நிஜமாத்தான்— எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு…..‘கண்ணா ‘வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான்.

 

     ‘கண்ணா ‘வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.‘கண்ணா—–கண்ணா—-டேய், எழுந்திருடா. ‘ ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.