LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!

1
இதோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,

வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,

நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்...

மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள் மோகினி என்பார்கள் நம் பேச்சைக் கேட்டு - அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,

அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
--------------------------------------------------------------------

2
நான் வரும்போதெல்லாம்
உனக்காக ஒரு
மலர் வாங்கி வருவேன்

நீ எனைக் கண்டிராத இடத்தில்
அந்த மலர்களை
விட்டுச் செல்வேன்

மலர்களை தாண்டிச்
செல்வாய் நீ,
உனக்கந்த மலர்கள் அழுவதாக
சத்தம் கேட்டிருக்கும் போல்;


நீ திரும்பிப்
பார்ப்பாய்,

சற்று தூரம் சென்று
மீண்டும் மீண்டும்
அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்..

மலர்களும்
மெல்ல அழத்துவங்கும்..

அந்த மலர்களுக்குத் தெரியும்
உன்னையும் என்னையும்
--------------------------------------------------------------------

3
புத்தகத்துள் வைக்கும்
மயிலிறகினைப் போலவே
மனதிற்குள் வளர்ந்துவிட்ட
மாயர்கள் நாம்..

இந்த மண்ணிற்குத்தான்
மயிலிறகும் மறந்துப்போச்சு
மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?)

இனி காதலித்தாலென்ன
யாரை யார் மறந்தாலென்ன
நீ எல்லோரையும் போல் யாரையேனும்
மணந்துக்கொள்
நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள்
யாரோடேனும் உயிர்த்திருப்பேன்

ஒருவேளை எப்பொழுதேனும்
உன்னை நினைத்துக்கொண்டால் நானும்
எனக்காக நீயும்
அழாமலாப் போவோம்?

அப்போதுச் சிந்தும் கண்ணீரால்
சபிக்கப்படட்டுமிந்த பூமி;

நீ போ
அதோ போகிறார்கள் பார், எத்தனையோப் பேர்
அவர்களோடு போ..

அவர்களும்
அப்படித்தான்;
நம்மில் நிறையப்பேர்
அப்படித்தான்;
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்!!
--------------------------------------------------
வித்யாசாகர்

by Swathi   on 11 Jan 2018  1 Comments
Tags: Kanner   Kanneer Kavithaigal   Kanneer   Tamil Kanneer Kavithaigal   கண்ணீர் கவிதைகள்   தமிழ் கண்ணீர் கவிதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன் கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்! ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
கருத்துகள்
23-Jan-2018 12:19:53 வெ.கெளதம் said : Report Abuse
தமிழ் வார்த்தைகளுக்கு எப்படி அர்த்தம் தெரிந்து கொள்ளவது என்று எனக்கு கூறுங்களேன்...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.