|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கந்த புராணம் - பகுதி 1 பாயிரம் & உற்பத்திக் காண்டம்- பகுதி 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
|
பாயிரம் | |
1. விநாயகர் காப்பு | 1-5 |
2. கடவுள் வாழ்த்து | 6- 30 |
3. அவையடக்கம் | 31-59 |
4. ஆற்றுப்படலம் | 51-89 |
5. திருநாட்டுப்படலம் | 90 - 146 |
6. திருநகரப் படலம் | 147- 270 |
7. பாயிரப்படலம் | 271 -352 |
உற்பத்திக் காண்டம் | |
1. திருக்கைலாசப் படலம் | 353 - 374 |
2. பார்ப்பதிப் படலம் | 375 - 410 |
3. மேருப்படலம் | 411 - 491 |
4. காமதகனப் படலம் | 492 - 601 |
5. மோன நீங்கு படலம் | 602 - 636 |
6. தவங்காண் படலம் | 637 - 669 |
7. மணம் பேசு படலம் | 670 - 689 |
8. வரைபுனை படலம் | 690 - 725 |
உ
செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்
1 | திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். |
1 |
2 | உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நூதலி னோடை வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். |
2 |
சுப்பிரமணியர் காப்பு
3 | மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான் சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. |
3 |
நூற் பயன்
4 | இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச் சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர் அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற் கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. |
4 |
வாழ்த்து
5 | வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். |
5 |
ஆகத் திருவிருத்தம் - 5
சிவபெருமான்
6 | திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப் பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றான் ஒருவன் றனது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம். |
1 |
7 | ஊனாகி யூனு ளுயிராயுயிர் தோறு மாகி வானகி யான பொருளாய்மதி யாகி வெய்யோன் தானாகி யாண்பெண் ணுருவாகிச் சராச ரங்கள் ஆனான் சிவன்மற் றவனீள்கழற் கன்பு செய்வாம். |
2 |
வேறு
8 | பிறப்பது மிறப்பதும் பெயருஞ் செய்கையும் மறப்பது நினைப்பதும் வடிவம் யாவையுந் துறப்பது மிமையும் பிறவுஞ் சூழ்கலாச் சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவம். |
3 |
9 | பூமலர் மிசைவரு புனித னாதியோர் தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே மாமறை முதற்கொரு வடிவ மாகியோன் காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம். |
4 |
10 | பங்கயன் முகுந்தனாம் பரமென் றுன்னியே தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுழி அங்கவர் வெருவர வங்கி யாயெழு புங்கவன் மலரடி போற்றி செய்குவாம். |
5 |
11 | காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான் மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர் பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன் சேண்பொலி திருநடச் செயலை யேத்துவாம். |
6 |
சிவசத்தி
12 | செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய மறுவறு மரனிட மரபின் மேவியே அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். |
7 |
விநாயகக் கடவுள்
13 | மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மௌ¤தின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். |
8 |
வைரவக் கடவுள்
14 | பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். |
9 |
15 | வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென வால மாமெனச் செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம். |
10 |
வீரபத்திரக்கடவுள்
16 | அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும் முடிந்திட வெருவியே முனிவர் வேதியர் உடைந்திட மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். |
11 |
சுப்பிரமணியக் கடவுள்
17 | இருப்பரங் குறைத்திடு மெ·க வேலுடைப் பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம். |
12 |
18 | சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீன் டீரலை வாயிடு மெ·க மேந்தியே வேரலை வாய்தரு வௌ¢ளி வெற்பொரீஇச் சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். |
13 |
19 | காவினன் குடிலுறு காமர் பொன்னகர் மேவினன் கடிவர விளியச் சூர்முதல் பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற ஆவினன் குடிவரு மமலற் போற்றுவாம். |
14 |
20 | நீரகத் தேதனை நினையு மன்பினோர் பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந் தாரகத் துருவமாந் தலைமை யெய்திய ஏரகத் தறுமுக னடிக ளேத்துவாம். |
15 |
21 | ஒன்றுதொ றாடலை யொருவி யாவிமெய் துன்றுதொ றாடலைத் தொடங்கி ஐவகை மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக் குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம். |
16 |
22 | எழமுதி ரைப்புனத் திறைவி முன்புதன் கிழமுதி ரிளநலங் கிடைப் முன்னவன் மழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். |
17 |
23 | ஈறுசேர் பொழுதினு மிறுதி யின்றியே மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிற் கூறுசீர் புனைதரு குமர கோட்டம்வாழ் ஆறுமா முகப்பிரா னடிகள் போற்றுவாம். |
18 |
திருநந்திதேவர்
24 | ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ் செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான் மெய்யறு சூள்புகல் வியாத னீட்டிய கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். |
19 |
திருஞானசம்பந்தமூர்த்திசுவாமிகள்
25 | பண்டைவல் வினையினாற் பாயு டுத்துழல் குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே வெண்டிரு நீற்றொளி விளங்கச் செய்திடு தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். |
20 |
திருநாவுக்கரசு சுவாமிகள்
26 | பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண் கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு துய்யசொல் லரசர்தா டொழது போற்றுவாம். |
21 |
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
27 | வறந்திடு ª£ய்கைமுன் னிரம்ப மற்றவண் உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால் இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன் றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். |
22 |
மாணிக்கவாசக சுவாமிகள்
28 | கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச் சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய் முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால் வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். |
23 |
திருத்தொண்டர்கள்
29 | அண்டரு நான்முகத் தயனும் யாவருங் கண்டிட வரியதோர் காட்சிக் கண்ணவாய் எண்டகு சிவனடி யெய்தி வாழ்திருத் தொண்டர்தம் பதமலர் தொழது போற்றுவாம். |
24 |
சரசுவதி
30 | தாவறு முலகெலாந் தந்த நான்முகத் தேவுதன் றுணைவியாய்ச் செறிந்த பல்லுயிர் நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன் பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம். |
25 |
ஆகத் திருவிருத்தம் - 30
31 | இறைநில மெழுதுமு னிளைய பாலகன் முறைவரை வேனென முயல்வ தொக்குமால் அறுமுக முடையவோ ரமலன் மாக்கதை சிறியதோ ரறிவினேன் செப்ப நின்றதே. |
1 |
வேறு
32 | ஆன சொற்றமிழ் வல்ல வறிஞர்முன் யானு மிக்கதை கூறுதற் கெண்ணுதல் வான கத்தெழும் வான்கதி ரோன்புடை மீனி மைப்ப விரும்பிய போலுமால். |
2 |
33 | முன்சொல் கின்ற முனிவட நூறெரீஇத் தென்சொ லாற்சிறி யேனுரை செய்தலான் மென்சொ லேனும் வௌ¤ற்றுரை யேனும்வீண் புன்சொ லேனு மிகழார் புலமையோர். |
3 |
34 | சிந்து மென்பு சிரம்பிறை தாங்கினோன் மைந்த னாதலின் மற்றவன் றானுமென் சந்த மிலுரை யுந்தரிப் பானெனாக் கந்த னுக்குரைத் தெனிக் கதையினை. |
4 |
35 | வெற்றெ னத்தொடுத் தீர்த்து வௌ¤ற்றுரை முற்று மாக மொழிந்தவென் பாடலிற் குற்ற நாடினர் கூறுப தொல்லைநூல் கற்று ணர்ந்த கலைஞரல் லோர்களே. |
5 |
36 | குற்ற மேதெரி வார்குறு மாமுனி சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால் கற்றி லாவென் கவிவழு வாயினும் முன்று நாடிவல் லோருய்த் துரைக்கவே. |
6 |
வேறு
37 | குறைபல மாமதி கொளினு மன்னதால் உறுபய னோக்கியே யுலகம் போற்றல்போற் சிறியவென் வௌ¤ற்றுரை சிறப்பின் றாயினும் அறுமுகன் கதையிதென் றறிஞர் கொள்வரே. |
7 |
38 | நாதனா ரருள்பெறு நந்தி தந்திடக் கேரதிலா துணர்சனற் குமரன் கூறிட வாதரா யணமுனி வகுப்ப வோர்ந்துணர் சூதனோ தியதுமூ வாறு தொல்கதை. |
8 |
39 | சொல்லிய புராணமாந் தொகையு ளீசனை அல்லவர் காதைக ளனையர் செய்கையுள் நல்லன விரித்திடு நவைகண் மாற்றிடும் இல்லது முகமனா லெடுத்துக் கூறுமே. |
9 |
40 | பிறையணி சடைமுடிப் பிரான்றன் காதைகள் இறையுமோர் மறுவில யாவு மேன்மையே மறைபல சான்றுள வாய்மை யேயவை அறிஞர்க ணாடியே யவறறைக் காண்கவே. |
10 |
41 | புவியின ரேனையர் புராணந் தேரினுஞ் சிவகதை யுணர்கில ரென்னிற் றீருமோ அவர்மய லரசனை யடைந்தி டாரெனில் எவரெவ ராக்கமு மினிது போலுமால். |
11 |
42 | மங்கையோர் பங்குடை வான நாயகற் கிங்குள பலபுரா ணத்துள் எ·கவேற் புங்கவன் சீர்புகழ் புராண மொன்றுள தங்கதி லொருசில வடைவிற் கூறுகேன். |
12 |
43 | புதுமயி லூர்பரன் புராணத் துற்றிடாக் கதையிலை யன்னது கணித மின்றரோ அதுமுழு தறையவெற் கமைதற் பாலதோ துதியுறு புலமைசேர் சூதற் கல்லதே. |
13 |
44 | காந்தமா கியபெருங் கடலும் கந்தவேள் போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை ஏந்தல்வந் தவுணர்கள் யாரு மல்வழி மாய்ந்திட வடர்த்தது மற்றுங் கூறுகேன். |
14 |
வேறு
45 | ஏதி லாக்கற்ப மெண்ணில சென்றன ஆத லாலிக் கதையு மனந்தமாம் பேத மாகுமப் பேதத்தி னுள்விரித் தோது காந்தத்தி னுண்மையைக் கூறுகேன். |
15 |
46 | முன்பு சூதன் மொழிவட நூற்கதை பின்பி யான்றமிழ்ப் பெற்றியிற் செப்புகேன் என்ப யன்னெனி லின்றமிழ்த் தேசிகர் நன்பு லத்தவை காட்டு நயப்பினால்*.(பாடபேதம்*-நயப்பரோ) |
16 |
47 | தோற்ற மீறின்றித் தோற்யி சூர்ப்பகைக் கேற்ற காதைக் கெவன்பெய ரென்றிடின் ஆற்று மைம்புலத் தாறுசென் மேலையோர் போற்று கந்த புராணம் தென்பதே. |
17 |
48 | பகுதி கொண்டிடு பாக்களி னத்திலுண் மிகுதி கொண்ட விருத்தத் தொகைகளால் தொகுதி கொண்டிடு சூர்கிளை சாய்த்தவன் தகுதி கொண்ட தனிக்கதை சாற்றுகேன். |
19 |
49 | செந்த மிழ்க்கு வரம்பெனச் செப்பிய முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர் கந்த னெந்தை கதையினை நூன்முறை தந்தி டென்னத் தமிய னியம்புகேன். |
19 |
50 | வெம்பு சூர்முதல் வீட்டிய வேற்படை நம்பி காதையை நற்றமிழ்ப் பாடலால் உம்பர் போற்ற வுமையுடன் மேவிய கம்பர் காஞ்சியிற் கட்டுரைத் தேனியான். |
20 |
ஆகத் திருவிருத்தம் - 50
- - -
51 | செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த் தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த் தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின் மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன். |
1 |
52 | சந்தர மாயவன் றுயிலு மாழிபோல் இந்திர னூர்முகி லியாவு மேகியே அந்தமில் கடற்புன லருந்தி யார்த்தெழீஇ வந்தன வுவரியின் வண்ண மென்னவே. |
2 |
53 | பார்த்தென துலகடும் பரிதி யென்னொடும் போர்த்தொழில் புரிகெனப் பொங்கு சீற்றத்தால் வேர்த்தெனப் பனித்துவௌ¢ ளெயிறு விள்ளநக் கார்த்தென வெதடித் தசனி கான்றவே. |
3 |
54 | சுந்தர வயிரவத் தோன்றன் மீமிசைக் கந்தடு களிற்றுரி கவைஇய காட்சிபோல் முந்துறு சூன்முகில் முழுது முற்றுற நந்தியம் பெருவரை மீது நண்ணிய. |
4 |
வேறு
55 | வாரை கான்றநித் திலமென வாலிகண் மயங்கச் சீரை கான்றிடு தந்திரி நரம்பெனச் செறிந்த தாரை கான்றவோ ரிருதுவி னெல்லையுந் தண்பால் வீரை கான்றிடு தன்மைய தாமென மேகம். |
5 |
56 | பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வாய் ஊட்டு தண்புன னந்தியங் கிரிமிசை யுகுத்தல் வேட்டு வக்குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற் காட்டு கின்றதோர் தனிச்செயல் போன்றுள தன்றே. |
6 |
57 | கல்லென் பேரிசைப் புனன்மழை பொழிதலாற் கானத் தொல்லும் பேரழல் யாவையு மிமைப்பினி லொளித்த வெல்லுந் தீஞ்சல மருவுமிக் காருக்கு வியன்பார் செல்லுங் காலையி லங்கண்வீற் றிருப்பரோ தீயோர். |
7 |
58 | தேக்கு தெண்டிரைப் புணரிநீர் வெம்மையைச் சிந்தி ஆக்கி வாலொளி யுலகில்விட் டெகலால் அடைந்தோர் நீ¦க்க ரும்வினை மாற்றிநன் னெறியிடைச் செலுத்திப் போக்கின் மேயின் தேசிகர்ப் பொருவின புயல்கள். |
8 |
59 | கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாக் கவிஞர் மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூல் முகில்கள் பொழிந்த சீதநீர் பொற்புறு சாடியிற் பொங்கி வழிந்த பாலெனத் திசைதொறு மிழிந்தன மன்னோ. |
9 |
60 | சீல மேதகு பகரதன் வேண்டலுஞ் சிவன்றன் கோல வார்சடைக் கங்கையம் புனலினைக் குன்றின் மேலை நாள்விட வந்தென நந்திவீழ் விரிநீர் பாலி யாறெனும் பெயர்கொடு நடந்தது படிமேல். |
10 |
61 | வாலி தாகிய குணத்தினன் வசிட்டனென் றுரைக்குஞ் சீல மாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால் சால நீடியே தோல்லைநாட் படர்ந்திடு தன்மைப் பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கௌ¤தோ. |
11 |
62 | எய்யும் வெஞ்சிலைப் புளிஞரை எயிற்றியர் தொகையைக் கைய ரிக்கொடு வாரியே சிறுகுடி கலக்கித் துய்ய சந்தகில் பறித்துடன் போந்தது தொன்னாள் வெய்ய சூப்படை வான்சிறை கவர்ந்துமீண் டதுபோல். |
12 |
63 | காக பந்தரிற் கருமுகிற் காளிமங் கஞலும் மாக நீள்கரி யாவையுங் குழுவொடும் வாரிப் போகன் மேயின மேற்றிசைப் புணரியுண் டமையா மேக ராசிகள் குணகடல் மீதுசெல் வனபோல். |
13 |
64 | குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண் டுவட்டி யுந்திடு திரைப்புனல் மதூகநல் லுழிஞ்சில் கவட்டி னோமைசாய்த் தாறலை கள்வரூர் கலக்கித் தெவிட்டி வந்தது பாலையுட் கொண்டிடு செருக்கால். |
14 |
65 | காலை வெம்பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும் மாலை யாமம்வை கறையெலாஞ் செந்தழல் வடிவாய் வேலை யும்பரு கியவெழும் வெம்மைபோய் விளிந்து பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார். |
15 |
66 | குல்லை மாலதி கொன்றைகா யாமலர்க் குருந்து முல்லை சாடியே யானிரை முழுவது மலைத்து மெல்ல மற்றவை நீந்தலுங் கரைக்கண்விட் டுளதால் தொல்லை மாநதி யான்வழித் தோன்றிய தொடர்பால். |
16 |
67 | சுளையு டைப்பல வாசினி பூகமாந் துடவை உளைம லர்ச்சினை மருதமோ டொழிந்தன பிறவுங் களைத லுற்றுமாட் டெறிந்தது கண்ணகன் குடிஞை அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ. |
17 |
68 | இலைவி ரித்துவெண் சோறுகால் கைதையு மெழுதுங் கலைவி ரித்திடு பெண்ணையுங் களைந்திடுங் களைபோய் அலைவி ரித்திடு கடல்புக வொழுகுமா றனந்தன் தலைவி ரித்துழி யுடனௌ¤த் தன்னதோர் தகைத்தால். |
18 |
69 | கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை துங்க மார்திருத் தலைமசைக் கொண்டுறுந் தொடர்பால் எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர். |
19 |
70 | கொலைகொள் வேன்மற வீரர்த மிருக்கையிற் குறுகாச் சிலையும் வாளடு தண்டமுந் திகிரிவான் படையும் நிலவு சங்கமுங் கொண்டுசென் றடல்புரி நீரால் உலக மேழையு முற்பக லயின்றமா லொக்கும். |
20 |
71 | தேன்கு லாவிய மலர்மிசைப் பொலிதரு செயலால் நான்க வாமுகந் தொறுமறை யிசையோடு நணுகிக் கான்கு லாவிய கலைமரை மான்றிகழ் கவினால் வான்கு லாமுல களிப்பவ னிகர்க்குமால் வாரி. |
21 |
72 | மீது போந்திரி சங்கைவிண் ணிடையின்மீ னோடும் போத லாயுற வீசலாற் சலமிகும் புலனால் தீதின் மாக்களைச் செறுத்தலா லளித்திடுஞ் செயலாற் காதி காதல னிகர்க்குமாற் கன்னிமா நீத்தம். |
22 |
73 | தெழித்த மால்கரி யினங்கட மெயிற்றினாற் சிதையக் கிழித்த பேரிறால் சொரிந்ததேன் கிரியுள வெல்லாங் கொழித்து வந்துற வணைதரும் பாலியின் கொள்கை கழித்த நீர்க்கங்கை யமுனையைக் கலந்தெனத் தோன்றும். |
23 |
74 | சங்க மார்த்திடத் திரையெழ நதியுறுத் தகைமை அங்கம் வெம்பினை பனிக்கதி ரல்லைநீ யழலோய் இங்கு வாதிளைத் தேகுதி யெனக்கர மெடுத்தே பொங்கும் வாய்விடா விரவியை விளிப்பது போலும். |
24 |
75 | வேத மேமுதல் யாவையு முணர்கினு மேலாம் ஆதி வானவன் கறைமிடற் றிறையென வறியாப் பேதை மாக்கட முணர்வென வலைந்து பேர்கின்ற சீத நீரெலாந் தௌ¤தலின் றாயது சிறிதும். |
25 |
76 | செம்பொன் மால்வரை யல்லன கிரிகளுந் திசையும் உம்பர் வானமுந் தரணியுந் துளங்கவந் துறலால் எம்பி ரான்முனம் வருகென நதிகளோ டெழுந்த கம்பை மாநதி யொத்தது கரைபொரு பாலி. |
26 |
77 | உதிரு கின்றசிற் றுண்டிகொண் டொலிபுனற் சடைமேல் மதுரை நாயகன் மண்சுமந் திட்டமா நதியின் முதிரு முத்தமிழ் விரகன தேடென மொய்ம்மீன் எதிர்பு குந்திடப் போவது பாலியா மியாறு. |
27 |
வேறு
78 | மாசறத் துளங்கு துப்பு மரகதத திடைவந் தென்னப் பாசடை நடுவட் பூத்த பங்கயத் தடாகம் யாவுந் தேசுடைத் தரங்க நீத்தச் செலவினாற் சிதைந்த மன்னோ பேசிடிற் சிறுமை யெல்லாம் பெருமையா லடங்கு மன்றோ. |
28 |
79 | வளவயன் மருத வைப்பின் வாவியங் கமலம் யாவுங் கிளையொடும் பறித்து வா£க் கேழுறப் பொலிந்த தோற்றம் விளைதரு பகையிற் றோலா வெவ்வழற் சிறுமை நோக்கிக் களைதலைப் புரிந்து பற்றிப் பெயர்ந்தெனக் காட்டிற் தன்றே. |
29 |
80 | திரைகட னீத்தரங் கொண்மூ வினத்தொடு சேண்போய் நோக்கித் தரையிடை யிழிந்து சென்று தன்பொருள் கொடுபோந் தென்னப் பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை இருபுடை யலைத்து வௌவி யேகிய தெறிநீர்ப் பாலி. |
30 |
81 | பாரிடை யினைய பண்பிற் படர்ந்திடு பாலி யந்தத் தாருயி ரனைத்துந் தத்த மருவினைக் கமைத்த நீராற் சேருறு கதிக ளென்ன* மரபினிற் றிறமே யென்னத் தாருவின் கிளைக ளென்னத் தனித்தனி பிரிந்த தன்றே. |
31 |
( * சர்வ சங்கார காலத்தில் எல்லா வுயிர்களும் ஒடுங்குங்கால்,
தத்தம் வினைக்கு அமைந்த கதிகளை அடையும் என்பது நூற்றுணிபு )
82 | கால்கிளர் கின்ற நீத்தங் கவிரிதழ்க் கலசக் கொங்கைச் சேல்கிளர் கரிய வுண்கட் டிருநுதல் மிழற்றுந் தீஞ்சொல் மேல்கிளர் பரவை யல்குன் மெல்லிய லறன்மென் கூந்தல் மால்கிளர் கணிகை மாதர் மனமெனப் போயிற் றாமால். |
32 |
83 | பாம்பளை புகுவ தேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர் தூம்பிடை யணுகு மாற்றாற் சொன்முறை தடைசெய் வோரில் தாம்புடை பெயரா வண்ணந் தலைத்தலை தள்ளு மள்ளர் ஏம்பலோ டார்க்கு மோதை யுலகெலா மிறுக்கு மாதோ. |
33 |
84 | பணையொலி யிரலை யோதை பம்பையின் முழக்க மங்கட் கிணையொலி மள்ள ரார்ப்புக் கேழ்கிளர் தரங்க நன்னீர் அணையொலி யவற்றை வானத் தார்ப்பொலிக் கவனி தானும் இணையொலி காட்டிற் றோவென் றெண்ணுவார் விண்ணுளோரும். |
34 |
85 | இயல்புகுங் களிநல் யானை யினந்தெரிந் தெய்து மாபோல் கயல்புகுந் துலவுஞ் சின்னீர்த் தடமபுகுங் காமர் காவின் அயல்புகுங் கோட்ட கத்தி னகம்புகு மார்வத் தொடி வயல்புகுங் களிப்பு நீங்கா மாக்களின் மயங்கு மாதோ. |
35 |
86 | எங்கணு நிறைந்து வேறோ ரிடம்பிறி தின்மை யாகச் சங்கமா யீண்டு மள்ளர் தாங்குபல் லியமு மார்ப்பப் பொங்கிய நகரந் தோறும் புறமெலாம் வளைந்த நீத்தம் அங்கண்மா ஞாலஞ் சூழு மளககரை நிகர்த்த தாமே. |
36 |
87 | மாறடு மள்ள ருய்ப்ப மருதத்தி னிறைந்து விஞ்சி ஏறிய நார மீட்டு மிருங்கட னோக்கிச் சென்ற வேறுகொள் புலனை வென்றோர்* மேலைநன் னெறியுய்த் தாலுந் தேறிய வுணர்வி லாதோர் செல்வுழிச் செல்வ ரன்றே. |
37 |
( * புலனை வெல்லுதல் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல்அடக்கித் தன்
வசப்படுத்தல்.)
81 | வாளெனச் சிலைய தென்ன வால்வளை யென்னத் தெய்வக் கோளெனப் பணிக ளென்னக் குலமணி குயிற்றிச் செய்த மீளிவெஞ் சரங்க ளென்ன வேலென மிடைந்து சுற்று நாளெனப் பிறழு மீன்க ணடவின நார மெங்கும். |
38 |
89 | மாண்டகு பொய்கை தோறும் வயறொறு மற்று மெல்லாம் வேண்டிய வளவைத் தன்றி மிகுபுனல் விலக்கு கின்ற ஆண்டகை மள்ளர் தம்பா லமைந்திடுங் காலை யெஞ்சி ஈண்டிய வெறுக்கை வீசும் இடைப்படு வள்ள லொத்தார். |
39 |
ஆகத் திருவிருத்தம் - 89
- - -
90 | அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண் மைவரு கடலுடை மங்கை தன்னிடை மெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச் செய்விக ணாடியே யினைய செய்குவார். |
1 |
91 | சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங் கோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை காட்டினர் நிரைபட வுழுப காசினி பூட்டுறு பொலன்மணி யாரம் போலவே. |
2 |
92 | காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன கோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ ஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம் பாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால். |
3 |
93 | சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய வால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச் சூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக் கோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே. |
4 |
94 | உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை புலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய வலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும் நிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய. |
5 |
95 | நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல் ஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற் சேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க் காறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே. |
6 |
96 | குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை வைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி அச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா நச்சின மகளிரை நினைந்து நைந்துளார். |
7 |
97 | வாக்குறு தேறலை வள்ள மீமிசைத் தேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார் நோக்குறு மாடியி னுனித்து நோக்கினர் மேக்குறு காதலின் மிசைதன் மேயினார். |
8 |
98 | வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு மூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர் பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர் ஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார். |
9 |
99 | அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும் வந்தடுத் தவரொடு மயக்கு தேறலை இந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந் தந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார். |
10 |
100 | விள்ளுறு நாணினர் விரகத் தீயினர் உள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர் தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார் கள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே. |
11 |
101 | பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந் தளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார் தௌ¤ப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர் களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ. |
12 |
102 | இன்னன பற்பல வியற்றி யீண்டினர் உன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக் கன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில் துன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார். |
13 |
103 | மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார் கள்ளுறு புதுமணங் கமழும் வாலிதழ் உள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய வௌ¢ளிய குமுதமென் மலரின் மேவுமே. |
14 |
104 | நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு ஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே அட்டன ராமென வடாத வான்களை கட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார். |
15 |
105 | ஏயின செயலெலா மியற்றி வேறுவே றாயிடை வேண்டுவ தமைய வாற்றியே மாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந் தாயென வளர்த்தனர் சாலி யீட்டமே. |
16 |
106 | மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை மின்சுடர் தூணியின் மேல கீழுறத் தன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற் பொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே. |
17 |
107 | பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை வச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை உச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக் குச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால். |
18 |
108 | சுற்றுறு ப·றலைச் சுடிகை மாசுணம் பெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே முற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ நெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே. |
19 |
109 | மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப் பொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர் கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர் மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே. |
20 |
110 | மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப் பாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே மேலுறு சாலியின் விளைவு நோக்கியே கோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே. |
21 |
111 | அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல் நெரிந்திடச் சேடனு நௌ¤ந்து நீங்கிடத் தெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால் விரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே. |
22 |
112 | ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி சான்றினர் பரனொடு தமது தெய்வதம் போற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார். |
23 |
113 | தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை அங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய பொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே எங்கணு நெற்குவை யியற்று வாரரோ. |
24 |
114 | களப்படு கைவலோர் கால்க ளான்முகந் தளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற். குளப்படு கடன்முறை யுதவி மள்ளருக் களித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர். |
25 |
115 | சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம் மிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர் பொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே. |
26 |
116 | தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய குலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென நலத்திடை வந்திடு முதிரை நல்வளம் நிலத்திடை யொருசிறை விளையு நீரவே. |
27 |
117 | பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந் திறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச் சிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும் மறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே. |
28 |
118 | முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும் விழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார் மழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி உழவொலி யல்கலு முலப்பு றாதவே. |
29 |
119 | காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும் நீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும் ஆலையங் கழனியும் கநங்கற் காயுத சாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே. |
30 |
120 | நெறியிடை யொழுகலா விழுதை நீரரை மறலிதன் னகரிடை வருத்தல் போலுமால் குறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை அறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே. |
31 |
121 | ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங் கூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ் சாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை ஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ. |
32 |
122 | மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின் இட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல் தொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை அட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே. |
33 |
123 | கூடின தேனிசை யிளமென் கோகிலம் பாடின மயில்சிறை பறைய டித்தன வாடின வஞ்சிதந் தலைய சைத்திடா நாடின பாதவம் புகழ்வ நாரையே. |
34 |
124 | காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே பாசடை மாதுளை சினையிற் பைங்குயில் பேசிட நிற்பன பெறீஇயர் வம்மென வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே. |
35 |
125 | சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி துய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால் உத்தம முதலிய குணத்தி னோங்கிய முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. |
36 |
126 | வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள் தேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய காசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல் மாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே. |
37 |
127 | வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள் காசுநூன் மேகலை பரியக் கைவளை பூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண் டாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே. |
38 |
128 | கானுலா நந்தன வனமுங் காரென வானுலாந் தண்டலை மருங்கும் வைகலும் வேனிலா னன்னவர் மகளிர் மேயினார் ஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே. |
39 |
129 | அசும்புறு மகன்புன லறாத சூழலின் விசும்புற வோச்சிய விரைமென் றாதினாற் பசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத் தசும்பெலாம் வௌ¢ளிய தாக்குந் தாழையே. |
40 |
130 | உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார் சுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை தெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம் எற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே. |
41 |
131 | கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன் மீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா வானதோர் மருதவைப் படையுந் தன்மைய வானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால். |
42 |
132 | மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல் கோகில மார்தருக் குழத்தி னூசன்மேற் பாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக் காகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார். |
43 |
வேறு
133 | ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை வீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப் பேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா ஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல். |
44 |
134 | கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர் ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச் சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப் பார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை. |
45 |
வேறு
135 | கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல் அடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த் தடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக் குடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே. |
46 |
136 | பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில் நாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற் கோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே. |
47 |
137 | கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும் பொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது நலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந் நிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே. |
48 |
138 | யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை வாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக் கேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப் பூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே. |
49 |
139 | கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில் வஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற் குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே. |
50 |
140 | அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள் நன்றென வினையின்மே னடந்த நாயகர் இன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால் ஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர். |
51 |
141 | ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும் வாடுவ தாகியே மதன வேர்வுறாக் கூடிய மகளிருங் குமரர் தங்களை ஊடிய மகளிரு முலப்பின் றாயினார். |
52 |
142 | அகனமர் கணிகைய ரடிகள் சூடியே முகனுறு முவகையான் முயங்கி யன்னவர் நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல் தகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே. |
53 |
143 | வாளைக ளிகல்புரி வயலும் வாலியும் பாளையொ டுற்பலம் பதும நாறுமால் வேளயர் தடங்கணார் விரைமென் றாளினை காளையர் குஞ்சியுங் காரமு நாறுமால். |
54 |
144 | சேவக மணைவன கரிகள் சேனைகள் காவக மணைவன கலைகள் புள்ளினம் பூவக மணைவன பொறிவண் டாயிடைப் பாவக மணைவன பாட லாடலே. |
55 |
145 | ஆடக மாமதி லம்பொற் கோபுரம் நீடிய மண்டப நெறிகொ ளரீவணம் பாடலொ டாடிடம் பிறவும் பாலிநன் னாடுள பதிதொறு நண்ணி யோங்குமே. |
56 |
146 | தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய மண்டல மெங்கணு மதிக்க நின்றதோர் தொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித் தண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம். |
57 |
ஆகத் திருவிருத்தம் - 146
- - -
147 | மாவுல கெங்கு மலர்த்தட மாகத் தாவறு சீர்புனை தண்டக நாடே மேவிய கஞ்சம தாவதின் மேவும் தேவினை யொத்தது சீர்பெறு காஞ்சி. |
1 |
148 | பூக்கம லத்துறை புங்கவன் மாயோன் பாங்குறை தேவர்பல் லாணடிசை பரவ ஓங்கிய புள்ளின மூர்ந்தவ ணுறலால் ஆங்கவர் மவு மரும்பத மாமே. |
2 |
149 | இன்னிய றேர்தரு மிந்திரன் முதீலா மன்னிய வானவர் மற்றுளர் யாருந் துன்னின ராயிடை சூழந்துறை செயலாற் பொன்னக ரென்று புகன்றிட லாமால். |
3 |
150 | கின்னரர் சித்தர் தெரீஇயத னாலத் தந்நிக ரில்லவர் தம்பதி போலும் பன்னக வேந்தர் பராயின ருறலால் அன்னவர் தம்பதி யாகிய தன்றே. |
4 |
151 | எண்டிசை காவலர் யாவரு மீண்டப் பண்டவர் பெற்ற பதங்களை மானும் மண்டல மார்சுடர் மற்றைய வுறலால் அண்டமு மாகிய தப்பதி யென்பார். |
5 |
152 | இப்படியாவரு மெதிய திறனால் ஒப்பன போல வுரைத்திட லொப்போ அப்பதி யேயத னுக்கிணை யன்றிச் செப்பரி தாற்பிற சீர்கெழு காஞ்சி. |
6 |
153 | மறைமுத லோர்தனி மாவி னிழற்கீர் உறைதரு காஞ்சி தனக்குல கெல்லாம் பெறுமய னாதியர் பெற்றிட வன்னான் நிறுவிய தொன்னக ரோநிக ராமே. |
7 |
154 | மேயதொல் லூழியில் வேலைக ளேழுந் தூயத னெல்லை சுலாவுற நிற்றல் ஆய பரஞ்சுட ராங்குள தாயும் மாயைகள் சுற்றிய மன்னுயி ரொக்கும். |
8 |
வேறு
155 | பாழி மால்வரை யெறிதிரை வையகம் பலவும் வாழு மண்டங்கள் சிற்றுரு வமைந்துவந் தென்னச் சூழு நேமியம் புள்ளின முதலிய சுரங்கும் ஆழி நீத்தம் தொத்தது மதிற்புறத் தகழி. |
9 |
156 | மண்ட லப்பொறை யாற்றுவான் பற்பல வகுத்து முண்ட காசன மீமிசை யிருந்திடு முதல்வன் அண்ட கோளகை தாங்கவோர் சுவர்த்தல மதுவும் பண்டு செய்தெனவோங்கிய நெடுமதிற் பரப்பு. |
10 |
157 | சென்று மூவெயி லழலெழ நகைத்தவன் செழும்பொற் குன்று தோளுற வாங்கலு முலகெலாங் குலைந்த அன்று நான்முக னனைத்தையுந் தாங்குகென் றருள நின்ற தென்னவும் பாதலம் புகுந்துமேல் நீண்ட. |
11 |
158 | மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர் மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப் போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை. |
12 |
159 | முதிரை வண்ணமா நவமணிக் குவையும்வான் முளைக்குங் கதிரி னெல்லெனும் பொருளுட னேனவுங் காட்டிப் பொதிவ தாகியே முழுவதும் நிரம்புதல் பொருந்தா நிதிய மேயகூ டொத்தது நெடியமா மதிலே. |
13 |
160 | நிறையும் வார்கடல் சுற்றிய நேமியும் நேமிக் குறையு ளாகிய கணிப்பிலா வண்டமு மொப்ப சிறையில் வான்கிரி நிரையெனச் செவ்விதிற் கிளர்ந்து மறுகெ லாந்திகழ் மாளிகைப் பத்திசூழ் மதிலே. |
14 |
161 | தடுக்கு மாற்றலர் நால்வகைப் படையொடுஞ் சாய முடுக்கும் வாள்கொடு விதிர்த்திடு மெழுவினான் முருக்கும் எடுக்கு மெற்றிடு மெறிந்திடும் விழுங்கிடு மீர்க்கும் படுக்குங் கன்மழை சொரிந்திடும் விற்படை பயிலும். |
15 |
162 | உருக்குஞ் செம்பினை வங்கத்தை யிழுதொடு மோச்சும் வெருக்கொ ணேமிக ளெறிந்திடும் வச்சிரம் வீசி இருக்கும் நின்றிடுங் குப்புறுஞ் செறுநரை யிகலி நெருக்குந் தாழ்ந்திடும் உலகளந் தோனென நிமிரும். |
16 |
163 | பீடு தங்கிய பணைமுர சியம்பிடும் பிடிக்குங் கோடு மார்த்திடுந் துடிகளு மொலித்திடுங் கொட்புற் றாடும் மீயுயர் புள்ளையு மெறிந்திடு மரண்மேல் ஓடும் மீளுமக் கதிரையுந் தடுப்பபோல் உந்தும். |
17 |
164 | சூலம் வீசிடுந் தொமரம் வீசிடுஞ் சுடர்வேல் ஆலம் வீசிடுஞ் சுடுமணல் வீசிடு மளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடு மகழியிற் றிள்ளுஞ் சீலம் வீசிய பாரிட மாமெனத் திரியும். |
18 |
165 | திகழும் வெங்கன லுமிழ்ந்திடு மொன்னலர் செலுத்தும் பகழி மாரியை விழுங்கிடும் பறவையிற் படரும் இகழு நாவையும் மனத்தையு மெறிந்திடு மென்னாற் புகழும் நீரவன் றம்மதின் மேலுறும் பொறிகள். |
19 |
166 | பூணி னேர்தரும் பொன்னவாம் புரிசைமேற் புனைந்த வாணி லாநெடுந் துகலிகை பெயர்வன மலரோன் சேணு லாயதீஞ் சுடரேனுங் கோபுர சிகரங் காண வேபல வெகினமாய்த் தேடல்போற் கவினும். |
20 |
167 | ஈர்த்த மாமதி சசியென்ப துலகுளோ ரிட்ட வார்த்தை யல்லது சரதமோ கடிமதின் மருங்கில் தூர்த்த கேதன மவன்மணி மேனியிற் றுடக்கப் போர்த்த வெண்ணிலாக் கஞ்சுகம் பீறியபோலாம். |
21 |
168 | காட்சி மேயவக் கடிமதிற் கதலிகை காணூஉச் சூட்சி நாடிய பரிதியுங் கீழுறத் தொடர்ந்தான் மாட்சி தேய்ந்திலன் வரன்முறை மனப்படு மதியோர் தாட்சி செய்யினு மனையாபா லணுகுமோ தவறு. |
22 |
169 | புடைப ரப்பிய புரிசையி னாற்றிசைப் புறத்துந் தடநி லைப்பெருங கோபுர முளதழ னிறத்துக் கடவு ளுச்சியின் வதனமொன் றின்றியே காண்பான் அடைத லுற்றிடு திசைமுகம் பொருவின அவையே. |
23 |
170 | என்று மாமதிக் கடவுளும் பிறருமீ ரியல்பாங் குன்ற மேயெனக் கீழ்த்திசை யதனொடுங் குடபால் நின்ற கோபுரங் கடக்கலர் வாய்தலி னெறியே சென்று சென்றுபோ யப்புறத் தேகினர் திரிவார். |
24 |
171 | தீபு ரத்திடை மடுத்தவ னாணையாற் சிறந்த மாபு ரத்திடை வான்றொடுங் கடிமதில் வரைப்பில் ஆபு ரத்தவாய்க் கிளர்ந்தவே யமைத்தவன் றென்னக் கோபு ரத்திடைக் கொழுந்துபோ லோங்கிய கொடிகள். |
25 |
172 | மாட மாளிகை மண்டபங் கோபுர மறுகிற் கோடி கோடியின் மேலுமுண் டன்னதார் குணிப்பார் ஆடு கேதனத் தளவையு மன்னதே அகல்வா னுடு போகலா தலமரும் பறவைக ளப்ப. |
26 |
173 | சிகர மால்வரை யன்னமா ளிகைதொறுஞ் சிவணும் மகர தோரண மாடிகள் பலவுற வயங்கல் இகலும் வெய்யகோ ளிரண்டுமா யொருவடி வெய்தி அகல்வி சும்பிடைக் கதிர்களின் புறமறைத் தனைய. |
27 |
174 | செம்பொ னிற்புரி நிலையுடைத் திகிரியந் தேர்கள் அம்ப ரத்திடை வசியுற வீற்றுவீற் றாகுந் தம்ப முற்றல மருவன செய்யகோற் றலையிற் பம்ப ரத்துருத் திரிப்புறக் கறங்கிய படிய. |
28 |
175 | பளிங்கி னாற்செய்த தெற்றியின் றலைமிசைப் பனிதோய் வளங்கொ ணித்திலஞ் செம்மணி குயிற்றிய வைப்பில் துளங்க நாற்றிய பொன்மணிப் பாலிகை தொகுவ குளங்கொ டாமரை மலர்ப்பொகுட் டாயின குறிக்கின். |
29 |
176 | ஓவி யத்தியன் மரகதத தலத்தின தும்பர்த் தாவி லாடகத் தலமிசை நித்திலத் தலமேற் கோவை பட்டசெம் மணித்தலம் பொலிதலாற் கொண்மூ மூவ கைக்கதிர் வியலிடந் தெரிப்பதம் மூதூர். |
30 |
177 | கன்னல் வேளெனும் மைந்தரும் மாதருங் கலந்து மன்னு நித்தில மாளிகைப் பத்தியின் மாடே பொன்ன வாஞ்சிறை மணிமயிற் குழாத்தொடும் போகும் அன்னம் மாமதி முகிலிடை நுழைந்துபோ யனைய. |
31 |
178 | தண்ட மாகியே புவியுறு பணியெலாந் தழுவி அண்ட மீமிசை யிரவியும் மதியமு மடைதல் கண்டு மாளிகைச் சூளிகை மருங்குபோய்க் கவர்வான் கொண்ட சீற்றத்தின் நாவெறிந் தன்னபூங் கொடிகள். |
32 |
179 | தேனை வென்றசொல் லாரொடு மைந்தருந் திளைக்கும் மீன வாவிபோல் வியன்படி கத்தினால் விளங்குந் தான மீமிசைத் தயங்கிய முழுமணித் தலந்தான் வான நின்றிடு தெய்வத மானனே மானும். |
33 |
180 | தேவர் தானவர் முனிவரர் சித்தரோ டியக்கர் வாவு கின்னர ருவணர்கந் தருவர்மற் றுள்ளோர் ஏவ ருந்தம தகன்பதி யிகந்தவ ணெய்தா மேவு சின்றன தனித்தனி யிரக்கைகண் மிகுமால். |
34 |
181 | தூங்கு குண்டிகை யருகுறக் காலெதிர் தூண்டி ஓங்கு நாசிமேல் விதிமுறை நயனங்க ளுறுத்தி ஆங்கொ ராசனத் திருந்தர னடியகத தடக்கிப் பாங்கர் மாதவம் புரிகுநர் சாலைகள் பலவால். |
35 |
182 | பாடு நான்மறை யந்தணர் வேள்விகள் பயில மூடு தண்புகை யண்டமுங் கடந்தன முன்னந் தேடு கின்றதோர் பரஞ்சுடர் மீட்டுமத் திறத்தால் நீடு கின்றதோ வென்றுநான் முகத்தனும் நினைய. |
36 |
183 | நான்ம றைக்குலத் தந்தணர் நவையறு காட்சி ஊன்ம றைத்திடு முயிரென வோம்பிய வொழுக்கார் மேன்மு றைக்கணோ ரைம்புலப் படிற்றினை வென்றோர் வான்ம றைத்திடு மாளிகை வீதியும் மலிந்த. |
37 |
184 | ஏவு பல்படை வலியினர் வெஞ்சம மிகந்தோர் நாவி னான்மறை பயில்பவர் நணுகுறு நலத்தாற் கோவு நீணகர் மறுகெலாங் குருமணிச் சிகரத் தேவு நீணகர் நிலைமையே போல்வது தெரியின். |
38 |
185 | அணியி னோங்கலும் பன்மணிக் குவால்களு மார்வந் தணிவி லாடகக் குவைகளும் பிறவுமுன் றழைப்பக் கணிக ணாணுறு கற்பக மனையன காட்சி வணிக ராவணத் தெற்றிகள் வயின்றொறும் வயங்கும். |
39 |
186 | கங்கை மாமகள் தொல்பெருங் குலத்தர்கா சினியின் மங்கை யாளருள் புரிதரு மகாரெனும் வழக்கோர் செங்கண் மானிகர் வெறுக்கையர் அயன்பதஞ் செர்ந்தோர் துங்க வீதியு மேனையர் மறுகொடுந் தொகுமே. |
40 |
187 | கண்டு கேட்டவை யுண்டுயிர்த் துற்றறி கருவி கொண்ட வைம்புல னொருங்குற நடாத்திய கொள்கைத் தொண்டர் கூட்டமும் விழிவழிப் புனலுகத் தொழுங்கை அண்டர் கூட்டமும் ஆலயந் தொறுந்தொறு மறாவால். |
41 |
188 | ஆதி நான்முகன் எகினத்தி னடிகளு மமலன் பாதி யாளன்றன் உவணத்தி னடிகளும் பனிக்கார் நாத னூர்தரு தந்தியி னடிகளும் நாளும் வீதி வீதிக டொறுந்தொறுங் காண்வர விளங்கும். |
42 |
189 | மாவி னோதையுங் களிற்றின தோதையும் மருங்கின் மேவு தேர்களி னோதையுங் கவிகையாய் விரிந்த காவு சூழ்தரு மன்னர்சீ ரோதையுங் கறங்குந் தேவ துந்துபி யோதையு மிறுத்தில தெருவு. |
43 |
190 | நாட்டி யச்செயல் யாவையுஞ் சிவனது நடனம் பாட்டி சைத்திறம் யாவையு மன்னதே பதியோர் கேட்டி ருப்பன யாவையு மவனிசைக் கேள்வி கூட்டம் யாவையு மன்னவன் றொண்டுசெய் கூட்டம். |
44 |
191 | பாலு றுந்ததி யிழுதுதே னிருக்கைகள் பலவுங் கோல மாகுமந் நகரிடை யாவையுறை கூவல் போலு மாயிடை மாதவத் தவளறம் புரியுஞ் சாலை யாயின வரம்பிலா அடிசிலஞ் சாலை. |
45 |
192 | அளவில் பற்பகல் தம்மினும் நீங்கியோ ரடுத்த கிளைஞர் வந்துழி யெதிர்தழீஇ நன்னயங் கிளத்த உளம கிழ்ந்தவர்க் கூட்டுமின் னடிசில்போ லுறுவோர் எளிதி னுங்கிட வழங்குமால் ஓதன விருக்கை. |
46 |
வேறு
193 | மாட மாளகை வாயி றொறுந்தொறும் நீடு கண்ணுள ராமென நின்றுநின் றாடு சித்திரப் பத்தி யமரரும் நாடி நோக்கி நயந்திடப் பட்டதே. |
47 |
194 | எல்லை தீர்ந்த விரவிக டூண்டிய சில்லி யாழித் திகிரிகண் மானுமால் மல்லன் மாநகர் மைந்தர்க ளுர்தரும் பல்வ யகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. |
48 |
195 | வௌ¢ளை யாதி வியன்கவி யாவையும் தௌ¢ளி தின்மொழி தென்கலை யேமுதல் உள்ள பல்கலை யோதுகின் றார்களும் வள்ளி யோர்களும் மன்றுதொ றீண்டுவார். |
49 |
196 | இகலும் வேழத் தெயிற்றினை யேய்ந்திடும் நகிலி னார்க ணறுங்குழன் மேலிடும் அகலி னாவியு மாய்மணி மாடமேல் முகிலும் வேற்றுமை யின்றி முயங்குமே. |
50 |
197 | பண்ணி னோசையும் பானலை வென்றிடுங் கண்ணி னார்கள் களிநட வோசையுந் தண்ண ரம்பிய றந்திரி யோசையும் விண்ணு ளோர்க்கும் விருந்தென லாயவே. |
51 |
198 | அணிகு லாவு மரம்பையர் காளையர் நணிய தோளை நயப்புற நாகருங் கணிகை மாதரைக் காமுற மேவலான் மணிகொள் காஞ்சி மதனர சாயதே. |
52 |
199 | கூற்றிற் செல்லுங் கொலைக்கரித் தானமும் ஏற்றிற் செல்லு மிடையர்தஞ் சேரியின் ஊற்றிற் செல்லு மொண்பாலு முடனுறா ஆற்றிற் செலலுமவ் வாவணந் தோறுமே. |
53 |
200 | வேறு பண்ணுளர் நரம்பியல் பாணிக் கேற்றிட எண்ணுள கணிகைய ரினத்தொ டாடலுங் கண்ணுள ராடலுங் காம னாடலும் விண்ணுள ராடலும் வெறுப்ப மேவுமே. |
54 |
201 | அரிவையர் மைந்தர்க ளணிந்து நீத்ததே திருமகள் காமுறுஞ் செல்வ மாகுமேற் கருதரு நான்முகக் கடவுட் காயினும் பொருவரு நகர்வளம் புகலற் பாலதோ. |
55 |
202 | வேறு மாறாய்ச் சிறார்க ளெறிந்தாடிய மான்ம தத்தாற் சேறாய்ப் பொற்சுண்ணத் துலர்வாய்ப்பனி நீர்கள் சிந்த ஆறாய்ப் பளிதத் தினில்வாலுகத் தாறு மாகி வேறாய்ப் புவியோ ருணர்வாமென மேய வீதி. |
56 |
203 | தண்டாமரை யேந்திய வானவன் றன்னை யொத்தான் எண்டாவிய மாமத னேந்திழை யாரி லஞ்சி வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தேன் உண்டாடிய தேன்களை யொத்தனர் ஓங்கல் மைந்தர். |
57 |
204 | ஏமங் குலவ முரசங்க ளிரட்ட வாசத் தாமங் கமழ்பந் தரினூடு தமககி யன்ற ஓமங் களின்மா மணஞ்செய் தனரூர் குலாவும் மாமங் கலமே யுலப்பின்றி மலிந்த தன்றே. |
58 |
205 | மாகந் திகழு மகிலாவிகொள் மாட மீதிற் பாகின் மொழியா ரிளமைந்தர்தம் பாலி னோச்சப் போகுஞ் சிவிறிப் பனிநீர்புறஞ் சிந்த வென்று மேகஞ் சிதறும் பெயலென்ன விளங்கும் வீதி. |
59 |
206 | வன்மா முலையேந் தியமங்கையர் மைந்த ரானோர் தொன்மாட மீதி லெறிந்தாடுபொற் சுண்ண மொடு நன்மா மலர்த்தாது விசும்புற நண்ண மேகம் பொன்மா முகிலாய்ப் பனிநீரிற் பொழியு மன்றே. |
60 |
207 | தாராற் பொலிபொற் புயவீரர் தவாது செல்லுந் தேரார்ப்பு நால்வாய்க் கரியார்ப்பும்வெஞ் சேனை யார்ப்பும் ஏரார்ப்பு மிக்க பதிமானவ ரீண்டு மார்ப்புங் காரார்ப்பும் வேலைக் கடலார்ப்புங் கடுத்த வன்றே. |
61 |
208 | வானோக்கி நிற்கு முலகென்னவு மன்ன வன்செங் கோனோக்கி நிற்குங் குடியென்னவுங் கோதி லும்பர் ஆனோர்க்கு நாக ருலகோர்க்கு மவனி யோர்க்கும் ஏனோர்க்கும் நாடும் நகராகி யிருந்த தவ்வூர். |
62 |
209 | கோடு நெறியு மிகலும்மனக் கோட்ட மாய கேடும் பிணியு முதலாகிய கேதம் யாவும் நீடும் பரிவோ டுறைவா ரிடைநீங்க லாலே வீடந் நகரே யெனிலேன்னின் விளம்ப வற்றோ. |
63 |
210 | வேறு ஏமமே தருவாச் சினைகளு மனைத்தா விலைதளிர் செய்யபூந் துகிராக், காமர்பூ மணியா வுதித்தொரு காஞ்சி கண்ணரோ ரைவர்மு கண்டு, தாமினி தருளும் பொய்கையின் மருங்கே தன்னிழல் பிரிகிலா துறலாற், பூமியெண் காஞ்சி மாபுர மெனும்பேர் புனைந்ததப் பொருவிலா நகரம். |
64 |
211 | சுருதியானுறங்கு மிராத்தொறு முடிவிற் றுஞ்சிய வூழிக டோறும், விரையவந் துலக மழித்திடுங் கடலவ் வியன்பதி யெல்லையுட் சிறிதும், வருவதை யஞ்சிப் புறந்தனிற் சூழ வந்தொரு சத்திகாத் திடலாற், பிரளய சித்தென் றொருதிரு நாமம் பெற்றதக் காஞ்சியம் பேரூர். |
65 |
212 | கயிலையி லரனை யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற், பயிலுறு கொடிய வினையிரு ளகலும் பான்மையால் வந்துமா நிழற்கீழ், இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச், செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச் சீரூர். |
66 |
213 | விண்ணுறை மகவான் கரிபுரி தவத்தால் வெற்பதாய்த் தன்னை முன்றாங்கு, புண்ணிய கோடி யிபகிரி மிசையே பொருவிலா வேதியுத் தரத்தில், அண்ணலங் கமலத் திசைமுகன் வேள்வி யாற்றலு மவற் கருள் செய்வான், கண்ணன்வந் திடலால் விண்டுமா புரமாங் கட்டுரை பெற்றதக் காஞ்சி. |
67 |
214 | கார்த்திரு மேனித் தண்டுழாய் மௌலிக் கண்ணனுங் கமலமே லயனும், ஆர்த்திடுந் தரங்கப் பகீரதி மிலைந்த வவிர்சடை யமலனு மாகும், மூர்த்திக டத்த முலகமே போல முன்னியப் பதியமர் செயலாற், சீர்த்திரி மூர்த்தி வாசமா கியபேர் சிறந்ததக் கச்சிமா நகரம். |
68 |
215 | தரணிகண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால், திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில், அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால், வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். |
69 |
216 | வீடுறு முத்தி போகமென் றவற்றில் வெ·கிய வெ·கியாங் கென்றுங், கூடுறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடுந் தன்மையாற் காம, பீடமென் றொருபேர் பெற்றது மலர்மேற் பிரமமே முதலினோர் தவத்தை, நாடினர் செயலால் தபோமய மெனும்பேர் நணியது கச்சிமா நகரம். |
70 |
217 | சகங்களோர் மூன்றி லறம்பெரி துளதித் தரணியித் தரணிமா நகர்க்குள், மிகுந்தரு மத்தின் பலத்தினைத் தரலால் வியன்சகற் சாரமென் றொருபேர், புகும்பரி சுடைய தட்டசித் திகளும் பொருவின்மா தவர்க்கரு டிறத்தாற், பகர்ந்திடுஞ் சகல சித்தியென் றொருபேர் படைத்தது கச்சியம் பதியே. |
71 |
218 | உன்னருங் கயிலை நாயக னுமையை யொருபக னீலியென் றுரைப்ப, அன்னவ டனது காளிமங் கழிப்ப வங்கதி லையைவந் தெழலும், முன்னவ னவளை யிந்நக ரிருந்து முறைபுரிந் தருளென விடுப்பக், கன்னிகாத் திடலாற் கன்னிகாப் பென்னுங் கவின்பெய ருடையது கச்சி. |
72 |
219 | அரியதோர் கயிலைக் கணங்களி லொருவ னானதுண் டீரன்மா லதிபால், பெருமயல் கொள்ளச் சிவனிவ ளடுநீ பிறந்திருந் தின்பமுற் றெம்பால், வருகென நிலமேன் மன்னர்பாற் றோன்றி மற்றவ ளோடுசேர்ந் தரசு, புரிதரு செயலாற் காஞ்சிதுண் டீர புரமெனப் புகலநின் றதுவே. |
73 |
220 | தன்னையே யருச்சித் திடமலர்க் கேகித் தடந்தனிற் கராவின்வாய்ப் பட்டுத், தன்னையே நினைந்து தன்னையே யழைத்த தந்தியைக் காத்தவொண் புயமால், தன்னையே வேண்டித் தழன்மகஞ் செய்யத் தண்டகற் கெண்டிசை யரசு, தன்னையீக் திடலால் தண்டக புரமாந் தனிப்பெயர் பெற்றதத் தனியூர். |
74 |
221 | அழகிய வயோத்தி மதுரையே மாயை யவந்திகை காசிநற் காஞ்சி, விழுமிய துவரை யெனப்புவி தன்னின் மேலவாய் வீடருள் கின்ற, எழுநக ரத்துட் சிறந்தது காஞ்சி யென்றுமுன் னெம்பிரா னுமைக்கு, மொழிதரு நகரந் நகரெனி லதற்கு மூவுல கத்துநே ருளதோ. |
75 |
222 | பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் செயைச், செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும், அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி, கங்கைகா ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம். |
76 |
223 | தொல்லையோர் பிரமன் றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல், செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் சூதம், எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் டிழிந்து, நல்லுமை குறிக்கொண் முதல்வனை வங்கி நயந்தவ னிருந்ததந் நகரம். |
77 |
224 | சமையமா றினையுந் தாயென வளர்த்துச் சராசர வணுக்களுய்ந் திடுவான், அமைதரு மெண்ணான் கறத்தினைப் போற்றி யாதிபீ டத்தில்வீற் றிருக்கும், உமையமர் காமக் கோட்டியைக் கதிரோ னுடுபதி கணங்கள்சூழ் தரலால், இமையவர் தமக்குந் திசைமயக் கறாத வியல்புடைத் தந்நக ரென்றும். |
78 |
225 | பாவமோர் கோடி புரியினு மொன்றாம் பரிவினிற் றருமமொன் றியற்றின், ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கு மின்னதோர் பெற்றியை நாடித், தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச் சனைபுரிந் தங்கண், மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார். |
79 |
226 | கங்கைதன் சிறுவ னருள்பெறு வேதாக் கண்படை கொண்டகா லையினும், அங்கவன் றுஞ்சும் பொழுதினுங் காஞ்சி யழிவுறா திருந்தபான் மையினால், துங்கவெண் பிறையு மிதழியு மரவுஞ் சுராதிபர் முடிகளு மணிந்த, மங்கையோர் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே. |
80 |
227 | அரியபல் லிசையும் மறைபுனல் கங்கை யருஞ்சிலை யிலிங்கமங் குறைவோர், சுரர்தரு வனைத்துங் கற்பக மின்பந் துய்ப்பது வேள்வியூன் பூசை, உரைசெப நடத்தல் வலம்வருந் தன்மை யுன்னலே தியானம்வீழ்ந் திடுதல், பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கலால் எந்நகர்க் குளதே. |
81 |
228 | கணமுகில் செக்கர் போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள், மணிசுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன் வருசூர் துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தன்மால் விசயை, இணையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம். |
82 |
229 | அறுசம யத்திற் கடந்தசை வத்தின் அன்றிவீ டிலதெனத் தெளிந்து பிறரறி யாது தொன்மைபோ லிருந்து பிஞ்சகன் மீதுகன் மலரால், எறிதரு தேரர் அன்பர்தங் கலிங்க மெழிலிகள் நனைத்தலுஞ் சிரத்தை, முறைபுரி சிலைமேல் மோதினோர் முதலோர் முத்திபெற் றுடையதம் மூதூர். |
83 |
230 | ஈசன தருளாற் கயிலையை நீங்கி யிமையமா மயிலறம் புரிவான், காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நீழலிற் பரனைப், பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி, ஆசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லனையகாஞ் சிக்குநே ரதுவே. |
84 |
231 | ஆருயிர் முழுதும் வீடுபெற் றுய்வான் அறம்புரி சாலைய தணித்தாப், பேரர விறைவன் றவத்தின்மு னிருந்த பிலத்திடைக் கோயில் கொண் டென்றும், பூரனி நோற்றுவழிபட வனையாள் பூசனை கொண்டியா வர்க்குங், காரண மான பரசிவ னனந்த கலையொடு நிலையதக் காஞ்சி. |
85 |
232 | இன்னமு முமையாள் நோற்றிடு மாங்கே யிறப்பினும் பிறப்பினும் நிலையாய், மன்னியே யுறினு மொருகண மேனும் வைகினும் மறைகளாந் தனிமா, நன்னிழ லிருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினு மதனை, உன்னினும் முத்தி வழங்குகாஞ் சியைப்போ லுலகில்வே றொருநக ருளதோ. |
86 |
233 | கண்ணுதற் பரனுந் தண்டுழாய் மவுலிக் கடவுளுங் கமலமே லயனும், விண்ணவர்க் கிறையுங் கொற்றமா லினியும் மேலைநாட் பிறந்ததொன் மனுவுந், தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில் கடந்ததண் டகனும், அண்ணலங் கரிகால் வளவனும் பிறரு மரசுசெய் தளித்ததந் நகரம். |
87 |
234 | வேலைசூ ழுலகி னெங்கணு மிருபால் வீட்டினை வெ·கினோர்க் குதவும், ஆலய நூற்றெட் டுள்ளமற் றவற்றுள் ஐம்முகப் பரஞ்சுட ரமருங், கோலமார் நிலய மிருபது மாயோன் கோநக ரெட்டுமாக் குழுமி, நாலெழு தான முள்ளவந் நகர்போல் நாம்புகழ் நகரமற் றெவனோ. |
88 |
235 | கச்சபா லயமே கம்பமே மயானங் கவின்கொள்கா ரோணமா காளம், பச்சிமா லயநல் லநேகபங் கடம்பை பணாதர மச்சரம் வராகம், மெய்ச்சுர கரமுன் னிராமம்வீ ரட்டம் வேதநூ புரமுருத் திரர்கா, வச்சிர னகரம் பிரமமாற் பேறு மறைசையாஞ் சிவாலய மிருபான். |
89 |
236 | கரிகிரி யட்ட புயந்திரு வெ·காக் கருதுமூ ரகஞ்சகா ளாங்கஞ், சுரர்புகழ் நிராகா ரந்நிலாத் திங்கட் டுண்டநற் பாடக மினைய, அரிதிரு முற்ற மெட்டவை யன்றி அறுபதி னாயிர நிலயம் பரசிவன் சத்தி குமரர்மால் புறத்தோர் பலரும்வீற் றிருப்பதப் பதியோ. |
90 |
237 | ஒன்றுதீ விளக்க மீரிட மொருமூன் றுற்றிடு தெற்றிநான் கரணம், நின்றிடு தருவைந் தாறுபுள் ளேழு நெடுநதி யெண்பொது வொன்பான், மன்றலம் பொய்கை வியன்சிலை யொருபான் மன்றவை பத்தின்மே லோன்று, நின்றமர்ந் தொழுகு நெறியில்அற் புதமாய் நிகரிலா துறையுமந் நகரம். |
91 |
238 | சிறந்திடு மதியு மிரவியு மாழ்கச் செகமேலாந் தனதொளி பரப்பி, அறம்புரி காமக் கோட்டிமந் திரத்து ளம்மைவாழ் பிலத்தினு ளழியா துறைந்திடு தூண்டா விளக்கமொன் றுதித்த வுயிர்த்தொகை யிறந்திடா விடமொன், றிறந்திடு முயிர்கள் பிறந்திடா விடமொன் றெம்பிரா னிருந்தவீ ரிடமே. |
92 |
239 | தோற்றுயிர்க் குணவு நல்குமோர் தெற்றி சொற்றவை யுதவுமோர் தெற்றி, தேற்றுசொன் மூகர்க் களிக்குமோர் தெற்றி தெற்றிமூன் றிவைநக ரெல்லை, ஈற்றினிற் கீழபா லளக்கருந் தென்பா லியற்பெரும் பெண்ணைநன் னதியும், மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்புநான் கரணே. |
93 |
240 | மறைகளி னுருவாய்ப் பொன்மலர் தனிமா மலரொடு காயிலா தென்றுஞ், செறிதரு பலங்க ளுதவிநுங் கினர்க்குச் சித்திகள் வழங்குறு மெகினம், வெறிமலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை நோக்குமோ ரத்தி, நறுநிழல் பிரிய திருந்ததோர் காஞ்சி நன்னகர் தன்னில்ஐந் தருவே. |
94 |
241 | உம்பரூண் பகிருஞ் சாதக மணிக ளுதவிடு மன்ன நூலுரைத்துக், மொம்புறு கிளைளை யலகுசொல் லாந்தை குறைபெறிற் கூவுறாக் கோழி, இம்பரிற் பாவந் துடைத்திடு நேமி இவையறு புள்ளெழு நதிதான், கம்பைநற் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சிபொன் மண்ணிவெ·காவே. |
95 |
242 | குரைபுனல் வேட்டோர்க் குதவியே திரியுங் கூவலம் பொதுக்குறு முயல்போய்க், கரிதொடர் பொதுவே ழிசையுறு பொதுமால் கண்டுயின் றிடுபொது வேறோர், உருவுசெய் பொதுவோர் புற்றின்மா முழவ மொலித்திடும் பொதுத்திசை மயக்கம், புரிதரு பொதுவென் னம்மைநோற் றருளும் பொற்பொது விவைகள் எண்பொதுவே. |
96 |
243 | முன்னுறு பிணிகள் மாற்றிடும் பொய்கை முதல்வர்கள் முடிவுறுங் காலைச், செந்நிற மாகும் பொய்கைமுக் காலந் தெரித்திடும் பொய்கைகண் ணுதலோன், தன்னடி காட்டும் பொய்கைவேண்டியது தந்திடும் பொய்கைமெய்ஞ் ஞானம், பொன்னிறஞ் செல்வம் வசீகரந் தருநாற் பொய்கையோ டொன்பதாம் பொய்கை. |
97 |
244 | விடந்தனை யகற்று மொருகலா ருயிர்கள் மெய்ப்பிணி மாற்றிடு பொருகல், அடைந்தவ ரெல்லா மிமையவ ராக வளித்திடு மொருகல்வெம் படையால், தடிந்திட வேறாய்த் துணிபடு முடலஞ் சந்துசெய் வித்திடு மொருகல், நெடும்படை வரினு மவையிரிந் தோட நிலைபெறீஇ நிற்குமாங் கொருகல். |
98 |
245 | துஞ்சினர் தம்மை யெழுப்புமாங் கொருகல் தொல்வழக் கறுத்திடு மொருகல், எஞ்சலி னிதியங் கெடுத்துளோர் வினவி லீனெக் காட்டிடு மொருகல், விஞ்சிய வினைக டீர்த்திடு மொருகல் வேந்தருக் கரசிய லுதவித், தஞ்சம தாக நின்றிடு மொருகல் தக்ககல் லையிரண் டவையே. |
99 |
246 | அயன்மனைச் சென்றோர் கணவரைப் பிழைத்தோர் அடிகளை யிகழ்ந்துளோர் அணுகில், துயருறு மூகை யாக்குமோர் மன்றஞ் சோரர்முன் சுழலுமோர் மன்றம், வியனிறம் பலவாத் தோன்றுமோர் மன்றம் விஞ்சைகள் வழங்குமோர் மன்றம், மயல்பரி கின்ற பொழுதொடு திசையின் மயக்கறத் தெளிக்குமோர் மன்றம். |
100 |
247 | நாகரூ ருய்க்கும் பிலத்ததோர் மன்றம் நவமணி யுதவுமோர் மன்றம், மாகர்பே ரமிர்த மிருக்குமோர் மன்றம் வடிவினை மறைப்பதோர் மன்றம், மேகநின் றறாது பொழியுமோர் மன்றம் வியன்பகல் கங்குலாக் கங்குல், ஆகிய பகலா விருப்பதோர் மன்றம் ஐயிரண் டொன்றுமன் றவையே. |
101 |
248 | ஈங்கிவை யன்றிச் சிலைகளுந் தருவு மிடங்களுங் கூவலும் நதியும், பாங்குறு குளனுந் தீர்த்தமும் பிலமும் பழனமுஞ் சோலையும் பிறவும், ஆங்கவை யனந்த கோடியுண் டோரொன் றளவில்அற் புதத்தன அவற்றைப், பூங்கம லத்தோன் சுருக்கற விரித்துப் புகலினு முலப்புற வற்றோ. |
102 |
249 | தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வங்கிக், கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் குணர்ந்து, மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த, பாட்டினில் அங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமயனுக் கெளிதோ. |
103 |
250 | வேறு சொற்படு மினைய காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண் கற்புறு மிமைய வல்லி கருணையால் வைகி நோற்கும் பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில் எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே. |
104 |
251 | ஆவதோர் குமர கோட்ட மதனிடை யரன்கண் வந்து தூவுடை யெ·க மொன்றாற் சூர்முத றொலையச் செற்றுத் தேவர்வெஞ் சிறையை மாற்றிச் சேண்மக பதிக்கு நல்கி மேவிய குமர மூர்த்தி வியத்தக வுறையும் மாதோ. |
105 |
252 | மேவருங் கூடல் மேலை வெற்பினில் அலைவாய் தன்னில் ஆவினன் குடியி னல்லே ரகந்தனிற் றணிகை யாதிப் பூவுல குள்ள வெற்பிற் பொற்புறும் ஏனை வைப்பிற் கோவில்கொண் டருளி வைகுங் குமரகோட் டத்து மேயோன். |
106 |
253 | வச்சிர மெடுத்த செம்மல் வைகிய துரக்கந் தன்னில் அச்சுதன் பதத்துக் கப்பா லானதன் பதத்தில் விண்ணோர் மெச்சுறு கந்த வெற்பில் வீற்றிருந் தருளு மாபோல் கச்சியிற் குமர கோட்டங் காதலித் தமருங் கந்தன். |
107 |
254 | ஈண்டுள தரணி முற்று மெல்லைதீர் வான வைப்பும் ஆண்டகை மகவான் சீரு மம்புயன் முதலோர் வாழ்வும் மாண்டிடல் பிறந்த லின்றி மன்னிய வீடும் போற்றி வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும். |
108 |
255 | கொண்டலை யளக்கு நொச்சிக் குமரகோட் டத்துச் செவ்வேள் கண்டிகை வடமுந் தூநீர்க் கரகமுங் கரத்தி லேந்திப் பண்டையி லயனை மாற்றிப் படைத்தருள் வேடந் தாங்கி அண்டர்க ளெவரும் போற்ற வருள்புரிந் தமர்ந்தா னன்றே. |
109 |
256 | ஆயதோர் காஞ்சி மூதூ ரதனிடை யம்பு யத்தின் மேயவன் றனது புந்தி விமலமாம் பொருட்டான் மேனாள் மாயவன் கமட மாகி வழிபடு தலத்தின்* முக்கண் நாயகன் றனையர்ச் சித்து நாமக ளுடனாங் குற்றான். ( * மாயவன் கமடமாகி வழிபடுதலம் - கச்சபாலயம். ) |
110 |
257 | உற்றிடு கின்ற நாளி லுலகிலில் லறத்தை யாற்றி நற்றவம் பலவும் போற்றி நண்ணிய முனிவ ரேல்லாம் மற்றவ ணேகிக் கஞ்ச மலர்மிசை யிருந்த வையன் பொற்றிரு வடியைத் தாழ்ந்து போற்றினர் புல லுற்றார். |
111 |
258 | அத்தகே ளிந்நாள் காறும் அடியமில் லறத்தை யாற்றி** அத்தல நகர மெங்கு மிருந்தன மினிமேல் நாங்கள் சித்தம தொருங்க நோற்றுச் செய்கட னியற்றி வைக மெய்த்தவ வனம தொன்றை விளம்பியே விடுத்தி யென்றார். ( ** இல்லறத்தை ஆற்றல் - தென்புலத்தார் தெய்வம், விருந்து, சுற்றம் முதலியோரை உபசரித்தல். ) |
112 |
259 | என்றலுந் தருப்பை யொன்றை யேழுல களித்தோன் வாங்கி ஒன்றொரு திகிரி யாக்கி யொய்யென வுருட்டிப் பாரில் இன்றிதன் பின்ன ராகி யெல்லிரு மேகி யீது நின்றிடும் வனத்தி னூடே நிலைப்பட விருத்தி ரென்றான். |
113 |
260 | திருப்பது மத்து வள்ளல் சேவடிக் கமலந் தாழா விருப்பொடு விடைகொண் டேக விரைவினி லன்னான் விட்ட தருப்பையின் நேமி சென்றோர் தனிவனத் திறுத்த லோடும் இருப்பிட மெமக்கீ தென்னா இருந்தவ ரிருந்தா ரங்ஙன். |
114 |
261 | தாமரை யண்ண லுய்த்த தருப்பையின் நேமி தன்னால் நாமம தொன்று பெற்ற நைமிசா ரணியம் வைகுந் தூமுனி வரர்க ளெல்லாஞ் சொல்லருந் தவத்தை யாற்றி மாமறை நெறியி னின்று மகமொன்று புரித லுற்றார். |
115 |
262 | அகனமர் புலனோர் நான்கு மான்றமை பொருட்டா லாங்கோர் மகவினை செய்து முற்றி வாலிதா முணர்ச்சி யெய்தி இகலறு முளத்த ராகி யிருந்தன ரிதனை நாடிச் சுகனென வுணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான். |
116 |
263 | முழுதுணர் சூதன் றன்னை முனிவரர் கண்டு நேர்போய்த் தொழுதனர் பெரியோய் எம்பாற் றுன்னலா லின்ன வைகல் விழுமிது சிறந்த தென்னா வியத்தகு முகமன் கூறித் தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெருஞ் சாலை யுய்த்தார். |
117 |
264 | திருக்கிளர் பீட மொன்று திகழ்தர நடுவ ணிட்டுச் சுருக்கமில் கேள்வி சான்ற சூதனை யிருத்தி யாங்கே அருக்கிய முதல நல்கி யவனது பாங்க ராகப் பொருக்கென யாரும் வைகி யி·தொன்று புகல லுற்றார். |
118 |
265 | முந்தொரு ஞான்று தன்னில் முளரியந் தேவன் சொல்லால் வந்திவ ணிருந்தே மாக மற்றியாம் புரிந்த நோன்பு தந்தது நின்னை யற்றாற் றவப்பயன் யாங்கள் பெற்றேஞ் சிந்தையி னுவகை பூத்தேஞ் சிறந்ததிப் பிறவி யென்றார். |
119 |
266 | அன்னது சூதன் கேளா ஆதியம் பரனை யேத்தி மன்னிய வேள்வி யாற்றி வாலறி வதனை யெய்தித் துன்னிய முனிவிர் காணுந் தொல்குழு வடைத லன்றோ என்னிக ராயி னோருக் கிம்மையிற் பெறும்மே றென்றான். |
120 |
267 | அவ்வழி முனிவர் சொல்வார் அருமறை கண்ட வண்ணல் செவ்விய மாணாக் கர்க்குட் சிறந்துளோய் திரற்சூ ராவி வவ்விய நெடுவே லண்ணல் மாண்கதை தேர்வான் பன்னாள் இவ்வொரு நசைகொண் டுள்ளே மியம்புதி யெமக்க தென்றார். |
121 |
268 | அம்மொழி சூதன் கேளா அழல்படு மெழுகே யென்னக் கொம்மென வுருக வுள்ளங் குதூகலித் தவச மாகி மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை யரும்ப வாசான் பொய்ம்மையில்படிவ முன்னித் தொழுதிவை புகலலுற்றான். |
122 |
269 | மன்னவன் மதலை யாசான் மாமகன் றனது மைந்தன் பன்னுசொற் கொள்வோன் ஈவோன் வழிபடு பண்பின் மிக்கோன் என்னுமிங் கிவருக் கீவ தேனைநூல் உங்கள் போலச் செந்நெறி யொழுகு வார்க்கே செப்புவன் புராணம் முற்றும். |
123 |
270 | தனைநிகர் பிறரின் றாய சண்முகற் கன்பு சான்ற முனிவிர்காள் உரைப்போர் கேட்போர் முத்திசேர் காந்தத் துண்மை வினவினீ ரதனை யின்னே விளம்புவன் புலன்வே றின்றி இனிதுகேண் மிக ளென்னா எடுத்திவை இயம்ப லுற்றான். |
124 |
ஆகத் திருவிருத்தம் - 270
- - -
271 | முந்தொரு காலத்தின் மூவுல கந்தன்னில் வந்திடு முயிர்செய்த வல்வினை யதனாலே அந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்றார். |
1 |
272 | நெற்றியில் விழிகொண்ட நமலன தருளாலே அற்றமில் மறையெல்லா மாதியின் வரலாலே மற்றத னியல்பெல்லாம் மயலற வேநாடித் தெறறென வெவராலுஞ் செப்புவ தரிதாமால். |
2 |
273 | ஆனதொர் பொழுதின்க ணமரரும் முனிவோரும் மாநில மிசைவைகும் மாக்களு மிறையுள்ள ஞானம திலராகி நவின்மறை நெறிமாற்றித் தீநெறி பலவாற்றிப் பனுவல்கள் சிலசெய்தார். |
3 |
274 | அவனியி லறமெல்லா மருவினை யெனநீக்பிப் பவநெறி யறமென்றே பற்பல ருஞ்செய்யப் புவனம துண்டோனும் போதனு மதுகாணாச் சிவனரு ளாலன்றித் தீர்கில திதுவென்றார். |
4 |
275 | வேறு இன்ன பான்மையை யெண்ணி யிருவரும் பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந் துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக் கன்னி பாகன் லேகினார். |
5 |
276 | அந்தில் செம்பொ னணிமணிக் கொயிலின் முந்து கோபுர முற்கடை யிற்புகா நந்தி தேவரை நண்பொடு கண்டுநீர் எந்தை யார்க்கெம் வரவிசைப் பீரென்றார். |
6 |
277 | தேவ தேவன் திருமுனன ரேகியே காவல் நந்திக் கடவுள்பணிந் தெழீஇப் பூவை வண்ணனும் போதனும் புங்கவர் ஏவ ருஞ்செறிந் தெய்தின ரீண்டென்றான் |
7 |
278 | என்ற காலையின் யாரையு மிவ்விடைக் கொன்றை சூடி கொணர்கெனச் செப்பலும் நன்ற தேயென நந்தி வணங்கியே சென்று மான்முதற் றேவரை யெய்தினான். |
8 |
279 | செம்மை போகிய சிந்தைய ரைக்கெழீஇ எம்மை யாளுடை யானரு ளெய்தினான் உம்மை யங்கு வரநுவன் றானினி வம்மி னீரென வல்லையிற் கூவினான். |
9 |
280 | விளித்த காலை விழிவழி போதநீர் துளிக்க நின்று தொழுது கவலொரீஇக் களிக்கு நெஞ்சினர் கண்ணுத லெந்தைமுன் அளித்தி யாலென் றவனுட னேகினார். |
10 |
281 | புடைக டந்திடு பூதர்கள் போற்றுமத் தடைக டந்து தடுப்பரும் வேனிலான் படைக டந்தவர் பாற்படு மெணணிலாக கடைக டந்துபின் அண்ணலைக் கண்டனர். |
11 |
282 | முன்ன ரெய்தித் தொழுது முறைமுறை சென்னி தாழ விறைஞ்சினர் சேணிடைத் துன்னு மாதரந் தூண்டவந் தண்மினார் உன்னு மன்பின் உததியி னாழந்துளார். |
12 |
283 | ஈர்க்கும் பாசத் திருவினை யின்றொடே தீர்க்கின் றாமிவ ணென்னுஞ் செருக்கினால் தூர்க்கின் றார்மலர் சோதிபொற் றாண்மிசை போர்க்கின் றார்மெய்ப் பொடிப்பெனும் போர்வையே. |
13 |
284 | நேய முந்த நெடும்பகல் நீங்கிய தாயெ திர்ந்திடு கன்றின் தகைமையாய்த் தூய வந்தனையோடு தொழுமவர் வாயின் வந்தன வந்தன போற்றினார். |
14 |
285 | அண்ண லீசன் வடிவை யகந்தனில் எண்ணி னெல்லையி லின்பம் பயக்குமால் கண்ணி னேர்வரு காட்சிய ராயிடின் ஒண்ணு மோவவர் தஞ்செய லோதவே. |
15 |
286 | மேலை வானவர் வேந்தொடு மெம்பிரான் சீல மேய திருமுன்பு மேவினார் மாலு நான்முகத் தண்ணலும் வந்திரு பாலு மாகிப் பரவின ரென்பவே. |
16 |
287 | வேறு அம்புயா சனமுடை யண்ண லாழியான் உம்பரோ டித்திற முற்றுப் போற்றுழிச் செம்பொனேர் முடிமிசைத் திங்கள் சேர்த்திய எம்பிரா னருள்புரிந் தினைய கூறுவான். |
17 |
288 | ஒன்றொரு குறைகளு முறாத பான்மையால் நன்றுநும் மரசியல் நடந்த வோவெனாக் குன்றவில்லுடையவோர் குழகன் செப்பலும் நின்றமால் தொழுதிவை நெறியிற் கூறுவான். |
18 |
289 | ஆதியி லயன்படைப் பல்ல தென்னருண் மேதியன் அடுதொழி லேனை விண்ணவர் ஏதமில் செயன்முறை யாவுங் கண்ணுதல் நாதநின் னருளினால்நடந்த நன்றரோ. |
19 |
290 | கருமணி மிடறுடைக் கடவு ளின்னுநீ அருளுவ தொன்றுள ததனைக் கூறுவன் இருநில மேலவர் யாரும் நின்றனைப் பரமென வுணர்சிலர் மாயைப் பான்மையால். |
20 |
291 | நின்றன துரிமையை நிகழ்த்தி மேன்மையா என்றனை யயன்றனை யெண்ணு வார்சிலர் அன்றியும் நின்னுடன் அநேகர் தம்மையும் ஒன்றென வேநினைந் துரைக்கின் றார்சிலர். |
21 |
292 | காலமுங் கருமமுங் கடந்த தோர்பொருள் மூலமுண் டோவென மொழிகின் றார்சிலர் மேலுமுண் டோசில விளம்ப விஞ்சையின் பாலுறு முணர்ச்சியே பரமெண் பார்சிலர். |
22 |
293 | ஆற்றுறு புனல்படிந் தழுக்கு நீக்கலார் சேற்றிடை வீழந்தென மறைகள் செப்பிய நீற்றொடு கண்டிகை நீக்கி வன்மையால் வீற்றொரு குறிகொடு மேவு வார்சிலர். |
23 |
294 | காமமோ டுவகையுங் களிப்பு நல்கலால் வாமமே பொருளென மதிக்கின் றார்சிலர் தோமிலா மூவகைத் தொழிலும் வேள்வியும் ஏமமார் பொருளென இயம்பு வார்சிலர். |
24 |
295 | உரையிசை யாதியா மொலிகள் யாவையும் பிரமம தெயெனப் பேசு வார்சிலர் அரிதுசெய் நோன்பினா லடைந்த சித்திகள் பொருள்பிறி திலையெனப் புகல்கின் றார்சிலர். |
25 |
296 | பெருமைகொள் குலந்தொறும் பிறந்து செய்திடும் விரதமுஞ் சீலமும் வினைகண் மாற்றிட வருகலும் பிறவுமா யங்கம் விட்டுயிர் பரவுதல் வீடெனப் பகரு வார்சிலர். |
26 |
297 | அறிந்தறிந் துயிர்தொறு மதுவ தாகியே பிறந்திறந் துணர்வெலாம் பெற்று நோன்பொடு துறந்துகொன் றிட்டன துய்த்துக் கந்தமற் றிறந்திடல் முத்தியா மென்கின் றார்சிலர். |
27 |
298 | நன்னல மாதரை நண்ணு மின்பமே உன்னரு முத்தியென் றுட்கொள் வார்சிலர் இன்னன துறைதொறு மெய்தி யாவருந் துன்னரும் பிறவியுட் டுன்ப நீங்கலார். |
28 |
299 | இறந்தன வரம்புல கெவரும் வேதநூல் பறந்தனர் பவநெறி மல்கி நாடொ றுஞ் சிறந்தன வவையுயிர் செய்த தொல்வினை அறிந்தரு ளையநீ யமைத்த வாயினும். |
29 |
300 | அங்கவர் போதமுற் றாசொ ரீஇமனச் சங்கையு மகன்றுநின் சரண மேயுறப் புங்கவ சிறிதருள் புரிய வேண்டுமால் எங்கடம் பொருட்டென இறைவன் கூறுவான். |
30 |
301 | இனிதொரு திறமதற் கிசைத்து மாருயிர் அனையவும் புரப்பவ னாத லாலவர் வினையறு நெறிமையால் வேண்டு கிற்றிநின் மனனுறு மெண்ணினை மறுத்தி மாசிலாய். |
31 |
302 | காதலி னருளுமுன் கலையின் பன்மையிற் கோதறு மோர்கலை கொண்டு நேமிசூழ் மேதினி யதனிடை வியாதன் என்றிடு போதக முனியெனப் போந்து வைகுதி. |
32 |
303 | போந்தவ ணிருந்தபின் புகரி லாமறை ஆய்ந்திடின் வந்திடு மவற்றை நால்வகை வாய்ந்திட நல்கியே மரபி னோர்க்கெலாம் ஈந்தனை யவரகத் திருளை நீத்தியால். |
33 |
304 | அன்னதோர் மறையினை யறிந்து மையமா உன்னிய நிலையினர் உள்ளந் தேறவும் மன்னவ ரல்லவர் மரபிற் றேரவும் இன்னமோர் மறையுள திதுவுங் கேண்மதி. |
34 |
305 | ஏற்றம தாகிய மறைக்கும் யாமுனஞ் சாற்றிய வாகமந் தனக்கு மாங்கது வீற்றுற வருவது மன்று மேன்மையால் ஆற்றவும் நமதிய லறையும் நீரதே. |
35 |
306 | என்பெய ரதற்கெனி லினிது தேர்ந்துளோர் துன்பம தகற்றிடுந் தொல்பு ராணமாம் ஒன்பதிற் றிருவகை உண்ட வற்றினை அன்புடை நந்திமுன் னறியக் கூறினேம். |
36 |
307 | ஆதியில் நந்திபா லளித்த தொன்மைசேர் காதைகள் யாவையுங் கருணை யாலவன் கோதற வுணர்சனற் குமாரற் கீந்தனன் நீதியொ டவனிடை நிலத்திற் கேட்டியால். |
37 |
308 | என்னலும் நன்றென இசைந்து தாழ்ந்தெழீஇ முன்னவன் விடைகொடு முளரி யான்முதல் துன்னிய வானவர் தொகையொ டெகியே தன்னுல கத்தின்மால் சார்தல் மேயினான். |
38 |
309 | சார்தலு மயன்றனைச் சதம கத்தனை ஆர்தரு மமரரை யருளி னவ்வவா சேர்தரு புரந்தொறுஞ் செல்லற் கேவியே கார்தரு மெய்யுடைக் கடவுள் வைகினான். |
39 |
310 | திருவொடு மருவியோன் செறிவுற் றெங்கணும் பரவுறு மியல்பெறு பகவ னாதலால் தரணயி லருளினாற் றனது சத்தியில் ஒருகலை தன்னுட னுதிக்க வுன்னியே. |
40 |
311 | பங்கயத் தயன்வழிப் பராச ரப்பெயர்த் துங்கநன் முனிபனித் தூவ லெல்லையிற் கங்கையி லியோசன கந்தி யோடுற அங்கவர் தம்மிட அவத ரித்தனன். |
41 |
312 | மற்றவன் வதரிகா வனத்தில் வைகியே அற்றமில் வாதரா யணன்எ னும்பெயர் பெற்றன னாகியெம் பிரான்ற னாணையாற் கற்றிடா துணர்ந்தனன் கரையில் வேதமே. |
42 |
313 | மோனக முற்றிய முனிவர் மேலவன் தானுணர் மறையெனுந் தரங்க வேலையில் ஆனதோர் பொருளினை யறிஞர் பெற்றிடத் தூநெறி கொண்டநாற் றுறைசெய் தானரோ. |
43 |
314 | கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப் பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற் புரைதவிர் முனிவரன் புகழ்வி யாதன் என் றொருபெயர் பெற்றனன் உலகம் போற்றவே. |
44 |
315 | விரவிய மறைதெரி வியாத னாமவன் குரவனே யாஞ்சனற் குமாரன் றன்னிடை இருவகை யொன்பதா யியல்பு ராணமும் மரபொடு கேட்டவை மனத்துட் கொண்டவின். |
45 |
316 | ஏத்திடு சுருதிக ளிசைக்கு மாண்பொருள் மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர் பார்த்துணர் பான்மையாற் பலவ கைப்படச் சூத்திர மானவுஞ் சொற்று வைகினான். |
46 |
317 | மயலறு பயிலரே வைசம் பாயனர் சயிமினி சுமந்துவாந் தவத்தர் நால்வர்க்கும் வியலிருக் காதியாம் வேத நான்கையும் உயர்வுறு தவத்தினான் முறையி னோதினான். |
47 |
318 | தோல்வரு மறைகளின் சூத்தி ரத்தையும் மேல்வரு சயிமினி முதல மேதையர் நால்வரு முணரிய நவின்று நல்கினான் ஆல்வரு கடவுளை பனைய தன்மையான். |
48 |
319 | மெய்ம்முனி யனையரை விளித்து நீரினி இம்மறை யியல்பினோ ரெவர்க்கு மீமென அம்முறை நால்வரு மனைய வேதநூல் செம்மையொ டளித்தனர் சிறந்து ளோர்க்கெலாம். |
49 |
320 | அன்னதோர் முனிவர னதற்குப் பின்னரே பன்னருந் தொகையினாற் பதினெண் பான்மையாய் முன்னுறு புராண நூல் முழுது முற்றிய இன்னருள் நிலைமையா லெனக்கு நல்கினான். |
50 |
321 | வேதம துணர்தரு வியாத மாமுனி காதல னாமெனைக் கருணை செய்திவை ஓதுதி யாவரு முணர வென்றனன் ஆதலி னுலகினி லவற்றைக் கூறினேன். |
51 |
322 | காமரு தண்டுழாய்க் கண்ண னாகிய மாமுனி யருளினால் மறைகள் யாவையுந் தோமறு புராண நூற் றொகுதி யாவையும் நேமிகொ ளுலகெலா நிலவி யுற்றவே. |
52 |
323 | நம்பனார்க் கொருபது நார ணற்குநான் கம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம் உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால் இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே. |
53 |
324 | வேறு எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்ட மிலிங்கம் மதிகொள் காந்தநல் வராகமே வாமனம் மற்சம் புதிய கூர்மமே பிரமாண்டம் இவைசிவ புராணம் பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம். |
54 |
325 | கருது காருடம் நாரதம் விண்டுபா கவதம் அரிக தைப்பெயர் ஆக்கினே யம்மழற் கதையாம் இரவி தன்கதை பிரமகை வர்த்தமாம் இவைதாம் தெரியும் ஒன்பதிற் றிருவகைப் புராணமாந் திறனே. |
55 |
326 | இத்தி றத்தவாம் புராணங்கள் ஒன்பதிற் றிரண்டின் அத்த னுக்குள புராணமீ ரைந்தினில் அடல்வேற் கைத்த லத்தவன் காந்தத்துள் அன்னவன் கதையை மெய்த்தொ கைப்பட வுரைப்பனென் றேமுனி விளம்பும். |
56 |
327 | வேறு பூமிசை யிருந்த புத்தேள் புரிந்திடு புதல்வர் தம்முள் கூமுறு தக்க னீன்ற இருந்தனிக் குமரி யான தீமையை யகற்ற அம்மை சிந்தைசெய் திமைய மன்னன் மாமக ளாகி நோற்று வைகினாள் வைகு நாளில். |
57 |
328 | அவுணர்க ளோடு சூர னவனிமேற் றோன்றி நோற்றுச் சிவன்வர மளிக்கப் பெற்றுத் தேவர்யா வரையும் வென்று புவிதனி லுவரி தன்னிற் புங்கவர் புனைவன் செய்த தவலரு மகேந்தி ரத்தில் வைகினான் தானை சூழ. |
58 |
329 | அனையதோர் காலை வௌ¢ளை யடுக்கலிற் சனக னாதி முனிவரர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமுங் கூறி இனியதோர் ஞான போதம் இத்திற மென்று மோனத் தனிநிலை யதனைக் காட்டித் தற்பர னிருந்தா னன்றே. |
59 |
330 | வீற்றிருந் தருளு மெல்லை வெய்யசூர் முதலா வுள்ளோர் ஆற்றவுந் தீங்கு செய்தே யமரர்கள் சிலரைப் பற்றிப் போற்றிடுஞ் சிறையி லுய்ப்பப் புரந்தரன் முதலா வுள்ளோர் மாற்றருந் துயரின் மூழ்கி மறைந்தன ராகி வைகி. |
60 |
331 | சங்கரன் மோனத் தன்மை சதுர்முகற் குரைப்ப வன்னான் வெங்கணை வேளை யுய்ப்ப விழித்தவன் புரநீ றாக்கிப் பங்கயன் முதலா வுள்ளோர் பலரும்வந் திரங்கிப் போற்ற அங்குறை மோனம் நீங்கி யவர்க்கருள் செய்தா னையன். |
61 |
332 | ஓரேழு முனிவர் தம்மை யோங்கலுக் கிறைவன் றன்பாற் பேரருண் முறையாற் றூண்டிப் பெருமணம் பேசுவித்துப் பாரறு நோன்பின் மிக்க பராபரை யன்பு தேர்ந்து காரணி கண்டத் தெந்தை கணங்களோ டிமையம் புக்கான். |
62 |
333 | புடையக லிமையந் தன்னிற் புலனங்கள் முழுது மீண்ட வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் மலயந் தன்னிற் கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர் அடன்மத வேளை நல்கி அநங்கனே யாகச் செய்தான். |
63 |
334 | மன்புனை கயிலை தன்னில மலைமக ளோடு மீண்டு முன்பென வமர்ந்து நாதன் முழுதுல குயிர்கட் கெல்லாம் இன்பமும் புணர்ப்பும் நல்கி யிமையவர் யாரும் வேண்டத் தன்பெரு நுதற்கட் டீயாற் சரவன பவனைத் தந்தான். |
64 |
335 | அந்தமில் விளையாட் டுள்ள அறுமுகக் கடவு டன்னைத் தந்திடு மெல்லை னனோன் தானையந் தலைவ ராக முந்திய விறல்சேர் மொய்ம்பன் முதலிய விலக்கத் தொன்பான் நந்திதன் கணத்தி னோரை நங்கைபா லுதிப்பச் செய்தான். |
65 |
336 | அண்ணலங் குமரப் புத்தேள் அலகிலா வாடல் செய்து மண்ணுறு கடலும் வெற்பும் வானமுந் திரிபு செய்து துண்ணெனக் குழவி யேபோற் றோன்றிட வதனை நோக்கி வின்னவர் யாருஞ் சூழ்ந்து வெஞ்சமர் புரிந்து நின்றார். |
66 |
337 | ஆரமர் செய்து ளாரை யட்டுட னுயிரும் நல்கிப் பேருரு நிலைமை காட்டிப் பெறலருங் காட்சி நல்கி நாரதன் மகத்திற் றோன்றி நடந்ததோர் செச்சை தன்னை ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்தன னொப்பி லாதான். |
67 |
338 | மறைமுதற் குடிலை* தன்னின் மாண்பொருள் முறைக டாவி வெறிகமழ் கமலப் புத்தேள் விடைகொடான் மயங்கக் கண்டு சிறையிடை யவனை வைத்துச் செகமெலா மளித்துத் தாதை குறையிரந் திடவே விட்டுக் குறுமுனிக் கதனை யீந்தான். ( * மறைமுதற் குடிலை - வேதத்தின் முதற் பொருளாயுள்ள பிரணவம் ) |
68 |
339 | ஆவதோர் காலை யீச னறுமுகப் பரனை நோக்கி ஏவரு முடிக்க வொண்ணா திருந்தசூர் முதலோர் தம்பால் மேவினை பொருது வென்று விரிஞ்சனே முதலா வுள்ள தேவர்த மின்னல் நீக்கிச் செல்லுதி குமர வென்றான். |
69 |
340 | விராவிய விலக்கத் தொன்பான் வீரரை வெய்ய பூதர் இராயிர வெள்ளத் தோரை யிகற்படை மான்றே ரோடு பராபர னுதவித் தூண்டப் பன்னிரு புயத்த னேகித் தராதலம் புக்கு வெற்பைத் தாரக னோடு சென்றான். |
70 |
341 | பூவினன் முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்தத் தேவர்தங் கிரியின் வைகித் தென்றிசை நடந்து தாதை மேவரு மிடங்கள் போற்றி மேதகு சேய்ஞல்** நண்ணி மூவிரு முகத்தன் முக்கண் முன்னவன் படையைப் பெற்றான். ( ** சேய்ஞல் - சேய்ஞலூர் ) |
71 |
342 | பரனருள் படையைப் பெற்றுப் பராசரன் சிறார்***வந் தேத்தத் திருவருள் புரிந்து சென்று செந்திலின் மேவிச் சூரன் வரமொடு திருவுஞ் சீரும் வாசவன் குறையும் வானோர் குரவனை வினவி யன்னான் கூறவே குமரன் தேர்ந்தான். ( *** பராசரன் சிறார் - தத்தன், அனந்தன், நந்தி, சதுர்முகன், பருதிப்பாணி, தவமாலி என்ற ஆறு புதல்வர்கள். ) |
72 |
343 | அறத்தினை யுன்னி யைய னாடல்சேர் மொய்ம்பன்**** றன்னை உறத்தகு மரபிற் றூண்டி யொன்னலன் கருத்தை யோர்ந்து மறத்தொடு கடலுள் வீர மகேந்திரம் அணுகி யேதன் புறத்துள தானை யோராற் சூர்கிளை பொன்றச் செற்று. 73 ( **** ஆடல் சேர் மொய்ம்பன் - வீரவாகு தேவர். ஆடல் - வீரம் ) |
73 |
344 | சீயமா முகத்த னென்னுஞ் செருவலான் றனையு மட்டு மாயையுந் திருவுஞ் சீரும் வரங்களும் பிவு மாற்றி ஆயிர விருநா லண்டத் தரசனாஞ் சூரன் றன்னை ஏயெனு மளவில் வேலா லிருதுணி படுத்து நின்றான். |
74 |
345 | துணிபடு சூர னோர்பால் சூட்டுவா ரணமா யோர்பால் பிணிமுக மாகி நிற்பப் பெருந்தகை அவற்றை யூர்தி அணிபடு துவச மாக்கி அப்பகல் செந்தில் வந்து மணிசொரி யருவி தூங்கும் வான்பரங் குன்றஞ் சேர்ந்தான். |
75 |
346 | தெய்வத யானை யென்னுஞ் சீர்கெழு மடந்தை தன்னை அவ்விடை வதுவை யாற்றி அஙஙனஞ் சிலநாள் வைகி மெய்விய னுலகிற் சென்று விண்ணவர்க் கரச னாக்கி எவ்வமில் மகுடஞ் சூட்டி இந்திரன் றன்னை வைத்தான். |
76 |
347 | சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும் மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல் மேல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி* னேகி எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான். ( * கந்த வெற்புறை நகர் - கந்தகிரியிலிருக்கும் குமார லோகமுமாம். ) |
77 |
348 | சாரலி னோங்கு தெய்வத் தணிகைமால் வரையின்மீது வீரம துடைய வேலோன் வீற்றிருந் திடலு மங்கண் நாரதன் வந்த தாழ்ந்து நவைதவி ரெயின மாதின் சீரெழில் நலத்தைக் கூற அவள்வயிற் சிந்தை வைத்தான். |
78 |
349 | வள்ளிமால் வரையிற் போந்து மானி**டைப் பிறந்த தெய்வக் கிள்ளையை யடைந்து போற்றிக் கேடில்பல் லுருவங் காட்டிக் கள்ளமோ டொழுகிப் பன்னாட் கவர்ந்தனன் கொணர்ந்து பின்னர்த் தெள்ளுசீர் வேடர் நல்கத் திருமணஞ் செய்து சேர்ந்தான். ( ** மான் - சிவமுனிவராகிய மான். ) |
79 |
350 | செருத்தணி வரை***யில் வந்து சிலபகல் வள்ளி தன்னோ டருத்தியின் மேவிப் பின்னர் அவளடுங் கந்த வெற்பின் வரைத்தனிக் கோயில் புக்கு வானமின் பிரிவு நீக்கிக் கருத்துற இருவ ரோடுங் கலந்துவீற் றிருந்தான் கந்தன். ( *** செருத்தணி வரை - திருத்தணிமலை. ) |
80 |
351 | என்றிவை யனைத்துஞ் சூதன் இயம்பலும் முனிவர் கேளாத் துன்றிய மகிழ்வாற் சென்னி துளக்கியிங் கிதனைப் போல ஒன்றொரு கதையுங் கேளேம் உரைத்தனை சுருக்கி யாங்கள் நன்றிதன் அகலங் கேட்க நனிபெருங் காதல் கொண்டேம். |
81 |
352 | என்னவே முனிவ ரானோர் யாவரு மெடுத்துக் கூற மன்னிய வருள்சேர் சூதன் மற்றவ ரார்வம் நோக்கி அன்னவை சுருக்க மின்றி அறைந்தனன் அவ்வா றோர்ந்து தொன்னெறி வழாதி யானும் வல்லவா தொகுத்துச் சொல்வேன். |
82 |
ஆகத் திருவிருத்தம் - 352
உ
செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்
353 | பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள் ஈசன் நல்கு மியல்பென வெய்தினோ£ தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி வீசு கின்றது வௌ¢ளியங் குன்றமே. |
1 |
354 | ஆறு சூடிய வாதியம் பண்ணவன் ஏறு மூரிவௌ¢ ளேறுமக் கண்ணுதல் நீறு சேர்தரு கோலமும் நித்தனைத் தேறும் அன்ர்தஞ் சிந்தையும் போன்றதே. |
2 |
355 | மோன நன்னிலை முற்றிய பெற்றியர் ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய் ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத் தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே. |
3 |
356 | கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத் தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை வான யாறு வருதலின் மாசிலா ஞான நாயகன் போல நணியதே. |
4 |
357 | தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப் பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல் கண்ணு தற்குமொர் காமரு பீடமாய் நண்ணு கின்றது போலும் நலத்ததே. |
5 |
358 | பொதியு மின்னமு தோடு பொருந்துவ கதிரின் மிக்க கறையறு காட்சிய மதிய மாயிர கோடி மணந்துதாம் உதய மானது போன்றதன் வொண்கிரி. |
6 |
359 | நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர் பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப் பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப் பற்று நந்தி பரிவொடு காப்பது. |
7 |
360 | புரந்த ரன்முத லாகிய புங்கவர் வரம்பின் மாதவர் மாசறு காட்சியர் நிரந்த பூத கணவர் நிரந்தரம் பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை. |
8 |
361 | மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர் கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர் இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது. |
9 |
362 | வேறு கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச் சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத் தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம். |
10 |
363 | மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள் பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல் கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. |
11 |
364 | நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர் குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும் அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும் வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே. |
12 |
365 | ஏற்றம் மேருவே யாதியாம வரைகள்ஏழ் வகையால் சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி* நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண் வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு. ( * ஏழ்வையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்டல் முதலிய ஏழுகடல்கள். ஆழியங்கிரி - சக்கரவாளகிரி. பெருஞ்சலதி - பெரும்புறக்கடல். ) |
13 |
366 | படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர் அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும் நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன் வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. |
14 |
367 | வேறு அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக் கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப் பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே. |
15 |
368 | திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர் மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில் பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும். |
16 |
369 | என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற் பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந் துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே. |
17 |
370 | வேறு சோதி சேருமத் தூமணி மண்டபத் தாதி யான அரியணை யும்பரிற் காத லாகுங் கவுரி*யொர் பாங்குற வேத நாயகன் வீற்றிருந் தானரோ. ( *அருளே சிவசத்தி என்பது தோன்ற, ‘காதலாகுங் கவுரி’ என்றார்.) |
18 |
371 | பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர் தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ் நாடு தும்புரு நாரதர் விஞ்சையர் பாடு கின்றனர் பாணியின் பாற்பட. |
19 |
372 | அதிகன்** வேணியி லார்தரு கங்கையை விதிவு ரந்தரன் விண்டுல கத்துள நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய் கதியி னோர்கள் கவரிகள் வீசினார். ( **அதிகன் - தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன் சிவபெருமான். ) |
20 |
373 | சீல வட்ட முடிப்பிறை தேடுவான் ஞால வட்டத் தெழுதரு நாகர்போல் ஏல வட்ட முகத்தரு கெங்கணும் ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர். |
21 |
374 | ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப் பாத தாமரை சூடியப் பண்ணவன் கோதி லாத திருவுருக் கொண்டுளோர் பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். |
22 |
ஆகத் திருவிருத்தம் - 374.
375 | அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல் உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத் தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள். |
1 |
376 | கற்பனை முதலிய கடந்த கண்ணுதல் தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப் பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச் சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான். |
2 |
377 | ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந் தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன் நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள். |
3 |
378 | மன்னுயி ராகிய மரபு முற்றவும் முன்னுற அருளிய முதல்வி யன்பினால் இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத் தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான். |
4 |
379 | பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற் சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின் புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால். |
5 |
380 | நற்றிற மேலுது நங்கை சிந்தனை முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின் சுற்றம தாகிய இமையத் தொல்வரைக் கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம். |
6 |
381 | ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன் மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால் ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ. |
7 |
382 | தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான் இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன் உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம். |
8 |
383 | அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர் கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும் இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம் மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா. |
9 |
384 | கடல்விட முண்டிடு கடவு ளித்திறம் நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந் தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே விடையது பெற்றனள் விமலை யேகினாள். |
10 |
385 | அல்லலு முவகையு மன்பு மெம்பிரான் எல்லையி லருளுமா யீண்டி முன்செல மெல்லியல் உமையவள் வௌ¢ளி வெற்பொரீஇ வல்லையின் இமையமால் வரையிற் போயினாள். |
11 |
386 | வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால் எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை வௌ¢ளியங் கிரியென விளங்கு கின்றதே. |
12 |
387 | எண்டகு மிமையமு மிமைய மேலுறு கொண்டலு மொன்றியே குலவு காட்சிய தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ் சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால். |
13 |
388 | நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு மேலுற விளங்கிய இமைய வெற்பது மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில் பாலுறு பன்னகப் பாயல் போன்றதே. |
14 |
389 | கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட அரும்பவி ழாதவெண் கமல மன்னதே. |
15 |
390 | நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப் பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான் மூடினள் வைத்திடு முறைய தேயெனக் கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே. |
16 |
391 | பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர் துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால் என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை. |
17 |
392 | குடகடல் குணகடல் கூடு றாவகை இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே. |
18 |
393 | விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள் அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக் கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல் உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே. |
19 |
394 | அன்னதோர் தடத்திடை அசல மன்னவன் மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந் தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும் முன்னுற வருந்தவம் முயன்று வைகினான். |
20 |
395 | மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற் பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள் எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள். |
21 |
396 | வேறு ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன் ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான். |
22 |
397 | கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத் துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான். |
23 |
398 | பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித் துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ. |
24 |
399 | கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர் அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம். எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள். |
25 |
400 | சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும் பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம் நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ. |
26 |
401 | பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம் விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம் அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள். |
27 |
402 | வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப் புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன் மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான். |
28 |
403 | மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம் அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக் கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே. |
29 |
404 | இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந் தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச் சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள். |
30 |
405 | நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான் நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின் ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப் பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான். |
31 |
406 | அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக் கன்னிகை நகைத்துக் கேண்மோ இ·தெனக் கழற லுற்றாள். |
32 |
407 | ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால் ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப் பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான். |
33 |
408 | மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில் அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித் தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக் கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான். |
34 |
409 | நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர் பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச் சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள். |
35 |
410 | தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின் மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால் அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன். |
36 |
ஆகத் திருவிருத்தம் - 410.
411 | பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற் கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத் துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன் இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான். |
1 |
412 | மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப் பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள் அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார். |
2 |
413 | நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால் வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார். |
3 |
414 | மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித் தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார் |
4 |
415 | மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம் நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந் தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார். |
5 |
416 | இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப் பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள் அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண் மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார். |
6 |
417 | நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர் இவைபுகன் றிடலு மன்பர்க் கௌ¤வருங் கருணை வள்ளல் அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான். |
7 |
418 | என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர் நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட் சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக் கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான். |
8 |
419 | பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும் ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண் நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான். |
9 |
420 | நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல் முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப் புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார். |
10 |
421 | என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன் பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர் அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால் உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான். |
11 |
422 | இருவரு முணரா அண்ணல் ஏனவௌ¢ ளெயிறி யாமை சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள் கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான். |
12 |
423 | இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம் பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட் புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார். |
13 |
424 | தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும் முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன் சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல். |
14 |
425 | தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின் முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம் பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ. |
15 |
426 | இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம் மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில் அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல். |
16 |
427 | காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ் சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே. |
17 |
428 | ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம் ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்ற ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங் காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ. |
18 |
429 | பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல் அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர் இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப் புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல். |
19 |
430 | வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத் தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால் இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப் புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல். |
20 |
431 | பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர் அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார் தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம் நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல். |
21 |
432 | மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர் கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும் ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப் பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல். |
22 |
433 | இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற் பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந் திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம். |
23 |
434 | ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர் பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங் காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம். |
24 |
435 | மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும் விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும் பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக் கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். |
25 |
436 | நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல் வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே. |
26 |
437 | சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின் கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ. |
27 |
438 | சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல் மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே. |
28 |
439 | முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித் தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற தௌ¢ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன் வௌ¢ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல் |
29 |
440 | இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும் மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர் தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான். |
30 |
441 | மேகமூர் கடவுள் வௌ¢ளி வெற்பினி லேகி முக்கண் ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன் மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான். |
31 |
442 | தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும் இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான். |
33 |
443 | நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய் இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான். |
34 |
444 | பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர் என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித் தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான் அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன. |
35 |
445 | மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம் நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள் நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான். |
36 |
446 | மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக் குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட் பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான். |
37 |
447 | மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன் தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள் ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான். |
38 |
448 | மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின் இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங் கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும். |
39 |
449 | இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம் முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித் துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான். |
40 |
450 | நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப் பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர் கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ் சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம். |
41 |
451 | வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன் ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின் செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான். |
42 |
452 | என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன் ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும் அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வௌ¢ளிக் குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே. |
43 |
453 | செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல் நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே. |
44 |
454 | படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம் அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல் கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே. |
45 |
455 | பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன் றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார் மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற் பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான். |
46 |
456 | தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன் பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான் இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே. |
47 |
457 | ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந் தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற் கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே. |
48 |
458 | வேறு அன்ன காலை யதுநன்று நன்றெனாத் துன்னு வானவர் சூழலொ டிந்திரன் பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச் சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான். |
49 |
459 | ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன் வாலி தாந்தன் மனோவதி நீங்குறா மேலை வைகுந்த மேன்னும் வியனகர் ஆல யத்தின் அகன்கடை யேகினான். |
50 |
460 | அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ் சங்கு மேந்திய தானையங் காவலன் செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன் பங்க யத்தன் படர்ந்தது செப்பினான். |
51 |
461 | பணில மேந்திய பண்ணவன் அன்னரைக் கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி இணையில் காவல னுய்த்திட இந்திரன் கணமொ டெகினன் காசினி நல்கியோன். |
52 |
462 | பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன் னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள் மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல் அரியி ருந்த அவைக்களம் நண்ணினான். |
53 |
463 | அன்ன மூர்தி அமருல காளுறும் மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும் பன்ன காசனப் பங்கயக் கண்ணவன் பொன்னின் மாணடி போற்றி வணங்கினான். |
54 |
464 | தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக் கருணை செய்துதன் காதல னாகிய பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால் அருளி யங்கண் அவனை இருத்தினான். |
55 |
465 | குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ ஒல்லும் நின்விதி யூறில தாகியே செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான். |
56 |
466 | கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும் அனக இத்திறங் கேட்க அறிவுடைச் சனகன் முற்படு தாபதர் நால்வரும் எனக ருத்திடை முற்பக லெய்தினார். |
57 |
467 | அறிவின் மிக்க அனையரை நோக்கியான் பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண் டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர் முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை. |
58 |
468 | பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப் பேச லுற்ற பெருந்தளை பூணலம் ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார். |
59 |
469 | மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும் ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக் கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா வேத வுண்மை விளம்புதி யாலென்றார். |
60 |
470 | என்ற லோடும் இறையவன் வௌ¢ளியங் குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும் ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம் நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர். |
61 |
471 | முந்தை வேத முழுது முணர்த்தியே எந்தை யேக இருநிலம் போந்துதஞ் சிந்தை யொன்றும் திறனரி தாதலின் நொந்து பின்னரும் நோற்றலை மேயினார். |
62 |
472 | பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே தொன்ன லம்பெறு தூய வுளத்தராய் என்னை யாளுடை யீச னருளினால் மன்னும் வௌ¢ளி வரையிடை யேகினார். |
63 |
473 | ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம் பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான் ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும் ஓகை பற்றி யுணர்வகை கூறியே. |
64 |
474 | கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய வான நாயகன் மற்றவர் காண்டக ஞான போதம் நவிலருந் தன்மையால் மோன மேய முதற்குறி காட்டினான். |
65 |
475 | அந்த வெல்லை யரனருள் கண்டுதம் புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர் சிந்தை செய்து செயலற்று வைகினார் முந்தி யாப்புறு முத்தளை மூட்டற. |
66 |
476 | வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம் போத யோகின் பொருண்மையைக் காட்டுழி ஓத லாகும் உகம்பல சென்றன சீத வானதி சேர்ந்ததொன் னாளினே. |
67 |
477 | அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல் என்ன துஞ்செய லின்றி யிருத்தலான் முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய் மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே. |
68 |
478 | நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார் இவறு காமப் புணர்ச்சிய தின்றியே கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார் தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல். |
69 |
479 | நல்கல் பெற்ற தமியனும் நாமகட் புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே அல்கல் ¦பிறற அருந்தவ யோகரின் ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால். |
70 |
480 | நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால் ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர் எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன் சொற்க நாட்டில் துயரினை நாட்டினான். |
71 |
481 | தேசு நீங்குறு தேவரை ஈண்டுள வாச வன்றனை மாதிரத் தோர்களைப் பாச னத்தொடு பற்றினன் நித்தலுங் கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ. |
72 |
482 | நிறைபு ரிந்த நிலவினை வாளரா மறைபு ரிந்தென வானகத் தோருடன் இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச் சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே. |
73 |
483 | நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும் அரந்தை மல்க அறிகிலன் போலவே இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது விரைந்து கூறுதி யென்று விளம்பினான். |
74 |
484 | அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும் மரபின் நாடினர் வாலுணர் வெய்திய திருவி னாயகன் செங்கம லந்திகழ் பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான். |
75 |
485 | வேறு ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந் தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில் ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார். |
76 |
486 | ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித் தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற் சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே. |
77 |
487 | சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ் சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற் பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால். |
78 |
488 | முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப் பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க் கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந் துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ. |
79 |
489 | அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில் எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச் சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான். |
80 |
490 | பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால் மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான். |
81 |
491 | என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன் பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும் மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே. |
82 |
ஆகத் திருவிருத்தம் - 491.
492 | இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன் ஐந்திற னாகிய ஆசுக வில்வேள் வந்திடு மாறு மனத்தில் நினைந்தான். |
1 |
493 | நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன் முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள் மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன் இனந்தரு சூழலொ டிம்மென வந்தான் |
2 |
494 | மாமறை யண்ணல்முன் வந்து பராவித் தாமரை நேர்தரு தாடொழு தென்னை நீமன மீது நினைந்ததெ னென்னாக் காமன் வினாவ அயன்கழ றுற்றான். |
3 |
495 | கங்கை மிலைச்சிய கணணுதல் வெற்பின் மங்கயை மேவநின் வாளிக மூவி அங்குறை மோனம் அகற்றினை யின்னே னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான். |
4 |
496 | வேதனில் வாறு விளம்பிய கூற்றாங் தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன் காதிடை யேநெறி யார்ககடி திற்போய் ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே. |
5 |
497 | கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங் கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ் சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய் அட்டிடு கின்றதும் அற்புத மாமோ. |
6 |
498 | இத்திற மாமல ரேந்தல் இயம்பக் கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ் சித்தச வேளுரை செய்தன னம்மா. |
7 |
499 | ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற் கேட்டன னென்று கிலேசம தாகி வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப் பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான். |
8 |
500 | வேறு வன்கண் ணருமா சறுகாட் சியர்பால் நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார் உன்கண் ணுறின் இத் தவறோ தினையால் என்கண் ணடிகட் கிலையோ அருளே. |
9 |
501 | வன்னப் புலிமங் கையைமா மலர்மேற் பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான் கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய் தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ. |
10 |
502 | வௌ¢ளைக் கமலத் தியைமெய் யுறவுந் தௌ¢ளுற் றணிசெய் ததிலோத் தமைபால் உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான் பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ. |
11 |
503 | சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால் மார்பிற் குடியா யுறவைத் திலனோ கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன் ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ. |
12 |
504 | தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய் பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால் விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ. |
13 |
505 | விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த் திசையுற் றவராங் கொருசே யிழைபோல் இசையற் றிடுபா கனிடைப் புணரா வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ. |
14 |
506 | கதனத் தொடுவந் துகலந் தவர்பால் இதநட் புறுமா மதியென் கணையால் மதனத் தொடுதே சிகன்மா தையுறாப் புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ. |
15 |
507 | முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால் கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங் குற்றே வல்செயும் படிகூட் டிலனோ. |
16 |
508 | மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக் குறிதா முனியத் திரிகோ தமன்நல் அறிவால் உயர்கா சிபனா தியராந் துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ. |
17 |
509 | மன்னான் மரபுற் றிடுமா னவரைப் பின்னா கியமும் மைகொள்பே தகரை மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ என்னா ணைகடந் தவர்யா ருளரே. |
18 |
510 | அறைபெற் றிடுமித் திறமா னவெலாம் முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம் மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே. |
19 |
511 | மாமே முதலா கியவா னவர்தம் பாலே அடல்வா கைபடைப் பதலால் மேலே நதிசூ டியமே லவன்மேற் கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ. |
20 |
512 | ஐதா கியசீர் கொடவன் முறைசெய் நொய்தா னவர்போ லநுவன் றனையால் வெய்தா மழலா கியமே லவன்மேல் எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ. |
21 |
513 | கையுந் நகையுங் கதிரார் விழியும் மெய்யுந் தழலாம் விமலன் றனையான் எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண் டுய்யுந் திறமும் உளதோ உரையாய். |
22 |
514 | பற்றோ டிகலற் றபரம் பொருளை எற்றோ மயல்செய் குவதீ சனையும் மற்றோ ரெனநின் னின்மதித் தனையால் சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே. |
23 |
515 | சூறா வளிவை கியசூ ழலின்வாய் ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல் நீறா டியமெய் யுடைநின் மலன்மேல் வீறாய் வினையேன் பொரமே வுவனே. |
24 |
516 | ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன் மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம் ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண் டீறுற் றனரல் லதிருந் துளர்யார். |
25 |
517 | இந்நா ரணணா தியர்யா வர்களும் அந்நா ளமலன் பணியாற் றிடலும் அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால் ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ. |
26 |
518 | எந்தாய் அருளென் றொரிளங் குமரன் வந்தா தியையேத் தலும்வை துசினக் கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ. |
27 |
519 | முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப் பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம் என்னச் சினெய் தியிகழந் தவுனைச் சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ. |
28 |
520 | அடன்மே வுசலந் தரனா தியராய்ப படிமே லுளதோர் ப·றா னவர்தாம் முடிவார் அரனோ டுமுரண் டிடலுங் கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ. |
29 |
521 | வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத் தூடெய்தினர்யா வருமொப் பில்அரன் மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப் பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ. |
30 |
522 | அண்டா தவகந் தையொடா ழியின்வாய் விண்டா னவரச் சுறமே வுவிடம் உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற் கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ. |
31 |
523 | தரியா வுளமாற் கொடுதன் னிகழும் அரியோ டுகைம்மா வையடற் புலியை உரியா மிசைபோல் வையுடுக் கையெனப் பரியா அரனுற் றதுபார்த் திலையோ. |
32 |
524 | ஓரார் தனதுண் மையையுள் ளமிசை யாரா யினுமாற் றவகந் தைபெறின் வாரா அவர்தம் வலிமாற் றிடுமால் தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே. |
33 |
525 | இறுகின் றகடைப் பகலீ றிலதோர் கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ அறிகின் றிலையோ அகிலங் களுமே. |
34 |
526 | இப்பெற் றியனா கியவீ சனையென் கைப்பற் றியவிற் கொடுகந் தமலர் அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல் மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே. |
35 |
527 | மேனா ளகிலந் தரமெல் லியலா ஆனா வருடன் னையளித் தொருபால் தானா கவிருத் தியதற் பரனை நானா மயல்செய் வதுநன் றிதுவே. |
36 |
528 | வேறு என்னா மதவேள் இசையா மறுத்திடலும் பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான். |
37 |
529 | வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால் அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால் உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும் எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ. |
38 |
530 | அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம் இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம் முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண். |
39 |
531 | எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும் நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற் செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே. |
40 |
532 | செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ. |
41 |
533 | பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும் ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன் நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ. |
42 |
534 | கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண் மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம். |
43 |
535 | ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத் தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும் ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத் தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ. |
44 |
536 | என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந் தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும் பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே. |
45 |
537 | ஏவ ரெனினும் இடருற் றனராகி ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற் காவி விடினும் அறனே மறுத்துளரேற் பாவம் அலது பழியும் ஒழியாதே. |
46 |
538 | உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல் வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே. |
47 |
539 | அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப் பொன்£ டருளும் புலவோ ரிறையிரப்ப வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித் தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ. |
48 |
540 | மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும் மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த சீலந் தனைநீ சிறிதுந் தௌ¤ந்லையோ. |
49 |
541 | தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந் தாக்கும் பொழுது தளரே லெனவுரையா ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக் காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ. |
50 |
542 | ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப் பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல் தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை பாரார் புகழே பயனென்று கொள்வாரே. |
51 |
543 | சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம் ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித் தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான் ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே. |
52 |
544 | ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச் சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார் ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற் போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான். |
53 |
545 | வேறு பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும் ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம் புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன். |
54 |
546 | என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால் அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம் துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன். |
55 |
547 | வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட் டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச் செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான். |
56 |
548 | கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச் சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற் காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய் மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே. |
57 |
549 | செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத் திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக் கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல் உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான். |
58 |
550 | பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத் துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத் தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான். |
59 |
551 | ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான் தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன் மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான். |
60 |
552 | நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன் பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான். |
61 |
553 | கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில் இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர் வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ. |
62 |
554 | கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங் காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ் சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே. |
63 |
555 | பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல் இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான். |
64 |
556 | கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக் கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன் பயிலும் வில்லும் வாளி யும்ப £த்து வல்லி யத்தினைத் துயிலு ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான். |
65 |
557 | கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல் கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும் ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான். |
66 |
558 | பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண் விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச் சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன் அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ. |
67 |
559 | கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால் தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல் வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே. |
68 |
560 | நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள் கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத் தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும் முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான். |
69 |
561 | விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச் செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும் இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம் மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான். |
70 |
562 | வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும் ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும் போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள் சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான். |
71 |
563 | புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே தொன்மை போவெ ழுப்பு மாறு கருதி சோற்ற வாறுபோல் மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன் பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம். |
72 |
564 | ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென் றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம் போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர் ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான். |
73 |
565 | நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள் எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும் அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண் வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென. |
74 |
566 | இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர் புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல் தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல் மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன். |
75 |
567 | என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச் சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற் குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான். |
76 |
568 | வேறு ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக் குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப் பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான். |
77 |
569 | எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே. |
78 |
570 | அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத் துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான். |
79 |
571 | முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும் உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய முண்டோ. |
80 |
572 | எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங் கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக் கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே. |
81 |
573 | தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன் தனித்த தீபம் போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர் வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான் நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம். |
82 |
574 | ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப் பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார் தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே. |
83 |
575 | ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென் தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும் வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன் பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான். |
84 |
576 | இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப் புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான். |
85 |
577 | மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக் காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான் போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான். |
86 |
578 | சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக் கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப் பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார். |
87 |
579 | எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங் குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான். |
88 |
580 | விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது பட்டலுஞ சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங் கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற் கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே. |
89 |
581 | ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண் ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின் மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின் வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா. |
90 |
582 | செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல் உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான். ( பா-ம் - * அ¨நிதார்க் ) |
91 |
583 | நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன் கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால் அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித் துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும். |
92 |
584 | இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன் தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான். |
93 |
585 | ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன் புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார். |
94 |
586 | வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான் வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன். |
95 |
587 | கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ் சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம் எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ. |
96 |
588 | பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங் கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர் ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள். |
97 |
589 | சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல் வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும் இரதிசில் பொழுகிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால் வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள். |
98 |
590 | செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா, சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா, அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே, உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ. |
99 |
591 | முன்னானிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று, சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே, உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ, என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ. |
100 |
592 | மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும், நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக, ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங், கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான். |
101 |
593 | உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த, செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா, இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால், வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ. |
102 |
594 | வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர், எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய், கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே, பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம் முயிர்போகும் பொருட்டே யன்றோ. |
103 |
595 | என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ, முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ, கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ, வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ. |
104 |
596 | பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன், மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன் மார்பின் மேன்மை காணேன், கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன், என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே. |
105 |
597 | அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப் பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை, எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில், மன்னாவோ எனைத்தனியே விடடேகல் வழக்கோ சொல்லாய். |
106 |
598 | போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை, வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார், ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ, வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ. |
107 |
599 | நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த, மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய், ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே, தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ. |
108 |
600 | தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி, எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல, வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக், கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே. |
109 |
601 | மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப், பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே, எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே, வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள். |
110 |
ஆகத் திருவிருத்தம் - 601
602 | இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான் விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன் கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார் சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம். |
1 |
603 | சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர் பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள் விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார். |
2 |
604 | மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான் பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான் ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார். |
3 |
605 | பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான் காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம் ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார். |
4 |
606 | எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும் அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட் புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித் தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார். |
5 |
607 | நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித் துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும் அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல் தஞ்ச மாருளர் தாதையே யல்லது* தனயர்க்கே. ( பா-ம் * - தாதைய ரல்லது. ) |
6 |
608 | கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண் டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண் நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ. |
7 |
609 | தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம் உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல். |
8 |
610 | நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப் போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய் தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ. |
9 |
611 | எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால் நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே. |
10 |
612 | கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத் திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌ¤வில்லேம் அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய் இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ. |
11 |
613 | ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின் பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி வீர னைக்கொடு தடிந்தனை அ·தென மிகவெய்ய சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார். |
12 |
614 | முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள் உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே. |
13 |
615 | எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன் வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன் கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன் தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான். |
14 |
616 | கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித் தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம் வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றனன் வறிதேனும் அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான். |
15 |
617 | சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும் வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப் பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர் ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார். |
16 |
618 | பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம் நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும் வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே. |
17 |
619 | செய்ய லாவதொன் றின்றியே மகிழச்சியிற் றிளைத்தொராய் மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண் டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தொரும் உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன். |
18 |
620 | வேறு வண்டுளர் கமலமேல் மதலை வாசவன் அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற் கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார். |
19 |
621 | விண்மதி படர்சடை வேத கீதனை அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர் கண்மல ரதனொடு கழல்கள் சேரவே. |
20 |
622 | வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும் உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும் அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே. |
21 |
623 | பேருக மளப்பில பெயர்த லின்றியே சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங் காருறழ் கந்தரக் கடவுள் நீயலா தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார். |
22 |
624 | ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர் சேயினை யருளுவான் சிமைய மாகிய மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும் மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ. |
23 |
625 | என்றிவை கூறியே யாரு மெம்பிரான் மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும் மின்றிகழ பசுங்கதிர் மிலைச்சும் வேணியான் நன்றென இசைந்தியை நவிறல் மேயினான். |
24 |
626 | புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர் உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும் இங்கினி யாவரு மேகு கென்றனன். |
25 |
627 | முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ் செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந் தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். |
26 |
628 | வேறு அன்னார் விடைகொண் டேகியபின் அதுகண் டிரதி யெம்பெருமான் முன்னா விறைஞ்சிப்* போற்றிசெய்து முறையோ முறையோ இறையோனே பொன்னார் கமலத் தயன்முதலோர் புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே உன்னால் முடிந்தான் அவன்பிழையை உளங்கொ ளாமல் அருளென்றாள். 27 ( பா-ம் * - முன்னாலிறைஞ்சிப் ) |
27 |
629 | வேறு இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்£ந்த புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள் வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோ தில் உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான். |
28 |
630 | தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத் தளரேலென் றின்ன வாறருள் செய்தலும் மகிழந்தடி இறைஞ்சிப்போய்ப் பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றான் வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல். |
29 |
631 | வேறு தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும் இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும் உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான். |
30 |
632 | மனந்தனி லித்திறம் மதித்து வானதி புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன் சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம் இனந்தரு முனிவரை இனிது நோக்கினான். |
31 |
633 | நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ் சொன்னடை யன்றது துயர நீங்கியே இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை உன்னுத லேயென உணர வோதினான். |
32 |
634 | கட்படும் இமைத்துணை காட்சி யோகினை நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன் ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும் தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர். |
33 |
635 | அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர் சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர். |
34 |
636 | போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச் சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை. |
35 |
ஆகத் திருவிருத்தம் - 636
637 | தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின் மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங் காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச் சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான். |
1 |
638 | செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின் குறியினன் ஔ¤ர்நூலன் குண்டிகை யசைகையன் உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன் மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான். |
2 |
639 | போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந் தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத் தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார். |
3 |
640 | தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல் எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன வளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற் குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான். |
4 |
641 | என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர் சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார். |
5 |
642 | உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும் மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள். |
6 |
643 | அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச் செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய் எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான். |
7 |
644 | வேறு முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக் கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள். |
8 |
645 | மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக் கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். |
9 |
646 | புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான் இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா. |
10 |
647 | அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன் றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌ¤தாமோ பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான். |
11 |
648 | இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர் அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால் வந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள். |
12 |
649 | முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங் கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான் நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள். |
13 |
650 | ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெ·குற்ற நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அ·தெனக் கிளக்கின்றான். |
14 |
651 | ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன ஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர் காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே. |
15 |
652 | வேய்ந்து கொள்வது வௌ¢ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால் சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே. |
16 |
653 | அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக் கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம் நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர் மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான். |
17 |
654 | வேறு புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங் கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள். |
18 |
655 | கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன் மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை. |
19 |
656 | நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற் பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும் ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. |
20 |
657 | முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண் இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள் மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ. |
21 |
658 | தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும் வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே. |
22 |
659 | ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம் தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால் நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழந்தா யென்னில் தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ. |
23 |
660 | வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண் ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார். |
24 |
661 | போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன் காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண் பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம். |
25 |
662 | இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ் செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தௌ¤குவ ரிறையை யௌ¢ளும் வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம் பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள். |
26 |
663 | அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன் திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான். |
27 |
664 | வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப் பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். |
28 |
665 | படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும் மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன். |
29 |
666 | தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன் புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள். |
30 |
667 | நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன் சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம் குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால் மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறான். |
31 |
668 | சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன் மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில் நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி உறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார். |
32 |
669 | அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும் உண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு நண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான் கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன். |
33 |
ஆகத் திருவிருத்தம் - 669
670 | பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண் டருடனை நல்கிய வாதி நாயகன் தெருடரு கயிலையிற் சேர்வுற் றேழ்வகை இருடிகள் தங்களை இதயத் துன்னினான், |
1 |
671 | நினைதலுங் கண்ணுதல் நிமல னேழ்பெரு முனிவரு மன்னதை முன்னி யுள்வெரீஇப் பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில் அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார். |
2 |
673 | பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர் உங்குன தேவலுக் குரிய ராயுற எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம் அங்கவர் தவத்தினு மதகம் போலுமால். |
3 |
673 | எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென முந்துறு கருணையின் முன்னிற் றாதலின் உய்ந்தனம் அடியரே முடிய தீப்பவஞ் சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ. |
4 |
674 | ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை புரிதரு பகவநம் புன்மை நீக்குவான் கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர். |
5 |
675 | வேறு அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி அமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல் உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே. |
6 |
676 | நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி ஏயதொன் முனிவர் யாரும் இமையமே லிறைமுன் நண்ண ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர் கொண்டு தாழ்ந்து நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு கின்றறான். |
7 |
677 | படியறு நுத்£ள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத் தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும் பெற்ற தன்றே நெடியவென் பவமு மினனே நீங்கின நீவி ரெல்லாம் அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென் னறையு மென்றான். |
8 |
678 | அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க் குயிராய் நின்ற சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற் கெமமை யுய்த்தான் இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண் டிறைவன் சொல்வான். |
9 |
679 | துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து மீன்ற கன்னிகை யுமையா டன்னைக் கடிமண முறையின் நல்கி என்னையு மடிமை யாக ஈகுவன் இறைவற் கென்ன மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க லுற்றாள். |
10 |
680 | மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர் நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள் குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள். |
11 |
681 | என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார் ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான். |
12 |
682 | அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம் படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார். |
13 |
683 | வேறு இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும் அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன் செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே. |
14 |
684 | உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழூஉப் பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன் புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள். |
15 |
685 | பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற் கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின் இணமியல் இறையோனை வரமொழி குதிரென்றான். |
16 |
686 | பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண் இனிமையொ டுறநல்கி யெழுவரும் அவணீங்கித் தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார். |
17 |
687 | வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே அந்தமில் அளியோடு மவனடி தொழுதேத்தி எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார். |
18 |
688 | வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம் உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர் புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும் அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார். |
19 |
689 | வேறு எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந் தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார் இங்கிது நின்றிட இமைய மேலிறை அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம். |
20 |
ஆகத் திருவிருத்தம் - 689
690 | 8. வரைபுனை படலம் கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம் மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும் விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும் எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே. |
1 |
691 | கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம் பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான். |
2 |
692 | உன்னிய போதினி லும்பர் கம்மியன் மன்னவன் எதிருற வந்து கைதொழு தென்னைகொல் கருதினை யாது செய்பணி அன்னதை மொழிகென அறைதல் மேயினான். |
3 |
693 | என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும் அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக் கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப் பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான். |
4 |
694 | அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன் செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன் மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர் ஒப்பனை செய்திட வுன்னி னானரோ. |
5 |
695 | நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப் பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும் பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல். |
6 |
696 | மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம் பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான். |
7 |
697 | நீக்கமில் கதலிகை நெடிய கேதனம் மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத் தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும். |
8 |
698 | குரகத முகம்புரை குலைகள் தூங்கிய மரகத வொளிபடு வாழை பூகநல் நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர் விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான். |
9 |
699 | ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும் விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும் அண்ணறன் கோயிலு மாக வீதிகள் எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான். |
10 |
700 | ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன் இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந் தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள் திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன். |
11 |
701 | ஆயிரப் பத்தென அறையும் யோசனை போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக் கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம் வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான். |
12 |
702 | அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின் மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச் செங்கன கத்தினால் திகழச் செய்தனன் கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல். |
13 |
703 | சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம் மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க் கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன். |
14 |
704 | வானவில் மணிமுகில் வனச மாமலர் நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம் ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே. |
15 |
705 | கண்ணடி பூந்தொடை கவரி ப·றுகின் மண்ணிய செழுமணி மாலை தூங்குறப் பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும் விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே. |
16 |
706 | தேவரு முனிவருந் திருவ னார்களும் பாவையின் உயிருறு பண்பி னாக்கியே மேவரு கவரிதார் வீணை யேந்தியே ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான். |
17 |
707 | பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள் தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல் பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன் விண்ணவர் அரம்பையர் யாரும் வெ·கவே. |
18 |
708 | நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப் பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர் ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான். |
19 |
709 | குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள் நிறைதரு மிந்திர நீலத் தாலொரு திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன் இறைவனு மிறைவியும் இனிது மேவவே. |
20 |
710 | குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர் மண்டல மானதும் வகுத்து வேள்விசெய் பண்டம தானதும் படுத்திப் பண்ணவர் எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ. |
21 |
711 | கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம் ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம் முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால் மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான். |
22 |
712 | காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல ஓவறு முற்பல வோடை யோர்பல பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான். |
23 |
713 | பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங் பாசறு நன்மணி கனக மன்னதால் தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம் வாசவன் கண்டுள மருளத் தந்தனன். |
24 |
714 | கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ. |
25 |
715 | இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம் முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும் பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான். |
26 |
716 | சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை மாதவ முனிவரர் மடந்தை மாரொடு காதலின் உமைமணங் காண வந்திடத் தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ. |
27 |
717 | ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங் குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால் பற்றலர் புரமடு பரமற் போற்றியே மற்றவன் றன்னொடு வருது மென்றனர். |
28 |
718 | வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங் கொற்றவை யாமளை குழீஇய காளிகள் சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார். |
29 |
719 | செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி பந்தமில் தாபத பன்னி யாயுளார் அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால். |
30 |
720 | பங்கய மிசைவரு பாவை யேமுதல் நங்கையர் யாவரும் நற்ற வத்தினால் அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர். |
31 |
721 | நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக் குறையுள தாகிய உமைதன் மெய்யினைக் குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர் இறைவனை வழிபடும் இயல்பி னாரென. |
32 |
722 | மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம் ஆதிய வாகிய அலகில் சுற்றமும் ஓதருங் கடல்களும் அரக வேந்தரும் மாதிர யானையும் பிறவும் வந்தவே. |
33 |
723 | வேறு ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன் பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வௌ¢ளி ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல் பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான். |
34 |
724 | ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக் காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர் ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும் ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான். |
35 |
725 | அல்லுறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ் செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான். |
36 |
ஆகத் திருவிருத்தம் - 725
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|