|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கந்த புராணம் - பகுதி 3 -உற்பத்திக் காண்டம் (1329- 1783) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
|
20. தாரகன் வரைப் படலம் | 1329 - 1531 |
21. தேவகிரிப் படலம் | 1532 - 1563 |
22. அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம் | 1564 -1628 |
23. வழிநடைப் படலம் | 1629 - 1644 |
24. குமாரபுரிப் படலம் | 1645 - 1725 |
25. சுரம்புகு படலம் | 1726 - 1765 |
26. திருச்செந்திப் படலம் | 1766 - 1783 |
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
1329 | வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து செம்மை சேர்தரு குமரவேள் படையொடு செல்ல அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர் தம்மை வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம். |
1 |
1330 | விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர் கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கங் கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன் புண்ட ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான். |
2 |
1331 | தூய நான்மறை அந்தணர் முனிவர்இச் சுரத்திற் போய வெல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய் ஏய தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண். |
3 |
1332 | நேரில் இக்கிரிக் கொருபுடை மாயநீள் நகரில் சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் துணைவன் போரில் அச்சுதன நேமியை அணியதாப் புனைந்தோன் தார கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால். |
4 |
1333 | இன்ன வன்றனை அடுதியேல் எளிதுகாண் இனையோன் முன்ன வன்றனை வென்றிட லெனமுனி மொழிய மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி அன்ன வன்றனை முடிக்குதும் இவணென அறைந்தான். |
5 |
1334 | வேறு சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும் நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில் உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார் இறந்தனன் தாரகன் இன்றொ டேயெனா. |
6 |
1335 | ஐயர்கள் பெருமகிழ் வடைய ஆறிரு கையுடை முருகன்அக் காலை தன்புடை மெய்யருள் எய்திய வீர வாகுவாந் துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான். |
7 |
1336 | உற்றவக் கிரிகிர வுஞ்ச மாகுமால் மற்றத னொருபுடை மாய நொச்சியுட் செற்றிய அசுரர்தஞ் சேனை தன்னுடன் அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான். |
8 |
1337 | ஏயநின் துணைவர்கள் இலக்கத் தெண்மர்கள் ஆயிர வௌ¢ளமாம் அடல்கொள் பூதர்கள் சாய்வறு தலைவர்கள் தம்மொ டேகியே நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய். |
9 |
1338 | தடுத்தெதிர் மலைந்திடும் அவுணர் தானையைப் படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல் அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம் முடித்திட வருகுதும் முந்துபோ வென்றான். |
10 |
1339 | நலமிகு குமரவேள் நவில இன்னணம் வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத் தலைமிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்துமுன் நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே. |
11 |
1340 | ஏந்தலந் துணைவராம் இலக்கத் தெண்மரை ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே வாய்ந்திடு பெருந்திறல் வாகு தன்னுடன் போந்திடும் அவுணரைப் பொரவென் றேவினான். |
12 |
1341 | ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான் பூவடி வணங்கியே போதற் குன்னலும் ஆவியுள் ஆவியாம் அமலன் பாங்குறுந் தேவர்கள் கம்மியற் கிதனைச் செப்புவான். |
13 |
1342 | மேதகு பெருந்திறல் வீர வாகுவை தியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால் ஏதமி லாதபல் லிரதம் நல்கெனா ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன். |
14 |
1343 | அத்திறங் கேட்டதோர் அமரர் கம்மியன் ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே சித்திர வயப்பரி சீயங் கூளிகள் இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான். |
15 |
1344 | வேறு அன்ன தேர்த்தொகை அதனை எம்பிரான் மின்னு காலவேல் வீர வாகுவும் பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத மன்ன ரும்பெற வழங்கி னானரோ. |
16 |
1345 | பாகர் தூண்டிடப் படருந் தேர்கள்மேல் வாகை சேர்தரும் வாகு வேமுதல் ஆகினோர் அடைந் தம்பொன் மால்வரைத் தோகை மைந்தனைத் தொழுது போற்றினார். |
17 |
1346 | தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை விழுமி தாகிய விடைபெற் றேகினார் பழுதில் நீத்தமோர் பத்து நூறெனக் குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே. |
18 |
1347 | பாய பூதர்தம் படைக்கு வேந்தராய் ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய் மேயி னார்க்கெலாம் வீர வாகுவோர் நாய கம்பெறீஇ நடுவட் போயினான். |
19 |
1348 | அமர்வி ளைக்கமுந் தவனை யேவியே தமர வேலையில் தானை சூழ்தர இமைய வர்க்கிறை ஏனை யோர்தொழக் குமர வேள்கடைக் கூழை யேகினான். |
20 |
1349 | வேறு பிற்பட எம்பிரான் பெயர ஏவலால் முற்படு வீரனை முயங்கிப் பாரிடச் சொற்படை படர்வன தூமந் தன்னொடு சிற்பரன் நகையழல் புரத்துச் சென்றபோல். |
21 |
1350 | அரிநிரை பூண்டதேர் அலகை பூண்டதேர் பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ விரிகடல் வரைப்பினில் மேக ராசியுங் கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் செல்வபோல். |
22 |
1351 | இடையகல் இரதமோ டிரதந் தாக்கிய படையொடு படைவகை செறிந்த பல்வகைக் கொடியொடு கொடிநிரை துதைந்த கூளியர் அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே. |
23 |
1352 | சங்கொடு பணைதுடி தடாரி காகளம் பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம் எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச் செங்கம லத்தவன் பதத்தைச் செம்மிற்றே. |
24 |
1353 | சாற்றுமிவ் வியல்புறத் தானை வீரருஞ் சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான் கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன் போற்றிய மாயமா புரியைச் சேர்ந்தனன். |
25 |
1354 | வேறு சேர்ந்திடு மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு நேர்ந்திடும் அவுண ரோடு நின்றமர் விளைத்து நின்றார் ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் கோயில் புக்குச் சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது சொல்வார். |
26 |
1355 | எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையை யிட்ட வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன் கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் கடக்கு மென்னா அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு மன்றே. |
27 |
1356 | என்னிவர் மாற்ற மென்னா யாந்தெரி குற்றே மாக அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் திரட்டி யென்னப் பன்னுறு பூத வௌ¢ளம் படர்ந்திடக் குமரன் போந்தான் முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார். |
28 |
1357 | என்றலும் வடவைத் தீயில் இழுதெனும் அளக்கர் வீழத் துன்றிய எழுச்சி மானத் துண்ணெனச் செற்றந் தூண்டே மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி சிருக்கை நீங்கிக் குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான். |
29 |
1358 | எழுந்ததுதன் மருங்கு நின்ற ஒற்றை நோக்கி இந்தச் செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை முளிபுற் கானில் கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை முற்றும் உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான். |
30 |
1359 | வேறு அன்னபணி முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற, கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும், முன்னமொரு நொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப், பின்னர்வரும் அமைச்சர்கள் தந்தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான். |
31 |
1360 | வீடுவான் போலுமினித் தாரகனென் றவன்சீர்த்தி விரைவில் வந்து, கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத் தென்ன, நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வௌ¢ளொலியல் நிமிர்ந்து வீசப், பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும் ஆர்ப்ப. |
32 |
1361 | ஈமத்தே நடம்புரியுங் கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன், மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத், தாமத்தேர் பெறுகின்ற மடஙகல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால், சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண. |
33 |
1362 | ஒற்றர்கூ வியவேலை ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக், கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட், கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச், சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் ப•றேரில் தவன்றிச் சூழ. |
34 |
1363 | மொய்யமர்செய் கோலமொடு முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி, பையரவின் தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர், மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச், செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க. |
35 |
1364 | கார்க்குன்றம் அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந், தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை, ஆர்க்கின்ற ஆயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் நாட்டில், தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் தோன்ற. |
36 |
1365 | வாகையுள பல்லியமும் இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன், ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல், சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச், சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே. |
37 |
1366 | எல்லோருந் தொழுதகைய குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர், கல்லோடு மரனோடுங் கரையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச, வில்லோடுங் கணையோடும் வேலோடும் புரையுமனத் தவுணர்படை எதிர்சிதறி அமர்செய் திட்டார். |
38 |
1367 | வேறு எண்ணுறு படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை விண்ணுறு பூழி யென்னும் விரிதரு புகைமீச் செல்ல மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று வார்போல் கண்ணுறும் இமையோர் கண்கள் படிப்புனல் கான்ற அன்றே. |
39 |
1368 | இரிந்திட லின்றி நேர்வந் தேற்றமர் புரித லாலே சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு சென்னி துள்ளச் சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப் பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார். |
40 |
1369 | தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப் போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும் பொற்பால் காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் அன்றே. |
41 |
1370 | தேர்பரித் தெழுந்து மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால் கார்பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம் போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப் பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார். |
42 |
1371 | வாலுடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக் காலுடைத் திகிரித் திண்டேர் கழல்களால் உருட்டிக் காமர் பாலுடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிச் சென்றார் வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர வீரர். |
43 |
1372 | வாருறு புரசை பூண்ட வன்களிற் றொருத்தல் யாவுஞ் சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி சூழப் பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது காருற வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே. |
44 |
1373 | கண்ணெதிர் நின்று போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித் துண்ணெனப் பூதர் வீசத் துளங்கிய கலன்க ளோடும் விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே. |
45 |
1374 | ஆயிர வௌ¢ள மாகுங் கணவரும் ஆங்க ணுள்ள பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து வீசி மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார் ஏயென வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார். |
46 |
1375 | நிணங்கவர் ஞமலி யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின் கணங்களும் அலகை தானுங் கறங்கிடக் கானத் தோங்கிப் பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் விலக்கி யார்க்கும் அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா. |
47 |
1376 | தரைத்தடஞ் சிலைய தாகத் தறுகண்வெம் பூத ரானோர் வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி யாகத் திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார். |
48 |
1377 | தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் பணைகொண் டெற்றி முத்தலை யெ•கம் வீசி முசலத்திற் புடைத்து மொய்ம்பால் குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர். |
49 |
1378 | விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல் எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்த மாக அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய கொழுந்தசை மிசைந்து நின்று குரவை யாட் டயர்ந்த கூளி. |
50 |
1379 | கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றங் கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் புற்றுத் தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான். |
51 |
1380 | அல்லெனப் பட்டமேனி அவுணர்கட் கரசன் கையிற் கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் கரங்கள் சென்னி பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் சாய்ந்த புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம். |
52 |
1381 | பிடித்திடு வயிரத் தண்டம் பெருங்கடற் பூத வௌ¢ளம் முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின் மேலோன் அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் ஓங்கி எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல். |
53 |
1382 | தாரிடங் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம் போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் கரங்கள் சிந்திக் காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப வீட்டிப் பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா. |
54 |
1383 | அன்றரி விடுத்த ஆழி ரமா வணிந்த தீயோன் கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் செல்லும் வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார். |
55 |
1384 | திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் சிலைகா லூன்றி மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார். |
56 |
1385 | சூழ்ந்தனர் துரந்த வாளி தோன்முகத் தவுணன் யாக்கை போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில புன்மை யாகித் தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை தாங்கி வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட. |
57 |
1386 | தரைபடப் புகழ்வைத் துள்ள தாரகன் தடமார் பத்தைப் புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் பட்டு மீண்டு நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம் வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே. |
58 |
1387 | விடுகணை மாரி யாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர் படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் அவைகள் எய்தா உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக் கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார். |
59 |
1388 | மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டஞ் சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் கடுமான் தேர்கள் எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் வாரிப் பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான். |
60 |
1389 | துளும்பிய அளக்கர் தன்னில் சூழுற நின்ற தெங்கின் வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக் குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற வீரர் இளமபிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார். |
61 |
1390 | கொற்றவில் உழவன் வீர கோளரி யதனை நோக்கிச் செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் கொண்டு பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன் பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான். |
62 |
1391 | ஆர்த்திடு மோதை கேளா அண்டர்கள் அனையன் மீது தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் காணா வேர்த்தனன் மான முன்றான் வீரகே சரிமேல் அங்கைத் தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான். |
63 |
1392 | வேறு சென்றொர் மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன் மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான். |
64 |
1393 | வேறு குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப் பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில் செறித்தேயுற வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன். |
65 |
1394 | பொழிந்தான்சர மழைநம்மவன் புரமேலது பொழுதின் இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை ஈரெழுதொட் டிறுப்ப அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான். |
66 |
1395 | பொருமூவிலை வேலங்கவன் பொன்மார்புறப் பொருமிப் பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய் வருமூவரும் ஒருநால்வரும் மாறுற்றமர் இழைத்தார். |
67 |
1396 | அமர்செய்திடும் எழுவீரரும் அவுணன்றனக் குடையக் குமரன்பதந் தலைக்கொண்டிடுங் கோமானது காணா எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச் சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான். |
68 |
1397 | ஒருகார்முகம் இருகால்வளை வுறவேகுனித் துகுதேன் அருகாதொழு கியதன்மையின் அவிர்நாணொலி யெடுப்பத் திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர் இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார். |
69 |
1398 | நாண்கொண்டிடும் ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார் பூண்கொண்டிடு சிலைவாங்கலும் மகிழ்வுற்றிடு புலவோர் சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் அதுவந்திடச் சிறந்தே மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் வதுபோல். |
70 |
1399 | வேறு மேதா வியர்க பரவுந்திறல் வீரவாகு மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத் தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித் தீதாம் அழல்போல் வெகுண்டேயிது செப்பு கின்றான். |
71 |
1400 | பொன்றா வலிகொண் டமராடிய பூதர் தம்மை வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால் வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக் கொன்றாவி உண்பன் எனலுங்கொடி யோன்உ ரைப்பான். |
72 |
1401 | மாயன் றனைவென் றவன்நேமியை மாசில் கண்டத் தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றாதே நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ் சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ. |
73 |
1402 | சாருங் குறள்வெம் படையாவையுஞ் சாய்ந்த வீரர் ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து நின்றார் வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய் பாரென் வலியால் உதாவி படுப்ப னென்றான். |
74 |
1403 | என்னுந் துணையில் சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத் தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார கப்பேர் மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூணடிச் சின்னம் புரிந்து கணைநூறு செலுத்தி னானால். |
75 |
1404 | எவ்வக் கொடியோன் தொடுவாளியை ஏந்தல் காணா அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று மாற்றக் கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத் தெய்வப் படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான். |
76 |
1405 | வேறு வெங்கனற்படை தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின் செங்கனற்படை யேவியன்னது சிந்தவேவரு ணப்படை அங்கணுய்ததிட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை படையினைத் துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன். |
77 |
1406 | இரவிதன்படை அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே விரைவிலன்னது தொலைவுகண்டனன் வீரமேதகு தாரகன் உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது கந்தவேள் அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா. |
78 |
1407 | அனிலவெம்படை வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன் அனதுதொல்படை ஏவினானது தணிவில்செற்றமொ டேகலும் வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை தூண்டியே நினையுமுனனது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே. |
79 |
1408 | ஆயதன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே மேயவானவர் படைகள் யாவையும் வீரன்மற்றிவன் வென்றனன் மாயநீர்மையின் இங்கிவன்றிறல் வனமைகொள்ளுதும் இனியெனாத் தீயபுந்தியில் இனையவாறு தெரிந்துசிந்தனை செய்துமேல். |
80 |
1409 | தொல்லைமாயையின் விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென மல்லன்மேவரு தாரகாசுரன் வடிவமெண்ணில தாங்கியே எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி இருட்குழாம் ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே. |
81 |
1410 | கண்டுமற்றது வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே விண்டுநீளிடை நின்றபூதர் வெருண்டுபின்னரும் ஓடினார் மண்டுபேரமர் செய்தயர்ந்திடு மானவீரரும் அச்சமேல் கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் குணலையிட்டனர் அவுணரே. |
82 |
1411 | வேறு தார கப்பெயர் அவுணர்கோன் மாயையின் சமரும் ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் புடையோன் பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும் வீர பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான். |
83 |
1412 | துங்க வுக்கிரச் சிம்புள்மாப் படையினைத் தூயோன் செங்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால் அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப் பொங்கு பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே. |
84 |
1413 | தன்பு ணர்ப்புறு மாயைதான் உடைதலுந் தமியாய் முன்பு நின்றதோர் தாரகன் மொய்ம்புளான் றன்னைப் பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் பிடித்து மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில். |
85 |
1414 | தார கன்தொலைந் தோடலுந் தனக்கிணை யில்லோன் போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் புத்தேள் வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச் சீரி தாகிய தூணியுள் அன்னதைச் செறித்தான். |
86 |
1415 | அற்ற போர்வலித் தாரகன் பின்வரைந் தணுகிப் பற்றி நாண்கொடு புயந்தனைப் பிணித்தெனைப் பணித்த கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் குறித்து மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு. |
87 |
1416 | வேழ மாமுகற் கிளவலை உன்னியே வீரன் ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச் சூழு மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப் பாழி யொன்றுசென் றொளித்தனன் தாரகப் பதகன். |
88 |
1417 | முன்ன மாங்கவன் போகிய பூழையுள் முடுகிப் பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும் அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின் மன்ன னேகுறா இருள்நிலம் போன்றுவை கியதே. |
89 |
1418 | நீளு மாலிருள் படர்தலுஞ் சில்லிடை நெறியால் தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் காணான் ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான் மீளு கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான். |
90 |
1419 | செற்ற மிக்கவன் மாயைஇவ் வரையெனச் சிந்தித் துற்ற காலையில் அவுணனா கியகிர வுஞ்சப் பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து மற்ற வன்றன துணர்வினை மையல்செய் ததுவே. |
91 |
1420 | இயலி சைத்தமிழ் முனிவரன் இசைத்தசூள் இசைவால் வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை மிகவும் மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித் துயில லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே. |
92 |
1421 | அம்ம லைக்கணே முன்னவன் உறங்கலும் அனைய செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் சிறந்த தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும் விம்ம லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார். |
93 |
1422 | உடைந்து போயின தாரகன் றன்னைநம் முரவோன் தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட் படர்ந்து நாடுதும் யாமுமென் றெண்ணினர் பலரும். |
94 |
1423 | எண்ணி யேயிசைந் திளையரோ ரெண்மரும் இலக்கம் நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா யகரும் அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில். |
95 |
1424 | ஆய வெற்பினில் வீரவா குப்பெயர் அடலோன் போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந் தீய தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல் மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார். |
96 |
1425 | வெற்றி வீரவா குப்பெயர் அண்ணலும் வீரர் மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே இற்று ளாரென மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான். |
97 |
1426 | அண்ட மீமிசை நின்றவா னவர்கள்இவ் வனைத்துங் கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக் கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித் தண்டம் யாவையும் வெருவின தலைவர்இன் மையினால். |
98 |
1427 | மலையின் மீமிசை பெழுதரு தாரகன் மற்றோர் தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள் பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற் சிலைய தொன்றினை வாங்கியே செருநிலஞ் சென்றான். |
99 |
1428 | நீடு தன்சிலை நாணொலி கொண்டுநீள் சரங்கள் கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி ஆடல் சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந் தோட லுற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே. |
100 |
1429 | ஆன காலையின் நாரதன் இனையகண் டழுங்கி மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர் சேனை காவலன் நின்றதோர் கடைக்கூழை சேர்ந்தான். |
101 |
1430 | அரிது மாதவம் புரிதரு நாரதன் அடலின் விரவு மாயிரம் பூதவௌ¢ ளத்தொடு மேவுங் கருணை சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச் சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே இனையன சொல்வான். |
102 |
1431 | ஐய நின்படை வீரர்கள் பெருஞ்சம ராடி வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச் செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப் பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும் பொருதார். |
103 |
1432 | தலைக்க ணாகிய வீரனுந் தமிபியர் பிறரும் இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும் புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன் மலைக்கண் உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால். |
104 |
1433 | உய்த்த காலையில் அவுணனா கியகிர வுஞ்சம் மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் வெருவிப் பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர் இத்தி றந்தனை உயர்ந்தனன் தாரக னென்போன். |
105 |
1434 | தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை சொரிய முரிந்து பேரீயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும் இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான். |
106 |
1435 | என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர் நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில் துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும் ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான். |
107 |
1436 | வேறு ஆருமிது கேண்மின் அம ராடுகளன் ஏகித் தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும் ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் என்றான். |
108 |
1437 | எந்தையிவை கூறுதலும் யாருமவை தேர்ந்து சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக் கந்தனடி வந்தனை புரிந்தனர் களிப்பால். |
109 |
1438 | கந்தமுரு கேசனது காலைமுது பாகாய் வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச் சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே உந்துதி விரைந்தென உரைத்தருள லோடும். |
110 |
1439 | என்னவினி தென்றுதொழு தேழெழுவ கைத்தாந் தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக் கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித் துன்னுபரி மான்நிரைகள் தூண்டிமிக ஆர்த்தான். |
111 |
1440 | வேறு ஆன காலைதனில் அண்டமும் வையந் தானும் அங்குள தடங்கிரி யாவும் ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள மான வேழமும் நடுங்கின மன்னோ. |
112 |
1441 | வாவு கின்றபல மாநிரை தூண்டத் தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன் மேவு தொல்லிரதம் விண்ணெறி கொண்டே ஏவ ரும்புகழ ஏகிய தன்றே. |
113 |
1442 | ஆதி யங்குமரன் அவ்வழி பொற்றேர் மீது செல்லுதலும் விண்முகில் பல்வே றோதும் வண்ணமுடன் உற்றென வானில் பூத சேனைபுடை போயின அன்றே. |
114 |
1443 | போர ழிந்துபுற கிட்டெதிர் பூதர் ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த நார ணன்றனது நன்மரு கானோன் தார கன்திகழ் சமர்க்களம் உற்றான். |
115 |
1444 | கவன மோடுபடர் காலினு முந்திச் சிவன்ம கன்றனது சேனைய தானோர் உவரி யாமென உறுந்திறம் நோக்கி அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார். |
116 |
1445 | சகந்து திக்கவரு சாரதர் தாமும் அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும் இகந்த வன்மையொ டெதிர்ந்திகல் எய்தி வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார். |
117 |
1446 | கரங்கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச் சரங்க ளாதியன தானவர் விடடார் உரங்கொள் மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள் மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர். |
118 |
1447 | முரிந்த தேர்நிரை முடிந்தன மாக்கள் நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி சொரிந்த பூதர்மெய் துணிந்தன வானில் திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே. |
119 |
1448 | நிறங்கொள் செங்குருதி நீத்தம தாகிக் கறங்கி யோடின கவந்தமொர் கோடி மறங்கொ டாடுவ வயின்தொறு மாகிப் பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம். |
120 |
1449 | அனைய வாறிவர் அருஞ்சம ராற்றப் புனையல் வாகையுள பூதர்கள் தம்மால் வினையம் வல்லவுணர் வெவ்வலி சிந்தி இனைத லோடுமிரி குற்றனர் அன்றே. |
121 |
1450 | தன்ப படைத்தொலைவு தாரகன் நோக்கிக் கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே மின்ப டைத்தபல வெங்கணை தூவி வன்ப படைக்கணம் வருந்த நடந்தான். |
122 |
1451 | நடந்தெ திர்ந்தகண நாதரை யெல்லாந் தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே இடந்தி கழ்ந்தஇமை யத்திறை நல்கும் மடந்தை தந்ததிரு மைந்தன்முன் உற்றான். |
123 |
1452 | உற்ற காலைதனில் ஒற்றரை நோக்கிச் சற்று நீதியறு தாரக வெய்யோன் செற்றம் என்னுமழல் சிந்தையின் மூள மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான். |
124 |
1453 | என்ன லுங்குமரன் இங்கிவ னேயாம் மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந் துன்னு தேர்கடிது தூண்டி எவர்க்கும் முன்ன வன்மதலை முன்னுற வந்தான். |
125 |
1454 | வேறு முழுமதி யன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும் விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும் அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ் செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ. |
126 |
1455 | தற்பம துடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால் சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் நோக்கி அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால் கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். |
127 |
1456 | இந்தவா றுன்னிப் பின்னர் யார்க்குமே லாகும் ஈசன் தந்ததோர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும் முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக் கந்தவேள் தன்னைநோக்கி இனையன கழற லுற்றான். |
128 |
1457 | நாரணன் றனக்கு மற்றை நான்முகன் றனக்கும் வௌ¢ளை வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல னுக்குந் தாரணி தனல்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர் காரண மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான். |
129 |
1458 | அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும் இறையவ னாகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள் சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம் விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான். |
130 |
1459 | வேறு கூரிய வேற்படைக் குமர நாயகன் பேரருள் நிலைமையால் இனைய பேசலும் போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத் தாரக னென்பவன் சாற்றல் மேயினான். |
131 |
1460 | செந்திருத் திகழுமார் புடைய செங்கணான் சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென் கந்தரத் தணிந்தது காண்கி லாய்கொலோ. |
132 |
1461 | இன்றுகக றெம்முடன் இகலிப் போர்செயச் சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட் பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது வென்றுளார் இலையது வினவ லாய்கொலோ. |
133 |
1462 | முட்டிவெஞ் சமரினை முயல முன்னம்நீ விட்டிடு தலைவரை வென்று வெற்பினில் பட்டிட இயற்றினன் பலக ணங்ளை அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ. |
134 |
1463 | ஆகையால் எம்முடன் அமரி யற்றியே சோகம தடையலை சூல பாணிபால் ஏகுதி பாலநீ என்று கூறலும் வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான். |
135 |
1464 | தாரணி மறையவன் ததீசி தன்மிசை நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன் கூரினை இழந்துபோய்க் குலாலன் சக்கர நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ. |
136 |
1465 | சூற்புயல் மேனியான் துங்கச் செங்கையின் பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம் வேற்படை நின்னுயிர் விரைவின் உண்ணுமால். |
137 |
1466 | உங்கள்பே ராற்றல்இவ் வுலகை வென்றன இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள் பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல். |
138 |
1467 | ஈட்டிய மாயைகள் எவையுந் தன்வழிக் காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந் தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை மீட்டிடு கின்றனன் விரைவி னாலென்றான். |
139 |
1468 | என்றலுஞ் சீறியே இகலித் தாரகன் குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே மின்றிகழ் நாணொலி எடுப்ப விண்மிசைச் சென்றிடும் அமரருந் தியக்க மெய்தினார். |
140 |
1469 | எய்திய காலையில் எந்தை கந்தவேள் கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை மொய்தனில் வாங்கிநாண் முழக்கங் கோடலும் ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே. |
141 |
1470 | நாரியின் பேரொலி நாதன் கோடலும் ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார் பேருல கெங்கணும் பேதுற் றேங்கின தாரக முதல்வனுந் தலைது ளக்கினான். |
142 |
1471 | துளக்கிய தாரக சூரன் கைத்தலங் கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென வளக்கதிர் நுனைகெழு வயிர வான்கணை அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான். |
143 |
1472 | ஆயதோர் காலையில் ஆறு மாமுகன் மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ் சாயகந் தூண்டியே தார காசுரன் ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான். |
144 |
1473 | சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன் உந்தினன் பின்னரும் ஓராயி ரங்கணை கந்தனும் அனையது கண்டு வல்லையின் ஐந்திரு பகழிதொட் டவற்றை நீக்கினான். |
145 |
1474 | மீட்டுமத் தாரகன் விசிகம் வெஞ்சிலை பூட்டிய வாங்கலும் புராரி காதலன் ஈட்டமொ டொருகணை யேவி ஆங்கவன் தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான். |
146 |
1475 | வேறு அங்கோர் சிலையைக் குனித்தானது காலை தன்னில் எங்கோ முதல்வன் ஒருபாணியின் ஏந்து வில்லில் செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான் வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில். |
147 |
1476 | சேரார் பரவுந் திறல்வேலவன் செய்கை நோக்கித் தாரார் முடித்தா ரகவீரன் தனது வில்லில் ஓரா யிரம்வா ளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து நேராய் விரவுங் கணையாவையும் நீறு செய்தான். |
148 |
1477 | வெய்யான் அநந்தங் கணை தூண்ட விமலன் நல்குந் துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம் எய்யாகும் வண்ணஞ் செறித்தானவன் யாக்கை யெங்கும். |
149 |
1478 | ஒருகோடி வாளி உறலோடும் உருத்து நீசன் இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி இருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும் பொருகோடும் வீழ விடுத்தான்இரு புங்க வாளி. |
150 |
1479 | வந்தங் கிரண்டு சரமும்பட மாயை மைந்தன் தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி யெய்தி முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக் கந்தன் தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான். |
151 |
1480 | மல்லற் கொடியிற் றதுகண்டு மறங்கொள் வெய்யோன் வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது வீட்டித் தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன் செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான். |
152 |
1481 | வேறங் கொருதேர் மிசையேறியொர் வில்லை வாங்கி நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள் ஏறுந் தடந்தேர் வலவன்புயத் தெய்த உய்த்தான். |
153 |
1482 | வென்றோர் புகழுங் குமரன்வியன் தேர்க டாவிச் சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய வாளி வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப் பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான். |
154 |
1483 | வீழுற் றிடலும் விழுசெம்புனல் வௌ¢ள மிக்கே தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த லுற்ற பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச் சூழிக் களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன. |
155 |
1484 | மன்னா கியதா ரகன்அங்கண் மயங்கி வீழ அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக் கொன்னார் சினங்கொண் டடுபோரைக் குறித்து நம்பன் தொன்னான் உதவுந் திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார். |
156 |
1485 | சூலந் திகிரிப் படைதோமரந் துய்ய பிண்டி பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி தண்டம் ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக வேலும் படைகள் பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி. |
157 |
1486 | கறுத்தான் அவர்தஞ் செயல்கண்டுதன் கார்மு கத்தை நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட வுய்த்து மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி அறுத்தான் விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன். |
158 |
1487 | வெய்தாகிய தீங்கணை மாரி விசாகன் மீட்டும் பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு மார்பைத் துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக் கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே. |
159 |
1488 | வில்லோர் பரவுந் திறல்வேலவன் வெய்ய கோலால் அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில் பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச் சில்லோர் கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார். |
160 |
1489 | மைக்கார் சிவந்த தெனுந்தாரகன் மையல் நீங்கி அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி நின்று தொக்கார் அமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி நக்கான் அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான். |
161 |
1490 | வேறு செய்ய வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக் கையி ழந்துமு கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன் மைய லெய்திவி ழுந்த னன்பொரும் வலிய தானையும் மாண்டன ஐய வீங்கொரு தமியன் நின்றனன் அழகி தாலென தண்மையே. |
162 |
1491 | தாவில் வெஞ்சிலை வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே மேவ லானிவன் உயிர்கு டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால் தேவர் மாப்படை தொடுவ னிங்கினி யென்று சிந்தனை செய்துபின் ஏவரும் புகழ் தார காசுரன் இனைய செய்கை இயற்றினான். |
163 |
1492 | வேறு அடலரி நான்முக னாதி வானவப் படையினை யாவையும் பவஞ்செய் தாரகன் விடவிட வந்தவை வெருவி மேலையோன் புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே. |
164 |
1493 | செங்கண்மா லயன்முதற் றேவர் மாப்படை துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப் புங்கவன் பாங்கரிற் போற்றி நிற்றலும் அங்கது கண்டனன் அவுணர் மன்னவன். |
165 |
1494 | ஒருவினன் அகநதையை உள்ள மோரிறை வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான் எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல் அரியது போலுமென் றகத்தில் உன்னினான். |
166 |
1495 | பாங்கரின் மாதுடைப் பரமன் தொல்படை ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை வாங்கினன் அருச்சனை மனத்தி னாற்றினன் ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான். |
167 |
1496 | சங்கரன் தொல்படை தறுகண் ஆலமும் புங்கவர் படைகளும் பூத ராசியும் அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும் வெங்கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே. |
168 |
1497 | கலைகுலாம் பிறைமுடிக் கடவுள் மாப்படை அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும் உலைகுறா தலமர வுரத்துச் சேறலும் இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான். |
169 |
1498 | கந்தவேள் அனையது கண்டு தந்தையைச் சிந்தையின் உன்னியோர் செங்கை நீட்டியே அந்தவெம் படையினை அருளிற் பற்றினான் தந்தவன் வாங்கிய தன்மை யென்னவே. |
170 |
1499 | நெற்றியில் விழியுடை நிமலன் காதலன் பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான் மற்றது தாரக வலியன் கண்ணுறீஇ இற்றது நந்திரு இனியென் றேங்கினான். |
171 |
1500 | தேவர்கள் தேவனார் தெய்வத் தொல்படை ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான் மூவிரு முகமுடை முதல்வன் வன்மையை நாவினி லொருவரால் நவிறற் பாலதோ. |
172 |
1501 | ஆயினும் அரன்மகன் அறத்தின் போரலால் தீயதோர் கைதவச் செருவ துன்னலான் மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான் ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான். |
173 |
1502 | கையனும் இவ்வகை கருத்தி லுன்னியே ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன் வையமொ டேகிநீ வல்ல மாயைகள் செய்குதி செய்குதி யென்று செப்பினான். |
174 |
1503 | வேறு செப்பிய இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி முப்புர வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான் அப்புர நிருதர்க ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக ஒப்பறு சூரன திளையோனும் உருமென அவையிடை உலவுற்றான். |
175 |
1504 | வேலைக ளுருவினை வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன் காலம திறுதியில் உலகுண்ணுங் கனையொலி அனலிக ளெனநின்றான் சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை சூழ்தரும் இருளாக மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட நிரையானான். |
176 |
1505 | இந்திரன் முதலுள சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல் அந்தநெ டுங்கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரியாகித் தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட முதிரொலி யுடன்வந்தான் முந்திய தந்தம துருமாறி முறைமுறை நின்றதொர் திறனேபோல். |
177 |
1506 | வாயுவின் உருவென மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான் தேயுவின் உருவென வரலுற்றான் திரியவும் நெடுவரை விரைவோடுங் காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம திடையுற மிடைகாலை ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் அறமில்லான். |
178 |
1507 | அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி எவ்விடை யுஞ்செறி தரலோடும் எம்பெரு மானவன் இவைகாணாத் தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் என்றுள மிசைகொண்டே கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி கழறுற்றான். |
179 |
1508 | தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப் பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைகின்ற வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான். |
180 |
1509 | சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும் ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண் மாயையி னாகிய வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந் தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற. |
181 |
1510 | வேறு அரண்டரு கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந் திரண்டொரு வடிவின் வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு முரண்டரு தடந்தோள் அண்ணல் முத்தலை படைத்த சூலம் இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் றவ்வேல். |
182 |
1511 | முடித்திடல் அரிய மாய மூரிநீர்க் கடலை வற்றக் குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் திடுத லோடுந் தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் பற்றி ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான். |
183 |
1512 | அச்சமொர் சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல் நச்சர வென்னச் சீறி நணுகலும் அவன்மார் பென்னும் வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் றென்னச் செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே. |
184 |
1513 | தாரகன் மார்ப மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய தென்ன அங்கட் சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே. |
185 |
1514 | மீண்டிடு சீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை யெழுப்பி வான்போய் மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன் தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா. |
186 |
1515 | தண்டம தியற்றுங் கூர்வேல் தாரக வவுணன் மார்பும் பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே ரோசை கேளா விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார் அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர். |
187 |
1516 | வடித்ததை யன்ன கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத் தடித்திடு கின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து துள்ளிப் படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான். |
188 |
1517 | தடவரை யனைய மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப் புடவியில் வீழா நின்றான் பொள்ளென வானில் துள்ளிக் கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் கலக்க மெய்தி உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன். |
189 |
1518 | தளர்ந்திடல் இல்லா வீரத் தாரகன் பட்டு வானில் கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு பிலமும் பாரு பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம் உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை. |
190 |
1519 | தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய் மண்ணிடை மறிந்த தன்மை வன்சிறை இழந்த நாளில் திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் றுன்னி விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. |
191 |
1520 | வெற்றிய தாகுங் கூர்வேல் வெற்பினை அட்ட காலைச் செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய பொறிக ளெங்கும் பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம் வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே. |
192 |
1521 | சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப் பிறந்திடு கின்ற தீயைத் தீயெனப் பேச லாமோ அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் மெய்யில் உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே. |
193 |
1522 | யானுற்ற குன்றந் தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள் தானுற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில் ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம் வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே. |
194 |
1523 | திறலுடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும் பொறிகளும் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த தன்மை மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் அடைந்தொன் றாகி இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ. |
195 |
1524 | தந்தியின் வதனங் கொண்ட தாரக வவுணன் மார்வில் சிந்துறு குருதச் செந்நீர் திரைபொரு தலைத்து வீசி அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில் வந்திடு பூழை* புக்கு மறிகடல் மடுத்த தன்றே. ( * பூழை - துவாரம்.) |
196 |
1525 | விட்டவேல் மீண்டு கந்த வேள்கரத் திருப்பத் தீயோன் பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாருங் கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் கமலத் தேவும் முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் ஆர்த்தார். |
197 |
1526 | ஆடினர் குமரற் போற்றி அங்கைக ளுச்சி மீது சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார் நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார். |
198 |
1527 | ஆங்கது காலை தன்னில் அளப்பிலா மாயை வல்ல ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந் தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள் பூங்கழல் வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார். |
199 |
1528 | வாருறு கழற்கால் வீர வாகுவே முதலா வுள்ள வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் நோக்கித் தாரகன் வரை**யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர் ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான். ( ** தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.) |
200 |
1529 | செய்யவன் இனைய வாறு சீரருள் புரிய வீரர் ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார். |
201 |
1530 | என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள் வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட வன்றிறற் படையின் வேந்தை*** மற்றவன் கரத்தின் நல்கி நன்றிது போற்று கென்றே நவின்றுநல் லருள்பு ரிந்தான். ( *** படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.) |
202 |
1531 | தாரகன் போரில் துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம் ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் எழுவே செய்து பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச் சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவவேள். |
203 |
ஆகத் திருவிருத்தம் - 1531
-----
1532 | மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும் ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல் சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான். |
1 |
1533 | அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான் பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத் திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால் இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான். |
2 |
1534 | ஒப்பறு சூர்பின் னோனை ஒருவன்வேல் அட்ட தன்மை இப்புற வுலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே அப்புற வுலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று செப்புவ னென்பான் போலச் செங்கதிர் மறைந்து போனான். |
3 |
1535 | பானுவென் றுரைக்குமேலோன் பகற்பொழு தெலாங்கைக்கொண்டான் ஏனைய மதியப் புத்தேள் இரவினுக் கரச னானான் நானிவற் றிடையே சென்று நண்ணுவ னென்று செந்தீ வானவன் போந்த தென்ன வந்தது மாலைச் செக்கர். |
4 |
1536 | வம்பவிழ் குமுத மெல்லா மலர்ந்திடு மாலை தன்னில் வெம்படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான்முன் வந்த அம்புதி முருச மாயிற் றாகையால் தானும் வெற்றிக் கொம்பென விளங்கிற் றென்ன எழுந்தது குழவித் திங்கள். |
5 |
1537 | ஏற்றெதிர் மலைந்து நின்ற இகலுடை யவுணர் தம்மேற் காற்றெனத் தேர்க டாவிக் கடுஞ்சமர் புரிந்த வெய்யோன் மாற்றருஞ் செம்பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று மேற்றிசை வீழ்ந்த தென்ன இளம்பிறை வழங்கிற் றன்றே. |
6 |
1538 | கானத்தின் ஏனம் ஒத்த கனையிருட் சூழல் மற்றவ் வேனத்தின் எயிற்றை யொத்த திளம்பிறை அதனைப் பூண்ட கோனொத்த தண்டம் அந்தக் கூரெயி றுகுத்த முத்தந் தானொத்து விளங்கு கின்ற தாரகா கணங்க ளெல்லாம். |
7 |
1539 | அல்லிது போந்த காலை ஆரமா மாலை யென்னக் கல்¢லென அருவி தூங்குங் கடவுள்வெற் பொ சா ரெய்தி மெல்லிதழ் வனசத் தேவும் விண்டுவும் விண்ணின் தேவும் பல்லிமை யோருஞ் செவ்வேள் பதமுறை தொழுது சொல்வார். |
8 |
1540 | வன்கணே யுடைய சூர்பின் வருத்திட இந்நாள் காறும் புன்கணே யுழந்தே மன்னான் பொருப்பொடு முடியச் செற்றாய் உன்கணே வழிபா டாற்ற உன்னினம் இன்ன வெற்பின் தன்கணே இறுத்தல் வேண்டுந் தருதியிவ வரம தென்றார். |
9 |
1541 | பசைந்திடும் ஆர்வங் கொண்ட பண்ணவர் இனைய தன்மை இசைந்தனர் வேண்டு மெல்லை எ•குடை அண்ணல் அங்கண் அசைந்திடு தன்மை யுன்னி அருள்செய வதுகண் டன்னோர் தசைந்துமெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேருவகை பூத்தார். |
10 |
1542 | ஒண்ணில வுமிழும் வேலோன் ஒலிகழற் றானையோடுங் கண்ணனை முதலா வுள்ள கடவுளர் குழுவி னோடும் பண்ணவர் கிரிமேற் சென்று பாங்கரில் தொழுது போந்த விண்ணவர் புனைவன் றன்னை விளித்திவை புகல லுற்றான். |
11 |
1542 | புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந் தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான். |
12 |
1544 | வேறு குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலுங் கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்றிது வழங்கு மெல்லை வகுப்பனென் றன்னவன் தழங்கு நூபுரத் தாள்பணிந் தேகினான். |
13 |
1545 | மகர தோரணம் வாரியின் மல்கிய சிகர மாளிகை செம்பொனின் சூளிகை நிகரில் பற்பல ஞௌ¢ளல்கள் ஈண்டிய நகர மொன்றினை யாயிடை நல்கினான். |
14 |
1546 | அவ்வ ரைக்கண் அகன்பெரு நொச்சியுட் கைவல் வித்தகக் கம்மியர் மேலவன் எவ்வெ வர்க்கும் இறைவன் இருந்திடத் தெய்வ தக்குல மொன்றுசெய் தானரோ. |
15 |
1547 | மாற்ற ரும்பொன் வரையுள் மணிக்கிரி தோற்றி யென்னச் சுடர்கெழு மாழையின் ஏற்ற கோட்டத் திழைத்தனன் கேசரி ஆற்று கின்ற அரதனப் பீடிகை. |
16 |
1548 | இனைய தன்மையும் ஏனவும் நல்கியே மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம் அனிக மோடும் அமரர்கள் தம்மொடும் முனையின் மேற்படை மொய்ம்பன்அங் கேகினான். |
17 |
1549 | அறுமு கத்தவன் அந்நக ரேகியே துறும லுற்றிடுந் தொல்பெருந் தானையை இறுதி யற்ற இருக்கைகொள் ஆவணம் நிறுவ லுற்று நிகேதனத் தெய்தினான். |
18 |
1550 | இரதம் விட்டங் கிழிந்துபொற் பாதுகை சரணம் வைத்துத் தணப்பரும் வீரருஞ் சுரரு முற்றுடன் சூழ்தரத் துங்கவேல் ஒருவன் மற்றவ் வுறையுளின் ஏகினோன். |
19 |
1551 | ஊறில் வெய்யவர் யாரும் ஒரோவழிச் சேற லெய்திச் செறிந்தென வில்விடு மாறில் செஞ்சுடர் மாமணிப் பீடமேல் ஏறி வைகினன் யாரினும் மேலையோன். |
20 |
1552 | பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம் விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவருங் குழும லுற்றுக் குமரனை அவ்விடை வழிப டத்தம் மனத்திடை உன்னினார். |
21 |
1553 | புங்க வன்விழி பொத்திய அம்மைதன் செங்கை தன்னிற் சிறப்பொடு தோன்றிய கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும் அங்கண் வந்ததை அப்பெரு மாநதி. |
22 |
1554 | சோதி மாண்கலன் தூயன பொற்றுகில் போது சாந்தம் புகைமணி பூஞ்சுடர் ஆதியாக அருச்சனைக் கேற்றன ஏதும் ஆயிடை எய்துவித் தாரரோ. |
23 |
1555 | அண்டர் தொல்லை அமுத மிருத்திய குண்ட முற்ற குடங்கர் கொணர்ந்திடா மண்டு தெண்புனல் வானதி தன்னிடை நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார். |
24 |
1556 | அந்த வெல்லை அயன்முதற் றேவரும் முந்து கின்ற முனிவருஞ் சண்முகத் தெந்தை பாங்கரின் ஈண்டி யவன்பெயர் மந்திரங் கொடு மஞ்சன மாட்டினார். |
25 |
1557 | வெய்ய வேற்படை விண்ணவற் கின்னணம் ஐய மஞ்சனம் ஆட்டிமுன் சூழ்ந்திடுந் துய்ய பொன்னந் துகிலினை நீக்கியே நொய்ய ப•றுகில் நூதனஞ் சாத்தினார். |
26 |
1558 | வீற்றொர் சீய வியன்றவி சின்மிசை ஏற்றி வேளை இருத்தி அவன்பெயர் சாற்றி மாமலர் சாத்தித் தருவிடைத் தோற்று பூவின் தொடையலுஞ் சூட்டினார். |
27 |
1559 | செய்ய சந்தனத் தேய்வைமுன் கொட்டினர் ஐய பாளிதம் அப்பினர் நாவியுந் துய்ய நானமுந் துன்னமட் டித்தனர் மெய்யெ லாமணி மேவரச் சாத்தினார். |
28 |
1560 | சந்து காரகில் தண்ணென் கருப்புரங் குந்து ருக்கமொண் குக்குலு வப்புகை செந்த ழற்சுடர் சீர்மணி ஆர்ப்பொடு தந்து பற்றித் தலைத்தலை சுற்றினார். |
29 |
1561 | இத்தி றத்தவும் ஏனவும் எ•கவேற் கைத்த லத்துக் கடவுட்கு நல்கியே பத்தி மைத்திற னாற்பணிந் தேத்தினர் சித்தி சங்கற்பஞ் செய்திடுஞ் செய்கையோர். |
30 |
1562 | தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர் ஏவ ருங்குழீஇ யின்னணம் பூசனை யாவ தாற்ற வதுகொண் டமர்ந்தனன் மூவி ரண்டு முகனுடை மொய்ம்பினோன். |
31 |
1563 | அமரர் வெற்பில் அயிற்படை யேந்திய விமல னுற்றது சொற்றனம் மேலினிச் சமரி டைப்படு தாரகன் தந்திடு குமரன் உற்றது மற்றதுங் கூறுகேம். |
32 |
ஆகத் திருவிருத்தம் - 1563
----
1564 | எந்தை குமரன் எறிந்ததனி மேற்படையாற் தந்தி முகமுடைய தாரகன்றான் பட்டதனை முந்துசில தூதர் மொழிய அவன்தேவி அந்தமிலாக் கற்பிற் சவுரி அலக்கணுற்றான். |
1 |
1565 | வாழ்ந்த துணைவியர்கள் மற்றுள்ளோர் எல்லோருஞ் சூழ்ந்து பதைத்திரங்கத் துன்பத் துடனேகி ஆழ்ந்த கடல்படியும் அம்மென் மயிலென்ன வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள். |
2 |
1566 | சங்குற் றிடுசெங்கைத் தண்டுளவோன் தன்பதமாம் அங்குற் றனைஅன் றயன்பதஞ்செல் வாயன்று கங்கைச் சடையான் கயிலையிற்சென் றாயல்லால் எங்குற் றனைஅவ் விறைவன்அருள் பெற்றாயே. |
3 |
1567 | உந்துதனி யாழி உனக்கணியாத் தந்தோனும் இந்திரனும் ஏனை இமையவர்க ளெல்லோரும் அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்றன்றோ சிந்தைதனி லுள்ள கவலையெலாந் தீர்ந்தனரே. |
4 |
1568 | பொன்னகரோர் யாரும் புலம்புற் றிடஅவுணர் மன்னவரோ டென்பால் வரும்பவனி காணாதேன் துன்னு பறவையினஞ் சூழத் துயிலுமுனை இன்ன பரிசேயோ காண்பேனால் எம்பெருமான். |
5 |
1569 | புல்லா திருந்தனையான் புல்லுவது கண்டுமது பல்லோருங் காணிற் பழியென் றொழிந்தாயேல் மல்லாருந் தோளாய் மயக்குற்றேற் கோருரையுஞ் சொல்லாய் வறிதே துயின்றாய் துனியுண்டோ. |
6 |
1570 | மையோ டுறழும் மணிமிடற்றோன் தந்தவரம் மெய்யா மெனவே வியந்திருந்தேன் இந்நாளும் பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால் என்றுணைவா ஐயோ இதற்கோ அருந்தவமுன் செய்தாயே. |
7 |
1571 | தன்னோ டிணையின்றித் தானே தலையான முன்னோன் அருள்புரிந்த முன்னோன் இளவல்வரின் என்னொ அவனோ டெதிர்ந்தாய் இறந்தனையே அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே. |
8 |
1572 | சந்தார் தடம்புயத்துத் தானவர்கள் தற்சூழ அந்தார் கமழும் அரியணைமேல் வைகியநீ சிந்தா குலத்திற் செருநிலத்தில் துஞ்சினையால் எந்தாய் புகலாய் இதுவுஞ் சிலநாளோ. |
9 |
1573 | வென்றிமழு வேந்தும் விமலன் உனக்களித்த துன்றும் வரத்தியலை யுன்னினையாற் சூழ்ச்சியினை ஒன்று முணரா துயிருந் தொலைந்தனையே என்று தமியேன் இனியுன்னைக் காண்பதுவே. |
10 |
1574 | வன்னி விழியுடையான் மைந்தன் அமர்புரிய முன்னைவலி தோற்று முடிந்தா யெனக்கேட்டுப் பின்னுமிருந் தேனென்னிற் பேரன் புடையோர்யார் என்னினியான் செய்கேன் எனவே இரங்குற்றாள். |
11 |
1575 | மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச் சுற்றிப் புலம்பித் துயருற் றிடும்வேலை அற்றத் தனனாகி ஆசுரத்தின் பாற்போன கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினனால். |
12 |
1576 | தண்டா விறல்சேருந் தன்றாதை வீந்ததனைக் கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரங்குலைத்தான் அண்டாத சோகத் தழுங்கினான் வெய்யகனல் உண்டா னெனவீழ்ந் தயர்ந்தான் உணர்ந்தனனே. |
13 |
1577 | என்றுமுறா இன்ன லிடைப்பட் டவன்எழுந்து சென்றுதன தன்னை திருத்தா ளிடைவீழா உன்றலைவன் யாண்டையான் ஓதாய்அன் னேயென்று நின்று புலம்பி நினைந்தினைய செய்கின்றான். |
14 |
1578 | அன்னைமுத லோரை அகல்வித் தொருசாரில் துன்னுதிரென் றேவித தொலையாத தானவரில் தன்னுழையோர் தம்மால்தழல்இந் தனமுதலாம் மன்னு கருவி பலவும் வருவித்தான். |
15 |
1579 | வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற தந்தைதனை முன்போல் தகவுபெற வொப்பித்தோர் எந்திரத்தேர் மீதேற்றி ஈமத் திடையுய்த்துச் சந்தனப்பூம் பள்ளி மிசையே தருவித்தான். |
16 |
1580 | ஈமக் கடன்கள் இயற்றித்தன் றாதைதனைத் தாமக் கனலால் தகனம் புரிந்திடலுங் காமுற் றனனென் கணவனுடன் செல்வதற்குத் தீமுற் றருதி யெனஅன்னை சென்றுரைத்தாள். |
17 |
1581 | நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடுநடுங்கிப் பொற்றாள் பணிந்தென்னைப் போற்றி யிருத்தியெனச் சொற்றா னதுமறுத்துத் தோகை சுளித்துரைப்ப அற்றாக வென்றான் அசுரேந் திரன்என்பான். |
18 |
1582 | ஏனைதோர் தாயர்களும் யாமுங் கணவனுடன் வானகம்போய் எய்த வழங்கென் றிடவிசையா ஆன படியே அழலமைக்க அன்னையராம் மானனையார் எல்லோரும் வான்கனலி னுள்புக்கார். |
19 |
1583 | புக்கதொரு காலை புலம்பியே அந்நகரை அக்கணமே நீங்கி அசுரேந் திரனென்போன் தக்க கிளைஞர்சிலர் தற்சூழ வேயேகி மைக்கடலுள் வைகும் மகேந்திரமூ தூர்உற்றான். |
20 |
1584 | வேறு உளந்தளர் வெய்தித் தொல்லை ¤முகன் இழந்து மேனி தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த இளந்தனி மைந்தன் வல்லே யேகலும் அனைய நீர்மை வளந்திகழ் தொல்லை வீர மகேந்திரத் தவுணர் கண்டார். |
21 |
1585 | உரங்கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி யேங்கிக் கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து செல்லப் பெருங்கட லுடைந்த தேபோல் பேதுற வெய்தி யாற்ற இரங்கியிக் குமர னுற்ற தென்கொலென் றிசைக்க லுற்றார். |
22 |
1586 | வஞ்சமுங் கொலையுஞ் செய்யான் மற்றிவன் இதற்குத் தாதை வெஞ்சினங் கொடுபோ கென்று விடுத்தனன் போலும் என்பார் தஞ்சம தாகி யுள்ள தாரகன் கொடுமை நோக்கி அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ என்பார். |
23 |
1587 | சீரொடு துறக்கம் நீத்துத் தேவர்கோன் உருவ மாற்றிப் பாரிடை யுழந்தான் என்பார் மற்றவன் பரனை வேண்டிப் பேரிகல் மாயம் வன்மை பெற்றுவந் தடுபோர் செய்யத் தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான் என்பார். |
24 |
1588 | மாண்கிளர் தார கப்பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும் ஏண்கிளர் சமரில் வீந்தான் என்பதற் கேது வுண்டால் சேண்கிளர் நிவப்பா லெங்குந் தெரிகிர வுஞ்ச வெற்பில் காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார். |
25 |
1589 | பையர வணையில் துஞ்சும் பகவன தாழி தன்னை ஐயபொன் னணிய தாக அணிந்திடும் அவுண னோடு மொய்யமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர் சில்லோர் செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம் என்பார். |
26 |
1590 | அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி நங்கோன் தங்கைவந் தமரர் தம்மைச் சயந்தனைச் சிறைசெய் வித்தாள் இங்கிவன் தானுந் துன்புற் றேகுவான் இன்றும் அற்றே புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார். |
27 |
1591 | மணிகிளர் எழிலி வண்ணன் மற்றவ னொடுபோர் ஆற்றான் அணியுல களித்த செம்மல் அமர்த்தொழில் சிறிதுந் தேறான் தணிவறு செயிர்மீக் கொண்ட தாரக னொடுபோர் செய்யின் இணைகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார். |
28 |
1592 | இமையவர் கருடர் நாகர் இயக்கர்கந் தருவ ரேனோர் நமரிடு பணிகள் ஆற்றி நாடொறுந் திரிந்தார் அற்றால் சமரெதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள் காறும் அமரினி யுளது போலும் ஐயம தில்லை என்பார். |
29 |
1593 | சேயிவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசா லங்கண் ஆயதோர் தீங்கு போலும் ஐயமின் றிதனை நாடி நாயகன் விடுக்கு முன்னம் நம்பெருந் தானை யோடு மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார். |
30 |
1594 | எனைப்பல இனைய வாற்றா லியாவரும் அவுணர் ஈண்டி மனப்படு பைத லோடும் வயின்வயின் உரையா நிற்ப நினைப்பருந் திருமிக் குள்ள நெடுமகேந் திரத்திற் சென்று வனைப்பெருங் கழற்காற் சூர மன்னவன் கோயில் போந்தான். |
31 |
1595 | போந்துதா ரகன்றன் மைந்தன் பொள்ளெனப் படர்த லோடும் வாய்ந்தபே ரவைய மன்றில் வரம்பிலா அவுணர் போற்ற ஏந்தெழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்கண் வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவிவீற் றிருந்தான் மாதோ. |
32 |
1596 | வீற்றிருந் தரசு போற்றும் வேந்தனை யெய்தி யன்னான் காற்றுணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப் பற்றி ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர்கோர் அதுகண் டைய சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்ப லென்றான். |
33 |
1597 | என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால் ஈசன் வன்றிறற் குமரன் பூத வயப்படை தன்னொ டேகி உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்ச மென்னுங் குன்றொடும் வேலாற் செற்றுக் குறுகினன் புவியி லென்றான். |
34 |
1598 | வெய்யசூர் அதனைக் கேளா விழுமிதென் றுருமின் நக்குச் சையமாம் அவுண னோடு தாரக வலியோன் றன்னை மையுறழ் கண்டத் தண்ணல் மைந்தனோ அடுதல் செய்வான் பொய்யிது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான். |
35 |
1599 | தாதைகேள் கரதம் ஈது தாரகத் தந்தை தன்னை மேதகு கிரவுஞ் சத்தை வேல்கொடு பரமன் மைந்தன் காதினன் சென்றான் ஈமக் கடன்முறை எந்தைக் காற்றி மாதுயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான் மைந்தன். |
36 |
1600 | வேறு தோட்டுணைவ னாம்இளவல் துஞ்சினன் எனுஞ்சொல் கேட்டலும் உளத்திடை கிளர்ந்தது சினத்தீ நாட்டமெரி கால்வபுகை நண்ணுவன துண்டம் ஈட்டுபொறி சிந்துவன யாக்கையுள் உரோமம். |
37 |
1601 | நெறித்தபுரு வத்துணைகள் நெற்றிமிசை சென்ற கறித்தன எயிற்றினிரை கவ்விஅத ரத்தைச் செறித்தன துடித்தன தெழித்தஇதழ் செவ்வாய் குறித்தது மனங்ககன கூடமும் முடிக்க. |
38 |
1602 | அவ்வகை சினத்தெரி யெழுந்துமிசை கொள்ள அவ்வெரியின் ஆற்றலை யவித்ததது போழ்தில் வெவ்வினைகொள் தாரகன் மிசைத்தொடரும் அன்பால் தெவ்வர்புகழ் சூரனிடை சேர்ந்ததுயர் ஆழி. |
39 |
1603 | துப்புநிகர் கண்புனல் சொரிந்தநதி யேபோல் மெய்ப்புறம் வியர்த்தமுகம் வௌ¢ளமவை யீண்டி அப்புணரி யானதுய ராழியது வென்றே செப்புபொரு ளுண்மையது தேற்றியது போலும். |
40 |
1604 | பருவர லெனும்புணரி யூடுபடி வுற்றே அரியணை மிசைத்தவறி அம்புவியில் வீழா உருமென அரற்றினன் உணர்ந்ததனை யஞ்சி நரலையொடு பாரகம் நடுங்கியதை யன்றே. |
41 |
1605 | கூற்றுள நடுங்கிய குலைந்தது செழுந்தீக் காற்றுவெரு வுற்றது கதிர்க்கடவுள் சோமன் ஏற்றமிகு கோளுடு விரிந்தபுவி முற்றும் ஆற்றிய பணிக்கிறையும் அஞ்சிய தலைந்தே. |
42 |
1606 | பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார் ஆங்கனைய போழ்துதனில் அந்நகர மெல்லாம் ஓங்குதுயர் கொண்டுகலுழ் ஓசைமலிந் தன்றே. |
43 |
1607 | ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன் போனதொரு சீற்றவழல் புந்தியிடை மூள மானமொடு நாணமட வல்லையில் எழுந்தே தானுடைய ஏவலர் தமக்கிவை உரைப்பான். |
44 |
1608 | ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன் மன்னிளவல் ஆருயிரை மாற்றிவரு கந்தன் தன்னிகல் கடந்துசய மெய்திவரல் வேண்டும் என்னிரதம் வெம்படை இடுங்கவசம் யாவும் உன்னுகணம் ஒன்றின்முனம் உய்த்திடுதி ரென்றான். |
45 |
1609 | ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன் இறையிவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும் முறையிலவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார் அறைகழ லுடைத்தகுவர் அன்னசெயல் நாடிக் குறைவில்அனி கங்களொடு கொம்மென அணைந்தார். |
46 |
1610 | ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன் ஆயசெயல் காண்டலும் அமைச்சரில் அமோகன் மாயைதரு சூரனடி வந்தனை புரிந்தே ஏயதொரு மாற்றம திசைப்பல்அது கேண்மோ தீயசின மெய்திட லெனாஇனைய செப்பும். |
47 |
1611 | ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன் வேறு நஞ்சுறை படைகள் கற்று நவையுறா தொன்ன லாரை வஞ்சினத் தெறியும் வீரர் வளநகர் அதனை மாற்றோர் இஞ்சியைச் சூழ்ந்து போருக் கெய்தினும் எண்ணி யன்றி வெஞ்சினத் தினைமேல் கொண்டு விரைந்தமர் இயற்றச் செல்லார். |
48 |
1612 | குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக் கொணட சலத்தினை வினவிப் போர்செய் தானையை வினவி அன்னோர் வலத்தினை வினவி யல்லால் மற்றொன்று மனங்கொள் வாரோ. |
49 |
1613 | வரத்தினில் வலியி னாரோ மாயையில் வலியி னாரோ கரத்தினிற் படைக்க லத்தின் கல்வியில் வலியி னாரோ உரத்தினில் வலியி னாரோ உணர்ச்சிசேர் ஊக்க மான சிரத்தினில் வயியி னாரோ என்றிவை தேர்வ ரன்றே. |
50 |
1614 | ஒற்றைரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வ ரேனும் மற்றுமோ ரொற்றின் அல்லால் அன்னது மனத்துட் கொள்ளார் சுற்றுறும் அனிக மன்றி யொருபுடை துவன்றிச் சூழும் பெற்றியும் உளதோ என்னாவேயொரீஇத் தேர்வர் பின்னும். |
51 |
1615 | வினையது விளைவை யென்றும் மெல்லிய என்கை வெ•கார் அனிகமும் அனையர் தன்மை அதனையுஞ் சிறுமைத் தாக நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவ ராகின் மேலோர் முனையுறு புலத்தி லாற்றும் மும்மையும் முன்னிச் செய்வார். |
52 |
1616 | மூவியல் மரபி னாலும் முற்றுறா தொழிந்த காலைக் கோவியல் மரபுக் கேற்பக் கொடுஞ்சினந் திருகிக் கோட்புற் றேவியல் படைஞ ரோடும் படையொடும் எதிர்ந்து சுற்றி மேவலர் பான்மை யுன்னி வெற்றிகொண் டணைவர் அன்றே. |
53 |
1617 | நேர்ந்திட வலியி லோரும் ஞாட்பிடை நேர்தி ரென்னாச் சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச் சென்று சார்ந்திடல் பழிய தன்றோ வெல்லினுந் தானை தூண்டிப் பேர்ந்திடச் செய்வர் அ•தே பெறலரும் புகழ தன்றே. |
54 |
1618 | ஈதரோ உலகி லுள்ள இறைவர்தம் இயற்கை யாகும் ஆதலார் நின்னொப் பாரில் அழிவிலா அகில மாள்வாய் கூதமொன் றடையாய் வானோர் யாரையும் ஏவல் கொண்டாய் போதனும் நெடுமா லோனும் வைகலும் புகழ வுற்றாய். |
55 |
1618 | இன்னதோர் மிடல்பெற் றுள்ள இறைவநீ அளிய னாகும் பொன்னக ரவன்சொற் கேட்டுப் பூதமே படையா ஈசன் நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை வெல்ல உன்னினை போதி யென்னின் உனக்கது வசைய தன்றோ. |
56 |
1620 | மாற்றலர் வன்மை யோராய் மற்றவர் படைஞர் தங்கள் ஆற்றலை யுணராய் நின்றன் அரும்பெருந் தலைமை யுன்னாய் போற்றிடும் அமைச்ச ரோடும் புரிவன சூழாய் வாளா சீற்றமங் கதுமேல் கொண்டு செல்லலுந் திறலின் பாற்றோ. |
57 |
1621 | வீரமும் வலியும் மிக்கோ ராயினும் விதிவந் தெய்தில் பாரிடை வலியி லோரும் படுத்திடப் படுவர் நின்போல் பேருடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவா யெய்தத் தாரகன் மழலை தேறாச் சிறுவனுந் தடியப் பட்டான். |
58 |
1622 | கலகல மிழற்றுந் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத் தலையுடை இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால் வலியரும் ஒருகா லத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே. |
59 |
1623 | யாருநே ரன்றி வைகும் இறைவநீ சிறுவன் றன்மேற் போரினை முன்னி யேகல் புகழ்மைய தன்றால் அன்னான் சீரொடு மதுகை யாவுந் தேர்ந்துபின் னவனில் தீர்ந்த வீரரைப் படையொ டேவி வெற்றிகொண் டமர்தி யென்றான். |
60 |
1624 | அறிதரும் அமைச்சர் தம்முள் அமோகன்இத் தன்மை தேற்ற உறுதியீ தென்று சூரன் உள்ளுறு சினத்தை நீத்து விறல்கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச் செறிதரும் உழைஞர் தம்முட் சிலவரை நோக்கிச் சொல்வான். |
61 |
1625 | பகனொடு மயூரன் சேனன் பரிதியம் புள்ளின் பேரோன் சுகனிவர் முதலா வுள்ள தூதரைத் தருதி ரென்னப் புகழ்புனை சூர பன்மன் பொன்னடி இறைஞ்சி யேத்தித் தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார். |
62 |
1626 | சாரணர் இஇனயர் போந்து தாள்முறை பணிந்து நிற்பச் சூரனங் கவரை நோக்கித் துண்ணென நீவி ரேகிப் பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர் சேருறு தொகையும் யாவுந் தேர்ந்திவண் வருதி ரென்றான். |
63 |
1627 | ஒற்றுவர் உணர்ந்தந் நீர்மை உச்சிமேல் கொண்டு தங்கோன் பொற்றடங் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச் சென்றார் மற்றவர் போய பின்னர் மாறிலாச் சூர பன்மன் வெற்றிகொள் அவுணர் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். |
64 |
1628 | ஏதமில் சூர பன்மன் இளவல்தன் முடிவு நேடி மாதுயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம் ஆதியங் கடவுள் மைந்தன் அமரர்தங் கிரியை நீங்கிப் பூதல மீது வந்த நெறியினைப் புகல லுற்றாம். |
65 |
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|