காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில்.காரைக்காலம்மையார் சிறப்பு: தும்புரு என்ற தேவர் வீணை இசைப்பதில் வல்லவர். இவரது மகள்
சுமதி, சிவனை வேண்டி தவம் செய்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுமதி, துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம்கொண்ட அவர்,
அப்பெண்ணை மானிடப்பிறப்பு எடுக்கும்படி சபித்து விட்டார்.அவளே புனிதவதியாக பிறந்தாள். சிவன் "அம்மையே!' என்று அழைத்ததாலும்,
காரைக்காலில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படுகிறார். இவரே இக்கோயிலின் மூலவர்.புனிதவதியார் தன்
கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம்
செல்க'' என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம்
சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு ""தாயே சுகமாக வந்தனையா?'' என்றார். தன் நடனத்தை காட்டியருளினார்.புனிதவதியாருக்கு
அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.
காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில். தும்புரு என்ற தேவர் வீணை இசைப்பதில் வல்லவர். இவரது மகள் சுமதி, சிவனை வேண்டி தவம் செய்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுமதி, துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம்கொண்ட அவர், அப்பெண்ணை மானிடப்பிறப்பு எடுக்கும்படி சபித்து விட்டார். அவளே புனிதவதியாக பிறந்தாள். சிவன் "அம்மையே!' என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படுகிறார்.
இவரே இக்கோயிலின் மூலவர். புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம் செல்க'' என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு ""தாயே சுகமாக வந்தனையா?'' என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது. |