காவிரி நதி நீர் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அவமதிக்கவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, காவிரி நதி நீர் திறந்து விடாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது சரியல்ல. மழை பற்றாக்குறையால் கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது.குடிநீருக்கு கூட இங்கு பஞ்சம் நிலவுவதால், இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்கும் பேச்சுக்கே இடமில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் முடிவுகளை கர்நாடகம் பின்பற்றுகிறது. காவிரி நீர் பிரச்சினை தொடர்பான விவரங்களை நாங்கள் அந்த குழு முன் எடுத்து வைத்துள்ளோம். மேலும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை நாங்கள் முறையாக பின்பற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
|