காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சட்ட வல்லுனர்களுக்கு, 33 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகா அரசு நடத்தி வரும் வழக்குகளுக்காக தொழில் ரீதியாக அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அளித்த ஊதியம், பயணச் செலவு, தங்கும் செலவு உட்பட 2013 ஜூன் வரை, 32.91 கோடி ரூபாய் அரசு செலவழித்துள்ளதாக சட்டபேரவையில் சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு பதில் கூறும்போது பாட்டீல் தெரிவித்தார்.
|