LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

கருச்சிதைவு

 

டெலிபோன் மணி காதை அறுத்தது.
ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில்
மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதி, ‘இருக்கிறது’
என்று போட்டு முடித்தார்.
டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது.
மேஜையிலிருந்து எழுதின கடுதாசிகளைக் கம்போஸிங் ரூமுக்கு எடுத்துச் சென்று
கொண்டிருந்த வடிவேலு ஓடி வந்து, ரிஸீவரைக் காதில் எடுத்து வைத்துக் கொண்டு
“ஹல்லோ! யாரது?” என்ற சந்தேக வார்த்தைகளைக் கக்கினான்.
“இந்த மகத்தான திட்டம் பம்பாய் மாகாண வாசிகளுக்கு மட்டுமல்லாமல்…” என்று
எழுதியபடி மங்கிய டைப் கடுதாசிகளில் கண்ணைச் செருகிக்கொண்டிருந்த ஸ்ரீமான்
சுந்தரம்பிள்ளை அவர்களிடம், “டெலிபோன், ஸார்!” என்று கொண்டே ரிஸீவரைக்
கையில் கொடுத்தான்.
பிள்ளையவர்கள் சாவதானமாகப் பேனாவை மேஜை மேல் வைத்தார். சொருகு பலகைமேல்
சாய்த்து வைத்தெழுதிய அட்டையை மேஜை மேல் வைத்தார். ஒரு பக்கமாகச் சாய்ந்து
தமது ஜோல்னாப் பையைத் தேடிப் பிடித்து அதில் கைக்குட்டையைத் தேடி,
அங்கில்லாமல் ‘பேப்பர் வெய்ட்’ அடியிலிருந்த அதை எடுத்து நெற்றியைத்
துடைத்துக் கொண்டார். ஷர்ட் கைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு, “என்ன டெலிபோனா?”
என்று ரிஸீவரை வாங்கிக்கொண்டு, “யாரது? ஓஹோ நீங்களா? என்ன இரண்டு மூணு
நாளா இந்தப் பக்கத்திலேயே காணலியே… அப்படியா? என்ன, கதையா? அதுக்கென்ன?
இன்னிக்கு சாயங்காலமா? ரெடின்னு வச்சுக்குங்க!” என்று சொல்லிவிட்டு,
பம்பாய் மாகாண மின்சாரத் திட்டத்தில் ஈடுபட்டார்; மும்முரமாக ஈடுபட்டால்
டைப் கடுதாசிகள் எத்தனை நேரந்தான் மேஜைமேல் நிற்க முடியும்? நேராகக்
குப்பைக் கூடையில் ஐக்கியமாயின.
“வடிவேலு புரூப்!” என்று காய்தாப் பண்ணிவிட்டு, மேஜைக்குள் இருந்த
வெற்றிலைச் செல்லத்தை, – வர்ணம் போன மசாலா டின்னுக்கு, அவர் செல்லமாக
இட்டிருக்கும் பெயர் – எடுத்துச் சாவதானமாக வெற்றிலை போட ஆரம்பித்தார்.
அவருக்கு வெற்றிலை போடுவது வெறும் சம்பிரதாயமல்ல – மகாயக்ஞம்.
யந்திரம் எழுதி இந்த இந்தத் திக்கில் இன்னின்ன தேவதைகளை நிறுத்திவைக்க
வேண்டும் என்றிருப்பது போல, அவருடைய செல்லத்தில் இன்னின்ன சரக்குகள்
இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி; ஆனால், இருக்கும் என்று
எதிர்பார்ப்பது தவறு. எப்பொழுதும் எல்லாம் இருக்காது என்பதைப் பொது
விதியாகக் கொள்ளுவதால் ஸ்ரீசுந்தரம் பிள்ளை தம்மைத் தவறாக
அர்த்தப்படுத்திக் கொண்டதாகக் கருதமாட்டார். தென்புலத்தில், அதாவது யமன்
திசையில் சுண்ணாம்பு மட்டிலும் எப்பொழுதும் இருக்கும் – காறைக்
கட்டியாகவாவது, அதைச் சூரணமாகவோ அல்லது அவகாசமிருந்தால் மத்தித்து அதன்
பூர்வாசிரமத்திற்கு அதைக் கொண்டு வந்தோ, வைத்துக்கொண்ட பின், வெற்றிலையை
ஒவ்வொன்றாக எடுத்து, காம்புகளைக் கீறிவிட்டுச் சுண்ணாம்பைத் தடவுவார்.
பிறகு அதில் சீவல் பாக்கோ அல்லது அது இருந்த இடத்தில் கிடக்கும் தூசு
தும்பட்டமோ, அதைச் சுமை ஏற்றிப் பொட்டலமாக மடித்து ஒரே கவளமாகப் போட்டுக்
கொள்ளுவார்.
பிறகு, புகையிலை தேடு படலம். சாதாரணமாக, அது அருகில் இருக்கும் நண்பருடைய
பிரதேசத்தில் ஆக்ரமிப்பாகவே இருக்கும். வாய்மொழியாக ‘புகையிலை யிருக்கிறதா?’
என்று மரியாதைக்கு எச்சரித்துவிட்டு, பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்து
மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பின், புகையிலை கற்றியிருந்த
கடுதாசியை மட்டும் எறிந்துவிட்டு, மீதியை ஒரு தடவைக்கு உபயோகித்துவிடுவார்.
இது அவர் பொதுவாக அனுஷ்டிக்கும் விதி.
அன்று அவர் தமது சகபாடியின் மேஜைக்கு அருகில் சென்ற பொழுது அவரும் அதே
விருத்தியில் ஈடுபட்டிருந்தார்.
“என்னப்பா வந்துட்டியா, எங்கிட்ட ஒரு தரத்துக்குத்தான் இருக்கும்!” என்று
அங்கலாய்த்தார் அவருடைய நண்பர். புகையிலையை வாயில் ஒதுக்கிக் கொள்ளும் வரை
பிள்ளை அதைக் கேட்கவில்லை.
“என்ன, இல்லையா? நான் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுகிறேன்!” என்று
சொல்லிக்கொண்டே தம் மேஜைக்கு வந்தவர் ஒரு புஸ்தகத்திற்குள் ஐக்கியமானார்.
“ஸார், கொஞ்சம் புரூப் பார்த்துக் கொடுங்கோ! பேஜ் போடணுமாம்!” என்று
குழைந்தான் வடிவேலு. அவனுடைய குழைவுக்கு மரியாதை என்று அர்த்தம்.
“புரூப் எங்கே? கொண்டு வந்தால் தானே!” என்று புஸ்தகத்தின் மீதுள்ள
கவர்ச்சியால் சீறினார் பிள்ளை.
“அப்பவே கொண்டுவந்து வச்சுட்டேன்” என்று சொல்லிக் கொண்டே எடுத்துக் கையில்
கொடுத்தான் வடிவேலு.
பிள்ளைவாள் அவசரத்தில் ‘காலி’ ‘காலி’ யாகத் தாவி, மெய்யெழுத்துக்களையும்
ஒற்றுக்களையும் கார்வார் செய்து, கையெழுத்திட்டு வடிவேலு கையில்
ஒப்படைத்துவிட்டு, மறுபடியும் புஸ்தகத்தில் சரணாகதியடைந்தார்.
மணியும் மூன்றாயிற்று. மறுபடியும், டெலிபோன் மணியடித்தது.
“ஹல்லோ! யாரது?… நீங்கள் தானா? இன்னும் ஒரு மணி நேரத்தில் பையனை
அனுப்புங்கோ எத்தனி பக்கம்? நாலு பக்கமா? வரும் வரும்… லெடவுட்
பண்ணிடுங்கோ… அப்படின்னா நானே கையிலே எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்;
பையன் புறப்பட்டு விட்டானா? அப்படின்னா இங்கேயே இருக்கேன்” என்று சொல்லி
விட்டுப் பேனாவையும் கடுதாசியையும் எடுத்தார்.
பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு வெள்ளைக் கடுதாசியைப் பார்த்தபடியே
பேனாவை எழுதும் பாவனையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.
சரிப்படவில்லை. மேஜையின் மீது அட்டையையும், பேனாவையும் வைத்துவிட்டுக்
கைகளைச் சுடக்கு விட்டார். பிறகு சாவதானமாகக் கொட்டாவி விட்டார்.
மேஜையிலிருந்த பேனாவும் அட்டையும் கையிலேறிவிட்டு, மறுபடியும் புறப்பட்ட
இடத்திற்கே போய்ச் சேர்ந்தன.
மேஜையின் சொருகை உருவித் திறந்து நிதானமாக வெற்றிலை மடித்துப் போட்டுக்
கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
புகையிலைக் கட்டத்திற்கு வரும்பொழுது சுறுசுறுப்புத் தட்டியது.
மேஜையிலிருந்த எழுத்துச் சாதனங்கள் கையிலிறங்கின.
“ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தான்…” என்று எழுதி விட்டுப் பேனாவை
மூடி மேஜை மீது வைத்து விட்டார்.
சிறிது நேரம் பேந்தப் பேந்தச் சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக்
கொண்டிருந்தார்.
அப்புறம் சில நிமிஷங்கள் கழித்து… “அவன் ஒரு கதைப் பைத்தியம். சண்டைக்கு
வந்த எதிராளி ராஜாவிடம், “உனக்குக் கதை சொல்லத் தெரியுமா?” என்று ஒரு
தூதுக் கோஷ்டியை அனுப்பிக் கேட்டு விட்டானாம்…”
சுந்தரம் பிள்ளை, மேஜையில் பேனா முதலிய சில்லறைத் தொந்தரவுகளை
வைத்துவிட்டு வெளியே வராந்தாவிற்குச் சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு
வாயைக் கொப்பளித்தார். ஒரு டம்ளர் ஜலம் குடித்து விட்டு வந்து உட்கார்ந்து
கொண்டு மறுபடியும் பேனாவை எடுத்தார்.
“… அவனுடைய மந்திரிக்குக் கதை என்றாலே பிடிக்காது. கதை கேட்பதால்
தன்னுடைய ராஜ்யத்தின் மீதிருந்த ஆதிபத்திய உரிமையை இழந்து வெறும்
சிற்றரசனாகப் போன ராஜாவுக்குப் புத்தி சொல்லிக் கொடுக்க ஒரு யோசனை
செய்தான் மந்திரி.
“சர்க்கார் சம்பிரதாயப்படி அதற்கு ஒரு திட்டம் வகுக்க ஒரு விசேஷக் கமிட்டி
ஏற்படுத்துவது என்று முடிவு கட்டப்பட்டது…”
மறுபடியும் பேனாவை மூடி வைத்துவிட்டு, மோட்டு வளையைப் பார்த்து
யோசனையிலாழ்ந்தார் ஸ்ரீ பிள்ளை.
“… இந்த விசேஷக் கமிட்டிக்கு பிரிட்டனிலிருந்து சட்ட அனுபவம் வாய்ந்த
ஒரு நிபுணரையும், கதாசாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒரு
பிரபலஸ்தரையும், பிரிட்டிஷ் ராயல் வைத்திய சங்கத்தைச் சேர்ந்த ஒரு
வைத்திய நிபுணரையும் தருவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.”
“இந்த விசேஷச் செலவுக்கு சமஸ்தான கஜானாவில் போதுமான பணம் இல்லாததினால்,
ஒரு புதிய வரி போடுவதா, அல்லது ஒரு கடன் பத்திரம் பிரசுரிப்பதா என்பது
பற்றி ஆலோசிக்கப்பட்டது.”
“அதற்குள் இந்தச் சமாசாரம் பெரிய ராஜாவுக்குத் தெரிந்துவிட, இவ்வித
முயற்சிகள் செய்யச் சிற்றரசருக்கு சன்னதின் ஷரத்தின்படி உரிமை கிடையாது
என்று ஓலை அனுப்பினான்.”
“நாலுவிதமாகவும் யோசித்துவிட்டு இந்த யோசனைகளை அப்படியே
ஒதுக்கிவிடுவதுதான் நன்மை என்று மந்திரி நினைக்கலானான்.”
“மந்திரியின் நினைப்பு காரியாம்சத்திற்கு வருமுன் ராஜாவுக்கு சஷ்டி
அப்தபூர்த்தி விழா வந்து விட்டது. பெரிய ராஜா இந்தச் சிற்றரசனுக்கு வெகு
மதியாக ஒரு பெரிய கதைப் புஸ்தகத்தை அனுப்பினான். அது ஒரு லக்ஷத்திச்
செல்வானம் பக்கங்கள் கொண்டது.”
“புஸ்தகத்தைக் கண்டதும் அதைப் பூராவும் படித்து முடிப்பதற்குத் தமக்கு
ஆயுசு இருக்குமோ என்று நினைத்து, சிற்றரசன் சிம்மாசனத்திலிருந்து கொண்டே
கண்ணீர் விட்டான்.”
“மந்திரி பிரதானிகளும் பிரஜைகளும் ராஜாவைத் தனியாக அழவிட்டுவிடுவதா என்று
நினைத்து அனுதாபம் காட்டி கூட அழுதார்கள்.”
“இந்தச் சமயத்தில் பிரதம மந்திரிக்கு அழுகை வரவில்லை. நெடுமரம்போல
நின்றான்…”
“நெடுமரம் போல நி……” என்று மறுபடியும் அடித்துவிட்டு எழுதினார்
சுந்தரம்பிள்ளை.
கதை தானாகவே, தன்னிஷ்டம் போலவே, பின்னிக் கொண்டு போவதைக் கண்டு பயந்து
போன சுந்தரம் பிள்ளை, இந்த நெடுமரம் என்ற மதில் சுவர் வந்ததும்
நிம்மதியுடன் பெருமூச்செறிந்தார்.
கதை வண்டியைத் தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாத
பிரதம மந்திரியைச் சிரச்சேதம் செய்தார். அந்த வேலை முடிந்தபின் கதைக்கு
உயிர் சந்தேகமின்றி அகன்று விட்டது என்பதை நாடி பிடித்துப் பார்த்தவர்
போல நிச்சயப்படுத்திக் கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா,
அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜா மகளைக் கட்டிக்
கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் ‘மங்களமாக’ முடித்துவிடலாமா என்று
யோசித்துக் கொண்டிருக்கையில், “என்ன ஸார், முடிந்து விட்டதா?” என்று
கொண்டே நுழைந்தார் சுந்தரம் பிள்ளையிடம் கதை கேட்ட ஆசிரியர்.
“பையனை அனுப்புகிறேன் என்றீர்களே” என்று சொல்லி எழுந்தார் ஸ்ரீ பிள்ளை.
“பையனிடம் கடுதாசி அனுப்பிவிட்டால் என்றுதான்…” என்று சிந்தித்துக்
கொண்டே மேஜையிலிருந்த கடுதாசிகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் ஆசிரிய
நண்பர்.
“இதுதானா நாலு பக்கம்? – போஸ்டர் எழுத்தில் போட்டாக் கூட நாலு பக்கம்
வருமோ என்னமோ? இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.
“நீர் தான் சொல்லுமே!”
“சரி வாருங்க, காபி சாப்பிட்டு வரலாம்!” என்றார் நண்பர்.
“வருவது எதற்கு, நேரா வீட்டுக்குப் போவோமே?” என்றார் சுந்தரம் பிள்ளை.
“அங்கே போனால் எழுதுவீரா?” என்றார் நண்பர்.
“போன பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்க எழுந்திருங்க!” என்று கொண்டு
மேஜையை எடுத்துப் பூட்ட ஆரம்பித்தார் பிள்ளை.
துண்டை எடுத்து உதறி மேலே போட்டுக் கொண்டு புறப்பட்டார் நண்பர்.
“கொஞ்சம் இருங்க, வெற்றிலை போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று உட்கார்ந்து
கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
வெற்றிலை போட்டு முடிந்தது.
“ஸார், ஒரு நிமிஷம்!” என்று சொல்லிக் கடைசி வரியை எழுதினார், பிள்ளை.
“தான் படித்த அத்தனை கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்த
மந்திரிக்குத் தண்டனை அளித்தான்” என்று எழுதி, “இப்படி முடித்து விடலாமா”
என்றார்.
“எப்படியாவது முடிந்தால் போதும்; என்னிடம் குப்பைக் கூடை இருக்கிறதை
மறந்துவிட்டீரா?” என்றார் நண்பர்.
“அது என்னிடமே இருக்கிறதே!” என்று சொன்னார் பிள்ளை.
ராஜாவும் மந்திரி பிரதானிகளும், இங்கிலீஷில் கசங்கும் மாகாண மின்சாரத்
திட்டத்துடன் கிடந்து நசுங்கினர்.

     டெலிபோன் மணி காதை அறுத்தது.ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில்மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதி, ‘இருக்கிறது’என்று போட்டு முடித்தார்.டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது.மேஜையிலிருந்து எழுதின கடுதாசிகளைக் கம்போஸிங் ரூமுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த வடிவேலு ஓடி வந்து, ரிஸீவரைக் காதில் எடுத்து வைத்துக் கொண்டு“ஹல்லோ! யாரது?” என்ற சந்தேக வார்த்தைகளைக் கக்கினான்.“இந்த மகத்தான திட்டம் பம்பாய் மாகாண வாசிகளுக்கு மட்டுமல்லாமல்…” என்றுஎழுதியபடி மங்கிய டைப் கடுதாசிகளில் கண்ணைச் செருகிக்கொண்டிருந்த ஸ்ரீமான்சுந்தரம்பிள்ளை அவர்களிடம், “டெலிபோன், ஸார்!” என்று கொண்டே ரிஸீவரைக்கையில் கொடுத்தான்.பிள்ளையவர்கள் சாவதானமாகப் பேனாவை மேஜை மேல் வைத்தார். சொருகு பலகைமேல்சாய்த்து வைத்தெழுதிய அட்டையை மேஜை மேல் வைத்தார்.

 

    ஒரு பக்கமாகச் சாய்ந்துதமது ஜோல்னாப் பையைத் தேடிப் பிடித்து அதில் கைக்குட்டையைத் தேடி,அங்கில்லாமல் ‘பேப்பர் வெய்ட்’ அடியிலிருந்த அதை எடுத்து நெற்றியைத்துடைத்துக் கொண்டார். ஷர்ட் கைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு, “என்ன டெலிபோனா?”என்று ரிஸீவரை வாங்கிக்கொண்டு, “யாரது? ஓஹோ நீங்களா? என்ன இரண்டு மூணுநாளா இந்தப் பக்கத்திலேயே காணலியே… அப்படியா? என்ன, கதையா? அதுக்கென்ன?இன்னிக்கு சாயங்காலமா? ரெடின்னு வச்சுக்குங்க!” என்று சொல்லிவிட்டு,பம்பாய் மாகாண மின்சாரத் திட்டத்தில் ஈடுபட்டார்; மும்முரமாக ஈடுபட்டால்டைப் கடுதாசிகள் எத்தனை நேரந்தான் மேஜைமேல் நிற்க முடியும்? நேராகக்குப்பைக் கூடையில் ஐக்கியமாயின.“வடிவேலு புரூப்!” என்று காய்தாப் பண்ணிவிட்டு, மேஜைக்குள் இருந்தவெற்றிலைச் செல்லத்தை, – வர்ணம் போன மசாலா டின்னுக்கு, அவர் செல்லமாகஇட்டிருக்கும் பெயர் – எடுத்துச் சாவதானமாக வெற்றிலை போட ஆரம்பித்தார்.அவருக்கு வெற்றிலை போடுவது வெறும் சம்பிரதாயமல்ல – மகாயக்ஞம்.யந்திரம் எழுதி இந்த இந்தத் திக்கில் இன்னின்ன தேவதைகளை நிறுத்திவைக்கவேண்டும் என்றிருப்பது போல, அவருடைய செல்லத்தில் இன்னின்ன சரக்குகள்இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி; ஆனால், இருக்கும் என்றுஎதிர்பார்ப்பது தவறு. எப்பொழுதும் எல்லாம் இருக்காது என்பதைப் பொதுவிதியாகக் கொள்ளுவதால் ஸ்ரீசுந்தரம் பிள்ளை தம்மைத் தவறாகஅர்த்தப்படுத்திக் கொண்டதாகக் கருதமாட்டார்

 

      தென்புலத்தில், அதாவது யமன்திசையில் சுண்ணாம்பு மட்டிலும் எப்பொழுதும் இருக்கும் – காறைக்கட்டியாகவாவது, அதைச் சூரணமாகவோ அல்லது அவகாசமிருந்தால் மத்தித்து அதன்பூர்வாசிரமத்திற்கு அதைக் கொண்டு வந்தோ, வைத்துக்கொண்ட பின், வெற்றிலையைஒவ்வொன்றாக எடுத்து, காம்புகளைக் கீறிவிட்டுச் சுண்ணாம்பைத் தடவுவார்.பிறகு அதில் சீவல் பாக்கோ அல்லது அது இருந்த இடத்தில் கிடக்கும் தூசுதும்பட்டமோ, அதைச் சுமை ஏற்றிப் பொட்டலமாக மடித்து ஒரே கவளமாகப் போட்டுக்கொள்ளுவார்.பிறகு, புகையிலை தேடு படலம். சாதாரணமாக, அது அருகில் இருக்கும் நண்பருடையபிரதேசத்தில் ஆக்ரமிப்பாகவே இருக்கும். வாய்மொழியாக ‘புகையிலை யிருக்கிறதா?’என்று மரியாதைக்கு எச்சரித்துவிட்டு, பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்துமறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பின், புகையிலை கற்றியிருந்தகடுதாசியை மட்டும் எறிந்துவிட்டு, மீதியை ஒரு தடவைக்கு உபயோகித்துவிடுவார்.இது அவர் பொதுவாக அனுஷ்டிக்கும் விதி.அன்று அவர் தமது சகபாடியின் மேஜைக்கு அருகில் சென்ற பொழுது அவரும் அதேவிருத்தியில் ஈடுபட்டிருந்தார்.

 

      “என்னப்பா வந்துட்டியா, எங்கிட்ட ஒரு தரத்துக்குத்தான் இருக்கும்!” என்றுஅங்கலாய்த்தார் அவருடைய நண்பர். புகையிலையை வாயில் ஒதுக்கிக் கொள்ளும் வரைபிள்ளை அதைக் கேட்கவில்லை.“என்ன, இல்லையா? நான் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுகிறேன்!” என்றுசொல்லிக்கொண்டே தம் மேஜைக்கு வந்தவர் ஒரு புஸ்தகத்திற்குள் ஐக்கியமானார்.“ஸார், கொஞ்சம் புரூப் பார்த்துக் கொடுங்கோ! பேஜ் போடணுமாம்!” என்றுகுழைந்தான் வடிவேலு. அவனுடைய குழைவுக்கு மரியாதை என்று அர்த்தம்.“புரூப் எங்கே? கொண்டு வந்தால் தானே!” என்று புஸ்தகத்தின் மீதுள்ளகவர்ச்சியால் சீறினார் பிள்ளை.“அப்பவே கொண்டுவந்து வச்சுட்டேன்” என்று சொல்லிக் கொண்டே எடுத்துக் கையில்கொடுத்தான் வடிவேலு.பிள்ளைவாள் அவசரத்தில் ‘காலி’ ‘காலி’ யாகத் தாவி, மெய்யெழுத்துக்களையும்ஒற்றுக்களையும் கார்வார் செய்து, கையெழுத்திட்டு வடிவேலு கையில்ஒப்படைத்துவிட்டு, மறுபடியும் புஸ்தகத்தில் சரணாகதியடைந்தார்.மணியும் மூன்றாயிற்று. மறுபடியும், டெலிபோன் மணியடித்தது.“ஹல்லோ! யாரது?… நீங்கள் தானா? இன்னும் ஒரு மணி நேரத்தில் பையனைஅனுப்புங்கோ எத்தனி பக்கம்? நாலு பக்கமா? வரும் வரும்… லெடவுட்பண்ணிடுங்கோ… அப்படின்னா நானே கையிலே எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்;பையன் புறப்பட்டு விட்டானா? அப்படின்னா இங்கேயே இருக்கேன்” என்று சொல்லிவிட்டுப் பேனாவையும் கடுதாசியையும் எடுத்தார்.

 

      பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு வெள்ளைக் கடுதாசியைப் பார்த்தபடியேபேனாவை எழுதும் பாவனையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.சரிப்படவில்லை. மேஜையின் மீது அட்டையையும், பேனாவையும் வைத்துவிட்டுக்கைகளைச் சுடக்கு விட்டார். பிறகு சாவதானமாகக் கொட்டாவி விட்டார்.மேஜையிலிருந்த பேனாவும் அட்டையும் கையிலேறிவிட்டு, மறுபடியும் புறப்பட்டஇடத்திற்கே போய்ச் சேர்ந்தன.மேஜையின் சொருகை உருவித் திறந்து நிதானமாக வெற்றிலை மடித்துப் போட்டுக்கொண்டார் ஸ்ரீ பிள்ளை.புகையிலைக் கட்டத்திற்கு வரும்பொழுது சுறுசுறுப்புத் தட்டியது.மேஜையிலிருந்த எழுத்துச் சாதனங்கள் கையிலிறங்கின.

 

     “ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தான்…” என்று எழுதி விட்டுப் பேனாவைமூடி மேஜை மீது வைத்து விட்டார்.சிறிது நேரம் பேந்தப் பேந்தச் சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தார்.அப்புறம் சில நிமிஷங்கள் கழித்து… “அவன் ஒரு கதைப் பைத்தியம். சண்டைக்குவந்த எதிராளி ராஜாவிடம், “உனக்குக் கதை சொல்லத் தெரியுமா?” என்று ஒருதூதுக் கோஷ்டியை அனுப்பிக் கேட்டு விட்டானாம்…”சுந்தரம் பிள்ளை, மேஜையில் பேனா முதலிய சில்லறைத் தொந்தரவுகளைவைத்துவிட்டு வெளியே வராந்தாவிற்குச் சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டுவாயைக் கொப்பளித்தார். ஒரு டம்ளர் ஜலம் குடித்து விட்டு வந்து உட்கார்ந்துகொண்டு மறுபடியும் பேனாவை எடுத்தார்.“… அவனுடைய மந்திரிக்குக் கதை என்றாலே பிடிக்காது. கதை கேட்பதால்தன்னுடைய ராஜ்யத்தின் மீதிருந்த ஆதிபத்திய உரிமையை இழந்து வெறும்சிற்றரசனாகப் போன ராஜாவுக்குப் புத்தி சொல்லிக் கொடுக்க ஒரு யோசனைசெய்தான் மந்திரி.

 

       “சர்க்கார் சம்பிரதாயப்படி அதற்கு ஒரு திட்டம் வகுக்க ஒரு விசேஷக் கமிட்டிஏற்படுத்துவது என்று முடிவு கட்டப்பட்டது…”மறுபடியும் பேனாவை மூடி வைத்துவிட்டு, மோட்டு வளையைப் பார்த்துயோசனையிலாழ்ந்தார் ஸ்ரீ பிள்ளை.


     “… இந்த விசேஷக் கமிட்டிக்கு பிரிட்டனிலிருந்து சட்ட அனுபவம் வாய்ந்தஒரு நிபுணரையும், கதாசாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒருபிரபலஸ்தரையும், பிரிட்டிஷ் ராயல் வைத்திய சங்கத்தைச் சேர்ந்த ஒருவைத்திய நிபுணரையும் தருவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.”“இந்த விசேஷச் செலவுக்கு சமஸ்தான கஜானாவில் போதுமான பணம் இல்லாததினால்,ஒரு புதிய வரி போடுவதா, அல்லது ஒரு கடன் பத்திரம் பிரசுரிப்பதா என்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.”“அதற்குள் இந்தச் சமாசாரம் பெரிய ராஜாவுக்குத் தெரிந்துவிட, இவ்விதமுயற்சிகள் செய்யச் சிற்றரசருக்கு சன்னதின் ஷரத்தின்படி உரிமை கிடையாதுஎன்று ஓலை அனுப்பினான்.”“நாலுவிதமாகவும் யோசித்துவிட்டு இந்த யோசனைகளை அப்படியேஒதுக்கிவிடுவதுதான் நன்மை என்று மந்திரி நினைக்கலானான்.”

 

       “மந்திரியின் நினைப்பு காரியாம்சத்திற்கு வருமுன் ராஜாவுக்கு சஷ்டிஅப்தபூர்த்தி விழா வந்து விட்டது. பெரிய ராஜா இந்தச் சிற்றரசனுக்கு வெகுமதியாக ஒரு பெரிய கதைப் புஸ்தகத்தை அனுப்பினான். அது ஒரு லக்ஷத்திச்செல்வானம் பக்கங்கள் கொண்டது.”“புஸ்தகத்தைக் கண்டதும் அதைப் பூராவும் படித்து முடிப்பதற்குத் தமக்குஆயுசு இருக்குமோ என்று நினைத்து, சிற்றரசன் சிம்மாசனத்திலிருந்து கொண்டேகண்ணீர் விட்டான்.”“மந்திரி பிரதானிகளும் பிரஜைகளும் ராஜாவைத் தனியாக அழவிட்டுவிடுவதா என்றுநினைத்து அனுதாபம் காட்டி கூட அழுதார்கள்.”“இந்தச் சமயத்தில் பிரதம மந்திரிக்கு அழுகை வரவில்லை. நெடுமரம்போலநின்றான்…”“நெடுமரம் போல நி……” என்று மறுபடியும் அடித்துவிட்டு எழுதினார்சுந்தரம்பிள்ளை.கதை தானாகவே, தன்னிஷ்டம் போலவே, பின்னிக் கொண்டு போவதைக் கண்டு பயந்துபோன சுந்தரம் பிள்ளை, இந்த நெடுமரம் என்ற மதில் சுவர் வந்ததும்நிம்மதியுடன் பெருமூச்செறிந்தார்.கதை வண்டியைத் தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாதபிரதம மந்திரியைச் சிரச்சேதம் செய்தார். அந்த வேலை முடிந்தபின் கதைக்குஉயிர் சந்தேகமின்றி அகன்று விட்டது என்பதை நாடி பிடித்துப் பார்த்தவர்போல நிச்சயப்படுத்திக் கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா,அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜா மகளைக் கட்டிக்கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் ‘மங்களமாக’ முடித்துவிடலாமா என்றுயோசித்துக் கொண்டிருக்கையில், “என்ன ஸார், முடிந்து விட்டதா?” என்றுகொண்டே நுழைந்தார் சுந்தரம் பிள்ளையிடம் கதை கேட்ட ஆசிரியர்.

 

       “பையனை அனுப்புகிறேன் என்றீர்களே” என்று சொல்லி எழுந்தார் ஸ்ரீ பிள்ளை.“பையனிடம் கடுதாசி அனுப்பிவிட்டால் என்றுதான்…” என்று சிந்தித்துக்கொண்டே மேஜையிலிருந்த கடுதாசிகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் ஆசிரியநண்பர்.“இதுதானா நாலு பக்கம்? – போஸ்டர் எழுத்தில் போட்டாக் கூட நாலு பக்கம்வருமோ என்னமோ? இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.“நீர் தான் சொல்லுமே!”“சரி வாருங்க, காபி சாப்பிட்டு வரலாம்!” என்றார் நண்பர்.“வருவது எதற்கு, நேரா வீட்டுக்குப் போவோமே?” என்றார் சுந்தரம் பிள்ளை.“அங்கே போனால் எழுதுவீரா?” என்றார் நண்பர்.“போன பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்க எழுந்திருங்க!” என்று கொண்டுமேஜையை எடுத்துப் பூட்ட ஆரம்பித்தார் பிள்ளை.துண்டை எடுத்து உதறி மேலே போட்டுக் கொண்டு புறப்பட்டார் நண்பர்.

 

     “கொஞ்சம் இருங்க, வெற்றிலை போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று உட்கார்ந்துகொண்டார் ஸ்ரீ பிள்ளை.வெற்றிலை போட்டு முடிந்தது.“ஸார், ஒரு நிமிஷம்!” என்று சொல்லிக் கடைசி வரியை எழுதினார், பிள்ளை.“தான் படித்த அத்தனை கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்தமந்திரிக்குத் தண்டனை அளித்தான்” என்று எழுதி, “இப்படி முடித்து விடலாமா”என்றார்.“எப்படியாவது முடிந்தால் போதும்; என்னிடம் குப்பைக் கூடை இருக்கிறதைமறந்துவிட்டீரா?” என்றார் நண்பர்.“அது என்னிடமே இருக்கிறதே!” என்று சொன்னார் பிள்ளை.ராஜாவும் மந்திரி பிரதானிகளும், இங்கிலீஷில் கசங்கும் மாகாண மின்சாரத்திட்டத்துடன் கிடந்து நசுங்கினர்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.