LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

கருமைய ஞானம்

தெய்வ நிலையை அறிவதை இறையுணர்வு என்றும் ,பிரம்ம ஞானம் என்றும் கூறுகிறோம்.இந்த உயர் நிலையைப் போன்று பெருமதிப்புடைய ஞானம் தான் கருமைய ஞானமாகும்.

 

காந்த நிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ

கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ,

மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்

மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!

காந்தஆற்றல் உட்பொருள்,கருமையத் துட்பொருள்,

கடவுளெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்,

கடைநிலையில் மனமுமாய்க் கலந்துளதுவெளியோடு...

 

எனவே கருமையத்தை அறியவேண்டுமென்றால் காந்தமென்ற பேராற்றலைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

 

எல்லாம் வல்ல இறையாற்றல் தன்னிறுக்க ஆற்றலால் துகள்களாகி ,அதே இறை நிலையின் சூழ்ந்தழுத்ததினால் விரைவான தற்சுழல் பெற்று(Spinning Action) ,அலை நிலையாகி,காந்தமென்ற பேராற்றலாகத் தன்மாறமடைந்தது.இதனால் காந்தமென்பது,இறை நிலையே இயக்கச் சிறப்பு பெற்ற மதிப்புமிக்க ஆற்றலாகும்.இக்காந்த ஆற்றல் அலை நிலை பெற்றுள்ளதால் அது எங்கும்,எதிலும் நிறைந்த தெய்வீகப் பாய்மப் பொருளாகும்.

 

இந்த மதிப்புடைய பேராற்றல் இறைத்துகள் முதலாக அதன் அணுக்களின் கூட்டு இயக்கமான பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திலும் ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.எந்த சடப்பொருளோ,சீவ இனமோ உருவத்தில் தனித்தனியாகத் தோற்றமளித்தாலும் அவற்றிற்குள் ஊடுருவி இயங்குகின்ற காந்த ஆற்றலானது ஒரே தத்துவமாக அலைகுள்ளாக கடல் நீர் போன்று நிறைந்து அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இக்காந்த நிலையை,அதன் பெருமையை உணர்ந்து கொள்கின்ற போது ,அதன் தன்மாற்ற மூலமான கடவுள் நிலையையும் உணர்ந்து கொள்கிறோம்.

இதே காந்த ஆற்றல் பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்திருக்கின்றது.எல்லா உயிரினங்களுக்குள்ளாகவும் ஊன் காந்தம் அல்லது சீவகாந்தம் என்று மதிக்கக்கூடிய பேராற்றலாக விளங்குகிறது.

 

காந்த ஆற்றல் எங்கிருந்தாலும் அது தற்சுழற்சி நிலையிலேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி விரைவான் காந்த அலை ஒரு சீவனின் உடலில் இயங்குகின்ற போது அந்த உடலுக்குள் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.எந்தப் பொருள் சுழற்சி பெற்று இயங்கினாலும் அதற்கு துல்லிய சமதளச் சீர்மை என்னும் Specific Gracity தன்மை இயல்பாக அமைந்துவிடுகிறது.இதனால் உடல் முழுவதும் விரைவாகச் சுழன்று இயங்கிக் கொண்டிருக்கும் காந்த அலையானது,அதன் மையப் பகுதியில் திணிவு பெற்றுச் அந்தச் சீவனின் உடல் மையத்தில் இயடம் கொண்டு இயங்குகிறது.

 

இந்த காந்த அலையின் திணிவு மையம் தான் மூலாதாரம் என்னும் கருமைய நிலையமாகும் . இத்தகைய மதிப்புமிக்க கருமையமானது முதன்முதலில் சிற்றுயிர்களில் அமைந்து அதே உயிரினம் பரிணமாச் சிறப்பால் உடலளவில் பல சீவ இனங்களாக மாறி வந்து ,முடிவில் மனிதன் வரையில் இடம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.