கருப்பாயி என்ற பெண் வேடக் கலைஞர் நிகழ்த்தும் கலை கருப்பாயி ஆட்டம். இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், இடைநிகழ்ச்சியாகத் தனி ஆட்டமாகவும் நிகழ்கிறது. இது பெரும்பாலும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் நிகழ்கிறது. கருப்பாயி வேடத்தை ஆண் கலைஞரே புனைகின்றார். பார்த்தவுடன் நகைச்சுவை தோன்றும்படி கருப்பாயிக் கலைஞர் ஒப்பனை செய்திருப்பார். இவ்வாட்டத்தின் உரையாடல் நாடகப்பாணியிலேயே இருக்கும். இவ்வேடமணிந்தவருடன் கரகாட்டப்பெண்களும், குறவன் குறத்தி வேடக்காரர்களும், நையாண்டி மேளக்காரர்களும் கலந்து கொள்வர்.
|