|
||||||||
கருப்பாயி கூத்து |
||||||||
இக்கலை கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. மதுரைப் பகுதியில் மூக்காயி கூத்து என வழங்கப்படுகிறது. இக்கலையானது மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இக்கலை நிகழ்ச்சியை ஆண், பெண் ஆகிய இருவர் நடத்துவர். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பர். பெண்ணான கருப்பாயி கணவர் தனக்குச் செய்த கொடுமையைக் குறித்து பார்வையாளர்களிடம் கூறுவதும், அதற்கு நையாண்டி மேளக்காரர்கள் கூடியிருக்கும் பார்வையாளர்களிடம் பஞ்சாயத்து பேசுவது போன்றும் நடத்தப்படும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: கருப்பாயி கூத்து கருப்பாயி Karuppayi Karuppayi Koothu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|