கரூர் மாவட்ட சிறுமிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வீரதீரச் செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் மாநில விருதாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு இந்த விருது கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ராமேஸ்வரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர். ரக்ஷனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவர் கரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட நன்கொடை வழங்கி உள்ளார். இது தவிர, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண் தானம் செய்ய ஊக்கவித்தது, முதலுதவி சிகிச்சை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்சும் புதிய முறை அறிமுகம் செய்தல் உட்பட பல்வேறு சமூக பணிகளை செய்து உள்ளார். இதற்காக இந்த சிறுமிக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
|