LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

கருத்து ஒன்றுபடுவோம்

கூடித் தொழிற்படுவோம்
வாருங்கள்
மீண்டாலும் வெற்றியுடன் மீள்வோம்
வீழ்ந்தாலும் வீரமுடன் வீழ்வோம்!

கூறுபட்டுச் சமுதாயம்
நு¡று குழுத் தோன்றி
மாறுபடச் சிந்தித்தால்
வீழ்ச்சிதான்.

பாட்டம் பாட்டமாய்
மழைகொட்டப் போவதனை
மூடிக்கிடக்கும்
முகிற்கூட்டம் காட்டுகுது
எமக்கு,
ஓலைக்குடிசை என்றாலும்
ஒதுங்கி இருக்க
இடம் வேண்டும்
வாருங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கைகோர்த்து நிற்போம்
பாதுகாப்பு ஏற்பாடு
பலப்படுத்திக் கொள்வோம்.

பூரசம் குளம்,
கொடிய ரத்தக்களம் ஆனகதை
நவரசத்தில் ஒன்றாக
நின்றுவிடக் கூடாது.
அந்தக் கொலைகாரன் கோரமாய் நின்றான்
அவனது தாடியும் மீசையும் சிங்கத்தின் சாயலைக் காட்டின
அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின
அவனது எந்திரத் துப்பாக்கி
படம் எடுத்து ஆடியது!

காலைப் பிடித்துக்
கதறி அழுதவரும்
தலைசிதறிச் செத்தார்கள்
உடைமைகளை வை என்றான்
வைத்தார்கள்
வா¢சையில் நில் என்றான்
நின்றார்கள்
இரத்தப் பெருக்கில்
ஒவ்வொன்றாய்ச் சாய்ந்துவிழச்
சன்னம் முடியுமட்டும் சன்னதம் ஆடிநின்றான்.

மடக்கி அவனை மண்கவ்வ
வைப்பதற்கு
துணிந்தெழுந்த இளைஞனும்
துணை கிடைக்காததினால்
தணிந்துவிட்டான் என்ற
விவகாரம் எல்லாம்
வெற்றிலை வாயைச்
சிவப்பாகிச் சுவையூட்டும்
சுண்ணாம்பாய் முடியாது
திட்டமிட்ட வாழ்வுக்குத்
தூண்டுதலாய் அமையட்டும்.

வாருங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கைகோர்த்து நிற்போம்
பாதுகாப்பு ஏற்பாடு
பலப்படுத்திக் கொள்வோம்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.