|
||||||||||||||||||
கருவாட்டு குழம்பு - நெத்திலி மீன் (karuvadu sauce anchovy fish) |
||||||||||||||||||
தேவையானவை :
நெத்திலி கருவாடு - 15 சின்ன வெங்காயம் - 3/4 கப் தக்காளி - 1 என்னம் (பொடித்தது) புளி - சிறிதளவு (கரைத்தது) சாமபார் பொடி - 1 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெந்தயப்பொடி - 3/4 டீஸ்பூன்
செய்முறை :
1.தலையை பிய்த்துவிட்டு தண்ணீரில் ஊற வைத்த கருவாடுடன் உப்பு சேர்த்து மண் போகும் வரை நன்கு கழுவவும்.வாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி போட்டு அதனுடன் கருவாடையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சாம்பார் பொடி போட்டு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 2. ஒரு கொதி கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றி 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி கொதித்து எண்ணைய் மேலே மிதந்து வரும் வரையும் கருவாடு வெந்து வரும் வரையும் கொதிக்கவிட்டு இறக்கவும். |
||||||||||||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|