பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஜம்மு காஷ்மீரில் இன்று சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் நேற்று ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 19 வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புதான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாள்களில் நடந்துள்ள இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங்கின் காஷ்மீர் பயணத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|