LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: பா.ஜ.க. அபார வெற்றி!

ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தெற்கு காஷ்மீரில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தத் தேர்தலை, முக்கியக் கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான நகர உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. 

ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் 17, 20, 24, 27, 29, டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

தேர்தல் நடைபெற்ற நகராட்சிப் பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்டத் தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் லே பகுதியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு காஷ்மீரில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  அனந்தநாக், குல்காம், புல்வாமா, சோபியான் ஆகிய நான்கு மாவட்டங்களும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 20 நகராட்சிகளை பாஜக கைப்பற்றும் சூழல் உள்ளது.

சோபியான் நகராட்சியில் 12 வார்டகளிலும், தேவ்சர் நகராட்சியில் மொத்தமுள்ள 8 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குவாசியா காட் நகராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. பகல்காம் நகராட்சியில் 8 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது. 4 மாவட்டங்களிலும் காங்கிரஸ் 28 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

by Mani Bharathi   on 20 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.