|
|||||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !! |
|||||
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாட இன்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வைக்கிறார்.
அதன் பிறகு படம் பற்றிய திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இது பற்றி பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கையில், 1989ல் புதிய பாதை வெளியீட்டின்போது அனுபவித்த அதே பிரவச வேதனையை இந்த 2014 ஆகஸ்ட் 15லும் அனுபவித்தேன்.
என் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கொஞ்சம் வித்தியாசமானது என்று எனக்கு நானே ஒத்துக் கொண்ட படம். காரணம் கதைக்களம் இல்லாத கதையில் களமாட வேண்டியதாயிருந்தது. பலமான திரைக்கதையில் பரீட்சார்த்தமாய் செய்த எல்லா விஷயங்களும் இன்று எல்லோராலும் ரசிக்கப்படுவதில் ஆனந்த அதிர்ச்சியாகியுள்ளேன்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !!
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாட இன்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வைக்கிறார். அதன் பிறகு படம் பற்றிய திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இது பற்றி பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கையில், 1989ல் புதிய பாதை வெளியீட்டின்போது அனுபவித்த அதே பிரவச வேதனையை இந்த 2014 ஆகஸ்ட் 15லும் அனுபவித்தேன். என் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கொஞ்சம் வித்தியாசமானது என்று எனக்கு நானே ஒத்துக் கொண்ட படம். காரணம் கதைக்களம் இல்லாத கதையில் களமாட வேண்டியதாயிருந்தது. பலமான திரைக்கதையில் பரீட்சார்த்தமாய் செய்த எல்லா விஷயங்களும் இன்று எல்லோராலும் ரசிக்கப்படுவதில் ஆனந்த அதிர்ச்சியாகியுள்ளேன்.
திரைத்துறைக்கு முற்றிலும் புதிதான ஆனால் திரைக்கலையையும், என்னையும் நேசித்த ஒரு நல்ல தயாரிப்பராளரால் தான் இந்த வித்தியாசமான முயற்சி சாத்தியமானது. புதிதாக எடுக்கப்படும் ஒரு முயற்சியின் போது இது மக்களுக்கு புரியுமா, ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் படைப்பாளியின் முன் வைக்கப்படும் கேள்வி. அது அவனை சமரசம் செய்ய வைக்கும்.
என்மேல் ரசிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், அவர்கள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் பொய்ததில்லை. அரங்கங்களிலும் எழும் கைதட்டல்கள் அதை உறுதிப்படுத்தும்போது கலங்கி விட்டேன். என் கைகுட்டை கண்ணீர் குட்டையானது. ஒவ்வொரு ரசிகனையும் கட்டிப்பிடித்து நன்றி தெரிவிக்க ஆசை, அதனை உங்கள் மூலம் செய்கிறேன். இது 25 வருடங்கள் இதயத்தில் அடக்கி வைத்த ஆக்கபூர்வமான ஆதங்கம் என்று கூறியிருந்தார் பார்த்திபன்.
|
|||||
by Swathi on 21 Aug 2014 0 Comments | |||||
Tags: Parthiban Movie Success Party பார்த்திபன் விருந்து | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|