|
||||||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !! |
||||||
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம். மக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது முதல் படம் புதிய பாதை ரிலீஸ் ஆனபோது சபரிமலைக்கு சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று பாரத்தை அவன் மீது போட்டுவிட்டேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை நம்பிக்கையுடன் நடைபோட வைத்தது.
இடைப்பட்ட காலத்தில் கதை, கருத்து, மெசேஜ் என்று படங்கள் தந்தேன். அது வெற்றி தரவில்லை. பார்த்திபன் என்றால் வித்தியாசமாக செய்வார் என்ற பெயர் இருக்கிறது. பொங்கல் தினத்தில் நீங்கள் கொடுத்தனுப்பிய பொங்கல் வித்தியாசமாக இருந்தது, பிறந்த நாளுக்கு அளித்த கிப்ட் வித்தியாசமாக இருந்தது என்றுதான் சொன்னார்களே தவிர என் படத்தைபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.
அந்த வேகம்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க தூண்டியது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற என் புதிய படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைத்திருக்கிறது.
இப்படித்தான் உங்கள் படத்தை எதிர்ப்பார்க்கிறோம் என்கிறார்கள். அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. அது இப்படத்தின் 2ம் பாகமாக இருக்கும். என்ன கதை என்று கேட்காதீர்கள். இதுவும் கதையே இல்லாத படம்தான் என்று கூறியுள்ளார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம். மக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,
எனது முதல் படம் புதிய பாதை ரிலீஸ் ஆனபோது சபரிமலைக்கு சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று பாரத்தை அவன் மீது போட்டுவிட்டேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை நம்பிக்கையுடன் நடைபோட வைத்தது. இடைப்பட்ட காலத்தில் கதை, கருத்து, மெசேஜ் என்று படங்கள் தந்தேன். அது வெற்றி தரவில்லை. பார்த்திபன் என்றால் வித்தியாசமாக செய்வார் என்ற பெயர் இருக்கிறது. பொங்கல் தினத்தில் நீங்கள் கொடுத்தனுப்பிய பொங்கல் வித்தியாசமாக இருந்தது, பிறந்த நாளுக்கு அளித்த கிப்ட் வித்தியாசமாக இருந்தது என்றுதான் சொன்னார்களே தவிர என் படத்தைபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த வேகம்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க தூண்டியது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற என் புதிய படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைத்திருக்கிறது. இப்படித்தான் உங்கள் படத்தை எதிர்ப்பார்க்கிறோம் என்கிறார்கள். அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. அது இப்படத்தின் 2ம் பாகமாக இருக்கும். என்ன கதை என்று கேட்காதீர்கள். இதுவும் கதையே இல்லாத படம்தான் என்று கூறியுள்ளார்.
|
||||||
by Swathi on 20 Aug 2014 0 Comments | ||||||
Tags: KTVI Part 2 Kathai Thiraikathai Vasanam Iyakkam Part 2 கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|