LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம். மக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில், எனது முதல் படம் புதிய பாதை ரிலீஸ் ஆனபோது சபரிமலைக்கு சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று பாரத்தை அவன் மீது போட்டுவிட்டேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை நம்பிக்கையுடன் நடைபோட வைத்தது.

 

இடைப்பட்ட காலத்தில் கதை, கருத்து, மெசேஜ் என்று படங்கள் தந்தேன். அது வெற்றி தரவில்லை. பார்த்திபன் என்றால் வித்தியாசமாக செய்வார் என்ற பெயர் இருக்கிறது. பொங்கல் தினத்தில் நீங்கள் கொடுத்தனுப்பிய பொங்கல் வித்தியாசமாக இருந்தது, பிறந்த நாளுக்கு அளித்த கிப்ட் வித்தியாசமாக இருந்தது என்றுதான் சொன்னார்களே தவிர என் படத்தைபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

 

அந்த வேகம்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க தூண்டியது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற என் புதிய படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைத்திருக்கிறது.

 

இப்படித்தான் உங்கள் படத்தை எதிர்ப்பார்க்கிறோம் என்கிறார்கள். அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. அது இப்படத்தின் 2ம் பாகமாக இருக்கும். என்ன கதை என்று கேட்காதீர்கள். இதுவும் கதையே இல்லாத படம்தான் என்று கூறியுள்ளார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம். மக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், 
எனது முதல் படம் புதிய பாதை ரிலீஸ் ஆனபோது சபரிமலைக்கு சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று பாரத்தை அவன் மீது போட்டுவிட்டேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை நம்பிக்கையுடன் நடைபோட வைத்தது. இடைப்பட்ட காலத்தில் கதை, கருத்து, மெசேஜ் என்று படங்கள் தந்தேன். அது வெற்றி தரவில்லை. பார்த்திபன் என்றால் வித்தியாசமாக செய்வார் என்ற பெயர் இருக்கிறது. பொங்கல் தினத்தில் நீங்கள் கொடுத்தனுப்பிய பொங்கல் வித்தியாசமாக இருந்தது, பிறந்த நாளுக்கு அளித்த கிப்ட் வித்தியாசமாக இருந்தது என்றுதான் சொன்னார்களே தவிர என் படத்தைபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த வேகம்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க தூண்டியது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற என் புதிய படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைத்திருக்கிறது. இப்படித்தான் உங்கள் படத்தை எதிர்ப்பார்க்கிறோம் என்கிறார்கள். அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. அது இப்படத்தின் 2ம் பாகமாக இருக்கும். என்ன கதை என்று கேட்காதீர்கள். இதுவும் கதையே இல்லாத படம்தான் என்று கூறியுள்ளார்.
by Swathi   on 20 Aug 2014  0 Comments
Tags: KTVI Part 2   Kathai Thiraikathai Vasanam Iyakkam Part 2   கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2              
 தொடர்புடையவை-Related Articles
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.