LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கதர் உடை அணியாமல் விருந்து இல்லை

ஒருநாள் ஆளுநர் மாளிகை விருந்திற்காக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் டி . பி . ஏழுமலை மற்றும் அமைச்சர் கக்கன் இருவரும் கிளம்பினர் . வீட்டுப் படிகளில் ஆவலுடன் நின்ற கக்கனின் பிள்ளைகளான காசிவிஸ்வநாதன் , சத்தியநாதன் ஆகியோர் முகங்களைக் கண்டு அப்பிள்ளைகளையும் கக்கனின் தம்பி விஸ்வநாதனையும் கக்கன் விருந்திற்கு அழைத்தார் . அனைவரும் ஆர்வமுடன் ஆளுநர் மாளிகை விருந்திற்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்தார்கள் . பிள்ளைகளையும் தம்பியையும் தம்முடன் வர அனுமதித்த கக்கன் ஆளுநர் மாளிகையை நெருங்கியதும் பிள்ளைகளின் உடையைக் கவனித்தார் . ‘ கதர்ச்சட்டை போடாமல் ஆளுநர் மாளிகைக்குப் போகலாமா ?’ என்று தமக்குத் தாமே கேட்டுக் கதராடை அணியாததால் அவர் கொண்ட கோபத்தைச் சொற்களால் பிள்ளைகளிடம் காட்டினார் . உடனே மகிழுந்தையும் நிறுத்தச் சொன்னார் . தம் மகன்கள் இருவர் மற்றும் தம் தம்பி விஸ்வநாதன் மூவரையும் ஆளுநர் மாளிகையின் முகப்பில் இறக்கி விட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பேருந்தில் வீட்டிற்குப் போகும்படி தம்பி விஸ்வநாதனைப் பணித்தார் . பிள்ளைகள் இருவரும் அழத் தொடங்கினர் . உடன் இருந்த டி . பி ஏழுமலை சமாதானம் சொல்லியும் கக்கன் சமாதானம் அடையவில்லை . ‘ கதர்ச்சட்டை அணியாமல் , என்னுடன் வரலாமா ? அதுவும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லலாமா ?’ என்று கூறும்போதே மகிழுந்து நகர்ந்தது . ஆசையாக விருந்துண்ண வந்த குழந்தைகள் அழுத கண்ணீரோடு வீடு திரும்பினர் . அத்துணை அளவிற்குக் கதராடை அணிவதைத் தமது வாழ்க்கையோடு வாழ்க்கையாகக் கொண்டு நடந்தார் . பிறரும் அவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார் . ‘ எளிமையே எனது வாழ்க்கை’ என்று மக்களுக்கு நடந்து காட்டிய காந்தியடிகளின் வாழ்க்கை நடைமுறையில் கக்கன் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் . வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து காட்டினார் . இதை எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘யோசிக்கும் வேளையில்’ என்ற நூலிலிருந்து ‘அரைபிளேடும் அமைச்சரும்‘ என்ற தலைப்பில் குமுதம் வார இதழ் வெளியிட்ட துணுக்குச் செய்தி நமக்கு உறுதி செய்கிறது . இதோ அச்செய்தி …

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.