முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம். திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தினால் வசூலில் சாதனை படத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி கத்தி திரைப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
தீபாவளி அன்று வெளியான கத்தி படம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் 23 கோடியே 80 லட்சத்தை வசூலித்ததாகவும், அதாவது இந்தியாவில் 16 கோடியே 45 லட்சமும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்சமும் வசூலானதாகவும் கூறுகிறார். அந்த வகையில், தென்னிந்திய அளவில் இதுவரை எந்த படங்களும் இந்த அளவுக்கு முதல்நாளில் வசூலித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த பட பட்டியலில் ரஜினியின் எந்திரன்தான் முதலிடத்தில் இருந்தது. அதையடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இடம்பிடித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இரண்டு படங்களையும் பின்தள்ளிவிட்டு விஜயின் கத்தி திரைப்படம் முதலிடத்துக்கு சென்றுள்ளதாம்.
|