LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

கத்தரி வெருளி

1
கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று
காவல் புரிகின்ற சேவகா – நன்று
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் - உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறுயார்?

2
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா – என்றும்
காவல் புரிகின்ற சேவகா
எண்ணி உன்னைப் போல் இரவு பகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

3
வட்டமான பெரும் பூசினிக் காய் போல்
மஞ்சள் நிற உறுமாலைப்பார் - தலையில்
மஞ்சள் நிற உறுமாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார் - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

4
தொட்டு முறுக்காத மீசையைப்பார் - கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார் - கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார் - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

5
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையும் கண்டதோ? – உன்றன்
பொல்லாத பார்வையும் கண்டதோ?
வாட்ட மில்லாப் பயிர் மேய வந்த பசு
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே – வெடி
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே

6
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக் கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந் தோடுமே
நள்ளிரவில் வருகள் வனுனைக் கண்டு
நடு நடுங்கி மனம் வாடுமே – ஏங்கி
நடு நடுங்கி மனம் வாடுமே

7
ஏழைக் கமக்காரன் வேலைக் குதவி செய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப் போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன் னுண்மையே – போலி
ஆவதறிந்தன் னுண்மையே

8
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்த தென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

9
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதை போல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டு காண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்று நான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்று நான்.

by Swathi   on 05 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.