LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

காற்றில் பூக்கும் இதயங்கள்.. - வித்யாசாகர்

னக்கும்

எனக்கும்
இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட
தூரமே உண்டு

கடலின் ஆழம் தூரம்
ஜாதி
மண்ணாங்கட்டி பற்றியெல்லாம்
நமக்கு கவலையே இல்லை

சாதி என்ன
மண்ணாங்கட்டியா என்பர்
சிலர்;

உடம்பு கீறி
உனக்கும் எனக்கும் வரும் ரத்தம்
வேறு வேறல்ல
என்றுப் புரியாத மனிதர்க்கு
வலிக்கும் நம்முன்
பிரிக்குமந்த சாதி
மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான்

நமக்கெதற்கு அதலாம்
நமக்கு சாதி தெரியாது
காதல் தான் தெரியும்,
முதலில் சேர்ந்த இரண்டு
ஆதிமனிதரைப்போல் நேசத்தின் உச்சியில்
நெஞ்சேறி அமர்ந்திருக்கும்
நமக்கெல்லாம்
நெற்றிப் பொட்டில் சுட்டாலும்
காதல் தீராது

நேரே போகும்
இருவரில்
ஒருவர் மேல்
மற்றொருவர் கீழென்றுச் சொல்லும்
சாதி பெருசு எனில்
சொல்பவரை
தீ மென்று போடட்டும் – நீ போ

நீ போனால்
நான் வருவேன்
நான் போனால்
நீ வருவாய்..

முன்னும்பின்னுமாய்
இருவரும்
சேர்ந்தேயிருப்போம்..

தோட்டத்து மலர்களைப்போல
மனதால்
பூத்துக் கிடப்போம்..

நமக்கு போகும் தெருவெல்லாம்
நிலா காயும்
சூரியன் குளிரும்

காதல் ஒரு
பெருங் காற்றோடு தான்
இதயத்தில் வீசுகிறதென்று நாம்
பேசி பேசி
சேர்த்துவைப்போம்

மரம் பூ இலைகளைப்
போல
உடலுரசி உரசி
மனதின் ஆழத்தில்
உன்னையும்
என்னையும் புதைப்போம்..

மண் தோண்டி உள்மூடிய
மரத்தின் வேரினைப்போல
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
போகுமிடமோ திசையோ
அறியாது
உயிரூன்றி இருப்பதை
வெளியில் பறக்கும் பட்டாம்பூச்சியோ
சிட்டுக்குருவியோ
அறிந்திருக்காது

உனக்கும் எனக்கும்
மட்டுமே தெரியும்
நீ பிரிந்தாலும்
நான் பிரிந்தாலும்
நாமிருவருமே இறந்துபோவோமென்று!!


- வித்யாசாகர் 

by Swathi   on 28 Feb 2015  0 Comments
Tags: இதயம் கவிதை   காற்று கவிதை   காதல் கவிதைகள்   வித்யாசாகர் கவிதைகள்   Idhayam Kavithaigal   Vidyasagar kavithaigal   Kadhal Kavithaigal  
 தொடர்புடையவை-Related Articles
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்! குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்!
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர் வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.