LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

கட்டிடம் கட்டடம் - எது சரி ?

ஊடகங்களில் கட்டடம் என்ற சொல் சொல்லிவைத்தாற்போல் புழங்குவதைக் காண்கிறோம். இதுநாள்வரை கட்டிடம் என்றே எழுதியும் அறிந்தும் வந்தவர்கள் நாம். இரண்டில் எது சரி என்று ஆராய்வோம்.

கட்டு + இடம் = கட்டிடம்
கட்டு + அடம் = கட்டடம்

கட்டிய இடம், கட்டுகின்ற இடம், கட்டும் இடம் ஆகிய முக்காலப் பொருள்களில் பயிலும் வினைத்தொகைதான் கட்டிடம் என்பது தெளிவாகிறது. அதாவது கட்டுமானத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், நிலம், மனைதான் கட்டிடம் என்ற பொருளைத் தருகிறது. பிறகு, மனையின்மீது எழுப்பப்பட்ட கட்டுமானத்தையும் அதுவே சுட்டி நின்றது. இந்த வழக்குநிலையைப் பிழையெனக் கருதத் தேவையில்லை. எனினும் கனியிருப்பக் காய்கவர்கின்றோமா என்று பார்க்க வேண்டும்.

ஒன்றின்மீது ஒன்றாக வைத்துக் கட்டி அடுக்குவது கட்டடம் எனப்படுகிறது. புத்தகத்தை அட்டையிட்டு இறுக்கித் தைத்துக் கட்டுவது புத்தகக் கட்டடம் (Book Binding) எனப்படுகிறது. குழந்தை ஒன்றையே மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கேட்கிறது, செய்கிறது என்றால் அதை ‘அடம் பிடிக்கிறது’ என்கிறோம். ஒன்றை ஒன்றின்மீது ஒன்றாக ஒரே மாதிரி அடுக்கிக் கட்டுவதுதான் கட்டுமானச் செயல். அதனால் கட்டடம் என்பதே மிகப் பொருத்தமான சொல். ஒன்றின்மீது ஒன்றாக மீண்டும் மீண்டும் ஒற்றியெடுத்தலை ‘ஒற்றடம்’ என்கிறோமே அதுபோல.

எங்கள் பகுதியிலுள்ள பல்லடம், குண்டடம், உக்கடம் ஆகிய ஊர்ப்பெயர்களின் பொருளை இதனடிப்படையில் விளக்க முடியுமா என்று யோசித்தேன். பல் என்பதற்குத் தந்தம் என்ற பொருள் வழங்குவதால் அக்காலத்தில் யானைகள் மிகுந்து திரிந்த இடமாகப் பல்லடம் இருந்திருக்க வேண்டும். குண்டடம் பகுதியில் இன்றும் சிறுசிறு குன்றுகள் நிறையவே காணப்படுகின்றன. அதனால் குன்றடம் என்பது மருவி குண்டடம் ஆகியிருக்கலாம். உக்கம் என்றால் பசு, கோழி என்றும் பொருள்படும். ஆநிரைகள் மிகுந்து மேய்ந்ததால் உக்கடம் ஆயிற்றா என்றும் யோசிக்கிறேன்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.