இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் முருகக் கடவுளுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்களால் சுமக்கப்படுவது காவடி எனப்படும், முறைப்படி அழகாக அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும்.இவ்வகை காவடிகளை, இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், தமது பக்தியினை வெளிப்படுத்தும் முகமாக பயன்படுத்தப்படுகின்றனர். காவடியில் இருவகை உள்ளன. அவற்றுள் தூக்குக்காவடி எனப்படுவது, முற்கம்பிகளினை, ஒருவரின் முதுகுத் தோலில் குத்தி யெடுத்து, பின் வண்டியொன்றின் மீது ஏற்றி, அவரைச் சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும். பாற்காவடி இளம்வயதினரிலிருந்து, பெரியவர்வரை அனைவராலும் அதிகமாக ஆடப்படுகின்றது.
காவடியின் வகைகள் :
மச்சக் காவடி சர்ப்பக் காவடி பறவைக் காவடி பால் காவடி பன்னீர்க் காவடி
|