|
|||||||||||||||||||||
கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா? |
|||||||||||||||||||||
கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா?
1).இன்னா நாற்பது 2).இனியவை நாற்பது 3).கார் நாற்பது 4).களவழி நாற்பது
1) இன்னா நாற்பது – பாடல் மூன்று ``கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா; நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா; கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, தடுமாறி வாழ்தல் உயிர்க்கு’’ விளக்கம்: 2) இனியவை நாற்பது – பாடல் ஒன்று பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே; நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே; முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே, தெற்றவும் மேலாயார்ச் சேர்வு’’ விளக்கம்: 3) கார் நாற்பது – பாடல் ஒன்று
விளக்கம்: கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? 4) களவழி நாற்பது – பாடல் மூன்று "ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார், இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து.’’ விளக்கம்: இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள். |
|||||||||||||||||||||
by varun on 30 Jul 2016 0 Comments | |||||||||||||||||||||
Tags: Keelkanakku கீழ்க்கணக்கு நூல்நாற்பது Noolnatpathu | |||||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|