LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

கீர்த்தித் திரு அகவல்

 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி 
மண்ணும் விண்ணும் வானோர் உலகும் 
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 
என்னுடை இருளை ஏறத்துரந்தும் 
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் 
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் 
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 
கல்லா டத்துக் கலந்து இனிது அருளி 
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் 
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் 
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் 
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 
விராவு கொங்கை நல்தடம் படிந்தும் 
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் 
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து 
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20 
நந்தம் பாடியில் நான் மறையோனாய் 
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் 
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் 
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி 
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் 
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் 
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் 
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் 
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் 
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் 
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி 
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் 
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35 
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் 
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி 
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று 
ஈண்டு கனகம் இசையப் பெறா அது 
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி 
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் 
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து 
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப் 
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் 
உத்தர கோச மங்கையுள் இருந்து 
வித்தக வேடங் காட்டிய இயல்பும் 
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 
தூவண மேனி காட்டிய தொன்மையும் 
வாத வூரினில் வந்து இனிது அருளிப் 
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் 
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக் 
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55 
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் 
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் 
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் 
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60 
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் 
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு 
அட்ட மாசித்தி அருளிய அதுவும் 
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு 
காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65 
மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு 
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் 
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி 
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் 
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் 
கோவார் கோலம் கொண்ட கொள்கையும் 
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் 
ஞானம் தன்னை நல்கிய நன்மையும் 
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75 
படிமப் பாதம் வைத்த அப்பரிசும் 
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து 
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் 
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து 
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் 
பாவகம் பலபல காட்டிய பரிசும் 
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் 
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் 
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85 
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் 
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் 
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் 
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90 
குற்றாலத்துக் குறியாய் இருந்தும் 
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து 
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு 
இந்திர ஞாலம் போலவந்து அருளி 
எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95 
தானே ஆகிய தயாபரன் எம் இறை 
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி 
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் 
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் 
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் 
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு 
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் 
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 
ஆனந் தம்மே ஆறா அருளியும் 
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் 
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் 
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் 
தூய மேனிச் சுடர்விடு சோதி 
காதலன் ஆகிக் கழுநீர் மாலை 
ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் 
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் 
மீண்டு வாராவழி அருள் புரிபவன் 
பாண்டி நாடே பழம்பதி ஆகவும் 
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் 
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120 
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய 
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் 
இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி 
அருளிய பெருமை அருள்மலை யாகவும் 
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125 
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி 
நாயினேனை நலம்மலி தில்லையுள் 
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன 
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி 
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 
எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 
மாலது வாகி மயக்கம் எய்தியும் 
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் 
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135 
நாத நாத என்று அழுது அரற்றி 
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற 
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் 
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் 
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை 
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் 
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145 
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே 

 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 

எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி 

மண்ணும் விண்ணும் வானோர் உலகும் 

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 

 

என்னுடை இருளை ஏறத்துரந்தும் 

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் 

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் 

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 

 

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி 

நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் 

பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் 

எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் 

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 

 

விராவு கொங்கை நல்தடம் படிந்தும் 

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் 

மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து 

உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20 

 

நந்தம் பாடியில் நான் மறையோனாய் 

அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் 

வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் 

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி 

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 

 

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் 

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் 

சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் 

வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் 

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 

 

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் 

வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் 

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி 

சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் 

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35 

 

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் 

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி 

பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று 

ஈண்டு கனகம் இசையப் பெறா அது 

ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 

 

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி 

இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் 

மதுரைப் பெருநல் மாநகர் இருந்து 

குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 

 

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப் 

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் 

உத்தர கோச மங்கையுள் இருந்து 

வித்தக வேடங் காட்டிய இயல்பும் 

பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 

 

தூவண மேனி காட்டிய தொன்மையும் 

வாத வூரினில் வந்து இனிது அருளிப் 

பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் 

திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக் 

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55 

 

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் 

பாவம் நாசம் ஆக்கிய பரிசும் 

தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 

நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் 

விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60 

 

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் 

பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு 

அட்ட மாசித்தி அருளிய அதுவும் 

வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு 

காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65 

 

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு 

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் 

ஓரி ஊரில் உகந்து இனிது அருளி 

பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் 

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 

 

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் 

கோவார் கோலம் கொண்ட கொள்கையும் 

தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் 

ஞானம் தன்னை நல்கிய நன்மையும் 

இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75 

 

படிமப் பாதம் வைத்த அப்பரிசும் 

ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து 

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் 

திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து 

மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 

 

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் 

பாவகம் பலபல காட்டிய பரிசும் 

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் 

ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் 

ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85 

 

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் 

திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் 

கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 

கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் 

புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90 

 

குற்றாலத்துக் குறியாய் இருந்தும் 

அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து 

சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு 

இந்திர ஞாலம் போலவந்து அருளி 

எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95 

 

தானே ஆகிய தயாபரன் எம் இறை 

சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி 

அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் 

சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் 

மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 

 

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 

எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் 

ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு 

நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் 

ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 

 

ஆனந் தம்மே ஆறா அருளியும் 

மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் 

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் 

கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 

 

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் 

தூய மேனிச் சுடர்விடு சோதி 

காதலன் ஆகிக் கழுநீர் மாலை 

ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் 

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 

 

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் 

மீண்டு வாராவழி அருள் புரிபவன் 

பாண்டி நாடே பழம்பதி ஆகவும் 

பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் 

உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120 

 

ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய 

தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் 

இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி 

அருளிய பெருமை அருள்மலை யாகவும் 

எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125 

 

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி 

நாயினேனை நலம்மலி தில்லையுள் 

கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன 

ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி 

அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 

 

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 

எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 

மாலது வாகி மயக்கம் எய்தியும் 

பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் 

கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135 

 

நாத நாத என்று அழுது அரற்றி 

பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 

பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற 

இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் 

எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 

 

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் 

கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 

அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை 

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் 

பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145 

ஒலிதரு கைலை உயர்கிழ வோனே 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.