கீழடி அகழ்வாய்வு தமிழகத்தில் நடைபெறும் அகழாய்விலேயே மிக முக்கியமானது. 2300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிந்து வெளி நாகரீகம் போல் நகரம் இருந்தது என்பதற்கான ஆதாரம். இந்த அகழ்வாராய்வு தொய்வாக செல்வதாகவும், மூடப்படவிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இந்த அராய்ச்சியினை முழுமையாக முதலில் இருந்து கடைசி வரை நடத்திய அகழ்வாராய்வு அதிகாரி திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அறிக்கை தாக்கல் செய்ய பல்வேறு முட்டுக்கட்டைகள் விழுந்துள்ளன. இது இந்திய அகழ்ராய்வு வரலாற்றில் நடந்திராத ஒன்று என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதை கையிலெடுத்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள ஆட்சி பணியாளர் அதிகாரி உதயசங்திரன் அவர்கள் தொல்பொருள் துரை அதிகாரியாக பணியேற்றுள்ளது ஒரு நம்பிக்கை தரும் செயல். அவரும் , சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்அவர்களும், துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களும் கீழடி அகழாராய்வு இடத்தை பார்வை இட்டு உள்ளனர். இனியாவது விடிவு காலம் கிடைக்கும் என்று நம்புவோம்.
-சுந்தரபாண்டியன் சபாபதி
|