சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியை சமீபத்தில் துவக்கியுள்ளார்.தனது கட்சி பற்றி அவர் கூறுகையில் காங்கிரசும், பா.ஜ.,வும், ஓட்டு வாகுவதற்காகவே மக்களை பயன்படுத்துகின்றன. மக்களைப் பற்றியும், மக்களின் நலனை பற்றியும் அவர்கள் கவலைப்படுவதே இல்லை. நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டது.ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை நிறைவேற்றுவதில் இந்த இரண்டு கட்சிகளும் மெத்தனம் காட்டுகின்றன.ஊழலை ஒழிக்கவும்,நாட்டு மக்கள் நலன் காக்கவும் நான் கட்சியை ஆரபித்திருக்கிறேன்.எனது கட்சியில் இளைஞர்கள் நிறுவன உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்கள் தரும் நிதியை மக்களுக்கும்,கட்சி பணிகளுக்கும் செலவழிக்க போவதாகவும், நிதி மற்றும் செலவு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடபோவதாகவும் அவர் தெரிவித்தார்,மேலும் அவர் தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
|