டெல்லி மாநில மக்களின் பிரச்னைகளை தீர்க்க, 10 நாட்களில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுபேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி போக்குவரத்துத் துறை மற்றும் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.
அப்போது, தொழிலாளர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், தாம் தற்போதுதான் பதவியேற்றுள்ளதாகவும், முறையான கட்டமைப்பை ஏற்படுத்த இன்னும் 10 நாட்கள் தேவைப்படும் என்றார். அதன் பின்னர், டெல்லி மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தமது நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
|