கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சோலார் தகடுகள் அமைத்துத் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த விவகாரத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலக உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று உம்மன் சாண்டி பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பின் காரணமாக கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாவட்ட எல்லை வரையே இயக்கப்படுகின்றன. மேலும் பல தமிழக பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக கேரள எல்லை பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றன.
|