2012 ம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு(ஐ.ஏ.எஸ்) முடிவுகளால் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர். இதில் கேரளாவைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 97 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் மாநில அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
|