LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி?

கேரள உணவுகள் பொதுவாக அருமையாக இருக்கும். அதிலும் மீன் மற்றும் புட்டு தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அங்கு காலை உணவாக செய்யப்படும் அப்பமும் மிகவும் பிரபலமானது. இதற்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். 


அத்தகைய அப்பத்தை கேரளாவில் போய் சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே கேரளாவில் சாப்பிடும் சுவைக்கு செய்யலாம். சரி, அது எப்படி என்று பார்ப்போமா!


தேவையான பொருட்கள்:


1. பச்சரிசி – 2 கப்


2. தேங்காய் . 1/2 கப் (துருவியது)


3. இளநீர் – 2


4. உப்பு – தேவையான அளவு


செய்முறை:


1. முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.


2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, பின் ஒரு கரண்டி அப்ப மாவு ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை எடுத்து, ஒரு முறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் மூடி, பின் அதனை எடுத்து பரிமாறவும்.


3. இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் அப்பம் ரெடி!!! இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

by Swathi   on 28 Nov 2014  2 Comments
Tags: அப்பம்   கேரளா ஸ்டைல் அப்பம்   Kerala Style Appam   Appam           
 தொடர்புடையவை-Related Articles
கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி? கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி?
வரகு கார அப்பம் வரகு கார அப்பம்
கருத்துகள்
30-Nov-2015 02:29:51 Riya said : Report Abuse
its very usefull for easy cooking
 
30-Nov-2015 02:26:52 Riya said : Report Abuse
Super website , its very usefull for easy cooking
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.