கேரளாவில் முழுக்கமுழுக்க பெண்களால் இயக்கக் கூடிய ஷீ டாக்ஸி என்னும் வாடகை கார் சேவை அடுத்த வாரம் துவங்கவுள்ளது.
ஷீ டாக்ஸி :
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே இல்லாத வகையில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய, பெண்கள் டாக்சி(ஷீ டாக்ஸி) சேவை, வரும் 19ம் தேதி துவக்கப்படுகிறது. மாநில அரசின் சார்பில் துவக்கப்படும் இந்தத் திட்டத்தில், டாக்ஸி ஓட்டும் பெண் ஓட்டுனர்களுக்கு, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக துவக்க விழாவின் போது 30 டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் அதை, 300 டாக்சிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் எளிதாக ஓட்டும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மாருதி கார்கள், இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும். மேலும் காரில், ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்யும் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை பொருத்தப்பட்டிருக்கும் என இந்த திட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
|