திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதில் கேரளாவை சேர்ந்த பல லட்ச கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். காலை 10:45 மணிக்கு, கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், மேல்சாந்தி ஹரீஷ் நம்பூதிரி தீ இட்டதும், கோவில் மணி அடிக்கப்பட்டது, உடனே பெண்கள் தங்களது அடுப்பில் தீமூட்டி பொங்கல் வைத்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்ததால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த பொங்கல் நிகழ்ச்சியில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது.
|