|
|||||
கெட்டி உருண்டை |
|||||
தேவையானவை : பச்சை பயறு - 2 கப் புழுங்கலரிசி - அரை கப் பொட்டு கடலை - அரை கப் தேங்காய் - அரை கப் வெல்லம் (பொடித்தது)- ஒன்றரைக் கப் ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன் சுக்குப் பொடி - கால் டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் வெறும் வாணலியில் அரிசியையும்,பச்சைப்பயறையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க நன்கு வறுத்தெடுக்கவும். 2.அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 3.பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும். 4.மிக்ஸியில் வறுத்த அரிசியையும்,பயறையும், சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். 5.கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும். 6.ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். 7.தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். 8.மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|