இலங்கை தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழக சட்ட பேரவையில் இலங்கை தமிழர்கள் நலனை காக்க, இலங்கையை ‘நட்பு நாடு’ என அழைக்கக்கூடாது, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது, தமிழர்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் ஆனால் இது ஒரு நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என அவர்கூறினார்.
|