2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனம் கிங்பிஷர். இது தொழில் நட்டத்தால் எட்டாயிரம் கோடி ரூபாய் கடனிற்கு ஆளானதோடு, பணியாளர்களுக்கும் மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருந்தது. இதனால் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தால் இதன் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தனக்கு வரவேண்டிய வெளிக்கடன் தொகையை வசூலிப்பதற்காக மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கக் கோரி ஆணையத்திடம் கிங்பிஷர் விண்ணப்பித்திருந்தது. ஆனால், ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட அனைத்து கடன்தொகைகளையும் மற்றும் பாக்கித் தொகைகளையும் செலுத்தினால் மட்டுமே அனுமதியை புதுப்பிக்க முடியும் என்று ஆணையம் கிங்பிஷரின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.
|