|
||||||||
அறிவின் எல்லை |
||||||||
நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் (Localising action) ; ஒரு பொருள் மீது தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலையிலே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கின்றோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும்போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்தச் சிறு இயக்கத்திலும் பயன்படும்.
இப்பொழுது ஒரு மாநிலத்தை (Province) ஆளக்கூடிய ஒரு பெரிய அதிகாரி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்கான திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதைக் கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும் நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விஷயம் கூட சிந்திக்க முடியும். அந்த இடத்திலே இருந்து சிந்திக்கக் கூடிய ஒரு எழுத்தர் (Clerk) அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய மனம், அறிவு இருக்கும். அதுபோல நம்முடைய செயலுக்கும், தன்மைக்கும், இந்தப் பண்பாட்டுக்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் (Localising action) ; ஒரு பொருள் மீது தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலையிலே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கின்றோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும்போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்தச் சிறு இயக்கத்திலும் பயன்படும்.
இப்பொழுது ஒரு மாநிலத்தை (Province) ஆளக்கூடிய ஒரு பெரிய அதிகாரி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்கான திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதைக் கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும் நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விஷயம் கூட சிந்திக்க முடியும். அந்த இடத்திலே இருந்து சிந்திக்கக் கூடிய ஒரு எழுத்தர் (Clerk) அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய மனம், அறிவு இருக்கும். அதுபோல நம்முடைய செயலுக்கும், தன்மைக்கும், இந்தப் பண்பாட்டுக்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
|
||||||||
by Swathi on 17 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|