கோச்சடையான் திரை படத்தின் ‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என்ற படல் காட்சி இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது, இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் கோச்சடையான். முதன்முறையாக ரஜினி, அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நாசர், ருக்மணி, ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் பட பாணியில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்படத்தில் தயாராகி வருகிறது. படத்தை ரஜினியின் பிறந்தா நாள் அன்று வெளியிட இருப்பதால் அதற்கான பணிகளை படக்குழு விரைவாக செய்து வருகிறது. இந்நிலையில் இன்று, கோச்சடையான் படத்தின் ஒரே ஒரு பாட்டை மட்டும் யூடுப் மூலமாக படக்குழு வெளியிட்டுள்ளது. ‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என ஆரம்பிக்கும் இப்பாடலை ரஜினியின் ஆஸ்தான பின்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
|