ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. பின்னர் ஆட்டத்தை துவக்கிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் பிஸ்லா 51, மோர்கன் 42, காலிஸ் 37 ரன்கள் எடுத்தனர்.
|